Translate

Friday, 20 July 2018

மங்கையர் தின வாழ்த்து!

ஏதும் தனக்கென எண்ணா பெருங்குணம்
வாழ்வு யாவும் பிறர்க்கென அர்ப்பணம்!

மெழுகென வாழ்ந்தே
உயர்வினை தந்தவள்!
எவ்வளவு உயர்ந்த ஆணையும்
பிறந்திட செய்தவள்!

ஒவ்வொரு உயிரிலும்
அன்னை தான்அவள்!
பெண் எனும் பெருந்தவ
புகழ்கொணர் பொக்கிஷம் ஆனவள்!

அன்னையாய், சகோதரியாய்,
தோழியாய், காதலியாய்,
மனைவியாய்
உருவகம் பெறுபவள்!
எந்த நிலையிலும்
உன்னதம் ஆனவள்!

நேரடி இறைவனாய்
நித்தமும் காட்சிதரும்
அன்பின் 'இறைவி' அவள்!

அடிமைபட்டே கிடந்திட்ட உயிராய் ஒதுங்கி சாகாது
திமிரி எழுந்து உயர பறக்கும் சுதந்திர பெருங்கொடி அவள்!

இனி எந்த தீமைக்கும்
பெருங்கொடியவள்!
ஆசிட் வீச்சு, ஆபாச பேச்சு,
அலுவலக சீண்டல் என
இனி எந்த தீமைக்கும்
பெருங்கொடியவள்!

எந்த ஆணுக்கும் குறைவிலா நிகர் அவள்!
அன்பெனும் 'அருவி'
இணையில்லா 'இறைவி' என
உலகம் போற்ற
பெண் எனும்
மாதவம் பெற்ற
மங்கையர் யாவர்க்கும்
பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!

1 comment: