இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
தீதின்றி தோன்றும் எண்ணம் யாவும்
அன்பை பேசியே உயிர்பெறட்டும்!
பேதமின்றி தோன்றும் சிரிப்பில் மழலை குணம் நிறைந்து
மனங்கள் உள் நுழைந்து
அக அழகை என்றுமே
முக அழகில் பறை சாற்றட்டும்!
புதிரென தோன்றும்
சிந்தனை கீற்றுகள்
மெய்தனை பிரித்தரிந்தே
வாழ்தனை சிறப்பிக்கட்டும்!
விழும் நிலம் பேதமின்றி பொழியும் முகிழென
இதயம் என்றும்
யாரென பிரிக்கா அன்பை உன்னில்
பிறப்பிக்கட்டும்!
அகிலென வீசும் மணம்
அகம் நிறைந்து
அறம் கொண்டே
வாழ்வில்
சிரம் உயர்த்தும் பெருமைகள்
வரும் வண்ணம்
வெற்றிகள் குவியட்டும்!
விழுது பரப்பி
நீண்டு வாழும் ஆலென,
என்றும் மகிழ் பரப்பி
நிறைந்து வாழ
மனம் நிறைந்த
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
#இளையபாரதி
தீதின்றி தோன்றும் எண்ணம் யாவும்
அன்பை பேசியே உயிர்பெறட்டும்!
பேதமின்றி தோன்றும் சிரிப்பில் மழலை குணம் நிறைந்து
மனங்கள் உள் நுழைந்து
அக அழகை என்றுமே
முக அழகில் பறை சாற்றட்டும்!
புதிரென தோன்றும்
சிந்தனை கீற்றுகள்
மெய்தனை பிரித்தரிந்தே
வாழ்தனை சிறப்பிக்கட்டும்!
விழும் நிலம் பேதமின்றி பொழியும் முகிழென
இதயம் என்றும்
யாரென பிரிக்கா அன்பை உன்னில்
பிறப்பிக்கட்டும்!
அகிலென வீசும் மணம்
அகம் நிறைந்து
அறம் கொண்டே
வாழ்வில்
சிரம் உயர்த்தும் பெருமைகள்
வரும் வண்ணம்
வெற்றிகள் குவியட்டும்!
விழுது பரப்பி
நீண்டு வாழும் ஆலென,
என்றும் மகிழ் பரப்பி
நிறைந்து வாழ
மனம் நிறைந்த
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
#இளையபாரதி
No comments:
Post a Comment