Translate

Saturday, 21 July 2018

பிரிவு

சில நேரம் உன்னை
பிரிந்தாலும் பெண்ணே
உயிர் போகுதடி...

சிறு தூரம் நீயும்
சென்றாளே_நெஞ்சில்
வலி என்னும் மின்னல்
தோன்றுதடி!

ஆகாயம் மட்டும்
அங்கேயே நிலவை
வைத்தால் தான் என்ன???

நீ என்ற நிலவை
எனக்காக தந்து
உயிர்மேலே ஊசி_குத்துதடி!

ஒரு பார்வை போதும்...
ஒரு வெட்கம் போதும்...
சிறு முத்தம் தந்தால்
போதும்...போதுமடி...
என் வாழ்வும் புனிதம் ஆகுமாடி!

எந்நாளும் நீயே_என்
தாயின் மடி!

#இளையபாரதி

No comments:

Post a Comment