Translate

Friday, 20 July 2018

சென்னையில் ஒரு காதல் மழை!

மழை பெய்த மாலை வேளையில்
சிலை போல வந்த வெண்ணிலா
சிறுதூறல் பட்ட போதெல்லாம்
சிலிர்க்கின்ற
மேனி பொன்நிலா...!
நம் காதல் வாழும் இடமெது
உந்தன் கண்ணிலா...!

நீ போகும் பாதை எங்குமே
வானம் வந்து பூக்கள் தூவிடும்
உன் அழகு பட்டுவிட்டால்
புள்ளி மானும் துள்ளி ஓடிடும்!

உயிரின் எடை எது
உணர்ந்து மிரள்கிறேன்
உன்னிடை மாட்டி தவிக்கிறேன்...!

கண்ணிடை காதல் பேசிடும்
பெண்ணே நீ சென்னை மழையா...!
மொத்தமாய் மூழ்கடிக்கிறாய்...
சத்தமாய் ஆர்ப்பறிக்கிறாய்...!

ஆனந்த குளியல் போட்டதாய்
மேனியில் நீயும்
மிதக்கிறாய்...!

நெடு நேரம் பெய்யும் மழையென
வெகுநேரம் காமம் தின்கிறாய்...!

சில நேரம் அடிக்கும் வெயிலென
சிறு முத்தம் தந்துதான்
சூடு தகிக்கிறாய்...

சாலை எங்குமே
தேங்கும் வெள்ளமாய்
காதல் உள்ளத்தில்
நீயும் நிரம்பினாய்...!

இப்போதும் தூங்கும் அரசென
கோபம் தொலைக்கிறாய்...!

எப்போதும் அள்ளல் பட்டிடும்
இந்த மக்களில்
என் இதயம் சேர்ந்ததோ?

நீ இல்லா சில நொடிகளும்
எனை சிதைக்கப்பார்க்குதே...!

சூடான மிளகா பச்சி
கடித்த நாக்கென
இதழ் பட்ட தேகம்
எங்குமே - காதல்
காரம் ஏற்றுதே...!

ஆகாகா...
இந்த மழையும்
இன்பம் பொழியுதே...
இன்னும் இன்னும்
வேண்டும் என்றுதான் இரவு நீளுதே...!
பகலும் மறைந்து போகுதே...!

#காதல்மழை
#கவியன்பன்
#கற்பனைகாதலி
#சென்னைசூழல்

No comments:

Post a Comment