அணையாத நெருப்பொன்று
ஆகாச வானில் பறந்து
அங்கொன்றும் இங்கொன்றும்
சிறுதுளிகள் வீசிச்சென்று
மொத்தமாய் விழுந்ததாம்
எண்ணெய் கிணற்றில்...!
வேடிக்கை நிகழ்வென
சிறுபிள்ளை போல
பின்சென்று பார்த்த
பொத்தாம் பொது கூட்டம்
திப்பென பற்றி எரிந்ததாம்
பெரு நெருப்பில்!
அடுப்பங்கரை தீப்பொறி தானென
அனைவரும் நினைத்திருக்க
அங்கோர் ஆள் நின்று
எறிந்ததை பார்த்தானாம்-ஒருத்தன்!
ஐயோ அம்மா என அலறிப்பதறி
சிதறி ஓடிவந்தவன்
கூறி முடிக்க
கதறி அழுதனராம்- அம்மக்கள்!
எறிந்தவன் ஊர் காவலனாம்...
அதை செய்ய சொன்னவன்
பண்ணையாராம்-வந்து
தந்தானாம்
தலைக்கு 10 படி அரிசி!
ஆகாச வானில் பறந்து
அங்கொன்றும் இங்கொன்றும்
சிறுதுளிகள் வீசிச்சென்று
மொத்தமாய் விழுந்ததாம்
எண்ணெய் கிணற்றில்...!
வேடிக்கை நிகழ்வென
சிறுபிள்ளை போல
பின்சென்று பார்த்த
பொத்தாம் பொது கூட்டம்
திப்பென பற்றி எரிந்ததாம்
பெரு நெருப்பில்!
அடுப்பங்கரை தீப்பொறி தானென
அனைவரும் நினைத்திருக்க
அங்கோர் ஆள் நின்று
எறிந்ததை பார்த்தானாம்-ஒருத்தன்!
ஐயோ அம்மா என அலறிப்பதறி
சிதறி ஓடிவந்தவன்
கூறி முடிக்க
கதறி அழுதனராம்- அம்மக்கள்!
எறிந்தவன் ஊர் காவலனாம்...
அதை செய்ய சொன்னவன்
பண்ணையாராம்-வந்து
தந்தானாம்
தலைக்கு 10 படி அரிசி!
No comments:
Post a Comment