தேடிக்களி கொள்வேன் என் தேவதை நீ எங்கென?
நாடித்துடிப்பெல்லாம் நர்த்தனம் செய்வதென்ன?
ஆடிக்களித்த பொழுதும்!
ஆசை கனவில் ஆயிரம் நிலாக்கள்!
அத்தனையும் தோற்றன
உன் அழகு மதிமுன்!
பாதி ஜாமத்தில் நீதிக்கதைகள்
நித்திரைதான் கொள்ளவேண்டும்!
மோதிக்கொள்வதோ
மோகன தேகங்கள்!
காற்று வெளியிடை
நேற்று பறந்திட்ட
காதல் குருவிகள்
பேசும் மொழியினில்
வீசும் பாசத்தில்
வெண் மதுரம்
சிந்தக்கண்டேன்!
ஆசைக்கண்மணியே
நாம்
பேசிக்களித்திட
வரும் மாலைப்பொழுதினில்
உன் மடி சாய்ந்து
காதல் முத்தங்கள் நான் தருவேன்!
மலரில் தேன்பறுக
வரும் மரகத வண்டென
உன் இதழில் தேன் குடித்து
உயிர்ப்பும் நான் பெறுவேன்!
காதலின் கதலே
கவியமுத தோன்றலே
நம் கரங்கள் கோர்த்திட்டு
நெடும் பயணம் நாம்செல்வோம்
#காதலுடன்
#காதலன்
#இளையபாரதி
நாடித்துடிப்பெல்லாம் நர்த்தனம் செய்வதென்ன?
ஆடிக்களித்த பொழுதும்!
ஆசை கனவில் ஆயிரம் நிலாக்கள்!
அத்தனையும் தோற்றன
உன் அழகு மதிமுன்!
பாதி ஜாமத்தில் நீதிக்கதைகள்
நித்திரைதான் கொள்ளவேண்டும்!
மோதிக்கொள்வதோ
மோகன தேகங்கள்!
காற்று வெளியிடை
நேற்று பறந்திட்ட
காதல் குருவிகள்
பேசும் மொழியினில்
வீசும் பாசத்தில்
வெண் மதுரம்
சிந்தக்கண்டேன்!
ஆசைக்கண்மணியே
நாம்
பேசிக்களித்திட
வரும் மாலைப்பொழுதினில்
உன் மடி சாய்ந்து
காதல் முத்தங்கள் நான் தருவேன்!
மலரில் தேன்பறுக
வரும் மரகத வண்டென
உன் இதழில் தேன் குடித்து
உயிர்ப்பும் நான் பெறுவேன்!
காதலின் கதலே
கவியமுத தோன்றலே
நம் கரங்கள் கோர்த்திட்டு
நெடும் பயணம் நாம்செல்வோம்
#காதலுடன்
#காதலன்
#இளையபாரதி
No comments:
Post a Comment