Translate

Friday, 20 July 2018

இருண்ட சனநாயகம்

குற்றவாளி கூண்டிலே
சட்டம் நின்று போனதே
நீதி கேட்க வேண்டுமா?இல்லை
நிதியும் பாய மௌனமா?

யார்தான் கொள்ளைப்பூனைக்கு
மணியை கட்டி வைப்பது!?

மன்னனவன் வார்த்தையை
வரியை மாற்றியும் கூறாமல்
தன் விசுவாச சேவகம் செய்திட்ட
நீதிபதி காட்டிலே
நிதியும் மழையாய் பெய்ததாம்!

பேய்கள் அரசு ஆண்டதால்
பிணங்கள் திங்கும் சாஸ்த்திரம்
ஊளை இட்டே ஊரிலே
உலவும் கொடுமை கேளிரோ?

ஏட்டில் மட்டும் நீதியை
எழுதி வைத்தால் போதுமா?
எங்கே போயி கேட்பதோ?
இருண்ட சனநாயக நாட்டிலே!?

No comments:

Post a Comment