Translate

Friday, 20 July 2018

காவேரி

செத்தே தொலைகிறாள்
நெடுங்காவேரி-நீங்கள்
விற்றே தீர்த்த பெரும் மணலால்!

அங்கே அடைத்தே
வைத்த பெருங்கோடுமை தாளாது
அவள் அழுது புலம்ப
வந்த கண்ணீரும்
புயல் மழையாய்
ஆணை நிரம்ப
நீண்ட நெடும் பாதை தான் கொண்ட காவேரி
கரை நிரம்பி வருகிறாள்
அன்னைத்தமிழ் மடிதேடி!

ஆனந்தம் பெரு நுரையாய் ஆர்ப்பறிக்க
அழகுமகள் வருகிறாள்.
அள்ளி அணைத்து அணைதனில்  தேக்கி நிலமகளோடு நீந்தி விளையாட ஒரு அணை உண்டோ அரச படுபாவியே!

No comments:

Post a Comment