முதல் சூரியஉதயம் கண்ட
தமிழனின் தலைப்பிள்ளை!
எரிதனலை எழுத்துக்களில்
படைத்திட்ட கவிப்புனலே – பாரதி!
கார்மேகம் கூடியும் மழை பொய்த்திருக்கலாம்!
உன் கரங்கள் தீட்டிய
கவிமழை பொய்க்கவில்லை!
இரும்புக்கரங்கள்
இன்னல்கள் தந்த போதும்
இடை நில்லா பாரதியே!
உன் முண்டாசு அவிழ்த்த
கவிதைகள் தான்
எத்தனை எத்தனை!
உணர்வுகளை உயிர் பெறச்செய்த உயிரெழுத்து – நீ!
இனி உதயமாகும்
எந்த ஒரு கவிஞனும் உன்
மெய்எழுத்தே- பாரதியே!
காணி நிலம் வேண்டி
நீ அழைத்த பராசக்தியும்
பாவமனிதர்கள் கைவசம் போனபோது
பெண்ணுரிமை பேசிய ஆண்மகனே!
ஆனந்த சுதந்திரம் அடைந்தோம் என்று
ஆரவாரம் செய்தவனே
கலைமகளின் கவிப்பிள்ளை – நீ!
உன் கண் விழித்த காட்சிகளை எல்லாம்
கவிதையாய் படைத்தவனே
என் ஒரு கவிதை உனக்காக!
உன் இனிய பிறந்தநாளில்!
#இளையாபாரதி!
தமிழனின் தலைப்பிள்ளை!
எரிதனலை எழுத்துக்களில்
படைத்திட்ட கவிப்புனலே – பாரதி!
கார்மேகம் கூடியும் மழை பொய்த்திருக்கலாம்!
உன் கரங்கள் தீட்டிய
கவிமழை பொய்க்கவில்லை!
இரும்புக்கரங்கள்
இன்னல்கள் தந்த போதும்
இடை நில்லா பாரதியே!
உன் முண்டாசு அவிழ்த்த
கவிதைகள் தான்
எத்தனை எத்தனை!
உணர்வுகளை உயிர் பெறச்செய்த உயிரெழுத்து – நீ!
இனி உதயமாகும்
எந்த ஒரு கவிஞனும் உன்
மெய்எழுத்தே- பாரதியே!
காணி நிலம் வேண்டி
நீ அழைத்த பராசக்தியும்
பாவமனிதர்கள் கைவசம் போனபோது
பெண்ணுரிமை பேசிய ஆண்மகனே!
ஆனந்த சுதந்திரம் அடைந்தோம் என்று
ஆரவாரம் செய்தவனே
கலைமகளின் கவிப்பிள்ளை – நீ!
உன் கண் விழித்த காட்சிகளை எல்லாம்
கவிதையாய் படைத்தவனே
என் ஒரு கவிதை உனக்காக!
உன் இனிய பிறந்தநாளில்!
#இளையாபாரதி!
No comments:
Post a Comment