மாலை நேர பேருந்து பயணம்
ஜன்னலோரம் அழகிய பெண்...
அப்போதே வடித்த கவிதை .........
அழகிய சிற்பம் அமர்ந்திருக்க
அவள் அருகினில் என் மூச்சு தவழ்ந்திருக்க
கிட்ட போகும் என் பார்வை
அங்கே எட்டிப்பார்க்கும் அவள் வியர்வை
பெண்ணின் வாசம் தருகிறதே!
என் ஜென்ம நேசம் நிறைகிறதே!
இதழ்கள் மோதும் அவள் விரல்கள்
வீணை மீட்கும் மென் சுவடு!
ஒர கண்கள் பார்ப்பதிலே
இந்த உலகம் மறந்ததை என் சொல்வேன்!
கண்ணில் மை தான் வைத்துவிட்டு
என் கண் இமை தின்ற உன் விழியிடம்
ஒவ்வொரு முறையும் தோற்கின்றேன்!
உதட்டுக்குள் ஏனடி போராட்டம்
அதில் வேண்டுமா எந்தன் நீரோட்டம்!?
காதலை களவு செய்துவிட்டு
என் மனதுக்குள் நிலவை வைத்து விட்டு
சென்றுவிட்ட பொழுதை தேடுகிறேன்!
அந்த தேடலிலும் உன் சுகம் – நாணுகிறேன்!
பல்சுவை விருந்தாய் நீ இருக்க
பால் சுவை அறிந்த மழலை போல்
தேன் சுவை தேடும் காதலை நான்
கண்டு வருகிறேன் உன்னிடத்தில்!
இத்தனை நாட்கள் எங்கிருந்தாய்!
இப்பொழுதே உணர்ந்தேன்
உன்னை காணவே என் பயணம் – பேருந்தில்!
ஜன்னலோரம் அழகிய பெண்...
அப்போதே வடித்த கவிதை .........
அழகிய சிற்பம் அமர்ந்திருக்க
அவள் அருகினில் என் மூச்சு தவழ்ந்திருக்க
கிட்ட போகும் என் பார்வை
அங்கே எட்டிப்பார்க்கும் அவள் வியர்வை
பெண்ணின் வாசம் தருகிறதே!
என் ஜென்ம நேசம் நிறைகிறதே!
இதழ்கள் மோதும் அவள் விரல்கள்
வீணை மீட்கும் மென் சுவடு!
ஒர கண்கள் பார்ப்பதிலே
இந்த உலகம் மறந்ததை என் சொல்வேன்!
கண்ணில் மை தான் வைத்துவிட்டு
என் கண் இமை தின்ற உன் விழியிடம்
ஒவ்வொரு முறையும் தோற்கின்றேன்!
உதட்டுக்குள் ஏனடி போராட்டம்
அதில் வேண்டுமா எந்தன் நீரோட்டம்!?
காதலை களவு செய்துவிட்டு
என் மனதுக்குள் நிலவை வைத்து விட்டு
சென்றுவிட்ட பொழுதை தேடுகிறேன்!
அந்த தேடலிலும் உன் சுகம் – நாணுகிறேன்!
பல்சுவை விருந்தாய் நீ இருக்க
பால் சுவை அறிந்த மழலை போல்
தேன் சுவை தேடும் காதலை நான்
கண்டு வருகிறேன் உன்னிடத்தில்!
இத்தனை நாட்கள் எங்கிருந்தாய்!
இப்பொழுதே உணர்ந்தேன்
உன்னை காணவே என் பயணம் – பேருந்தில்!
No comments:
Post a Comment