Translate

Friday, 20 July 2018

நாதியத்த சனம்!

நாடாண்ட சனமடா...
நாதியத்து கிடக்குது...
யார் யாரோ வந்து இங்கு
ஆள ஆசை துடிக்குது..
அப்பனும் ஆத்தாலும்
ஏமாந்து போனாங்க..

சாதி, மதமுன்னு பிரிச்சு வச்சு
சண்டையத்தான் வளர்த்து வச்சு
சதிகார கூட்டமொன்னு
அதிகாரம் பண்ணிடுச்சு...

அண்ணன் தம்பி உறவுளையும் அரசியல் கலந்துடுச்சு...
தண்ணிக்கும், காத்துக்கும்
காசுதற போறோமே

மண்ணையும் மலடாக்கி
விவசாயம் சாகுதடா...
மீதேனு வந்து இங்க
காவு வாங்க பாக்குதடா...

கத்தி கத்தி செத்தாலும்
அரசாங்கம் கண்டுக்கல்லை...
காச தந்து ஓட்டு வாங்கி
நாட்டை விக்க போராய்ங்க...!

No comments:

Post a Comment