உலகம் உனதாய் இருக்கும் வாடி பெண்ணே!
தடைகள் இனியும் உடையும் வாடி பெண்ணே!
நீ வந்தால் நதியாய் வருவாய்...
நீ வந்தால் நெருப்பாய் இருப்பாய்...
நீ வந்தால் நிலவும் வெல்வாய்...
வா.. வா.. பெண்ணே..வா!
இணையத்தில் இணைந்தும் இருப்பாய்!
தடையங்கள் வைத்தே வெல்வாய்!
மடமைகள் புதைத்தே வருவாய்!
பெண்மையின் புகழை உலகம் உணர்ந்தே இருக்கும்...
சிறை வைத்த கூட்டத்தை ஒழிப்பாய்!
பறை வைத்து வெற்றியை உரைப்பாய்!
தடை என்று எதுவும் இல்லை!
பெண்ணென்றால் அடிமை இல்லை!
ஆணுக்கு குறைவும் இல்லை!
வா... வா.. தீ முல்லை!
பூவைத்தான் நெருப்பில் வைக்க
இனி யாரும் துணிவது இல்லை
புயலைத்தான் புடவையில் மறைக்க
இது ஒன்றும் பழங்கதை இல்லை!
நெருப்பென்றே திமிறி எழுந்து
நெஞ்சத்தில் துணிவை விதைத்து
நீ எழுந்து வா...வா.. வா.. பெண்ணே!
தடைகள் இனியும் உடையும் வாடி பெண்ணே!
நீ வந்தால் நதியாய் வருவாய்...
நீ வந்தால் நெருப்பாய் இருப்பாய்...
நீ வந்தால் நிலவும் வெல்வாய்...
வா.. வா.. பெண்ணே..வா!
இணையத்தில் இணைந்தும் இருப்பாய்!
தடையங்கள் வைத்தே வெல்வாய்!
மடமைகள் புதைத்தே வருவாய்!
பெண்மையின் புகழை உலகம் உணர்ந்தே இருக்கும்...
சிறை வைத்த கூட்டத்தை ஒழிப்பாய்!
பறை வைத்து வெற்றியை உரைப்பாய்!
தடை என்று எதுவும் இல்லை!
பெண்ணென்றால் அடிமை இல்லை!
ஆணுக்கு குறைவும் இல்லை!
வா... வா.. தீ முல்லை!
பூவைத்தான் நெருப்பில் வைக்க
இனி யாரும் துணிவது இல்லை
புயலைத்தான் புடவையில் மறைக்க
இது ஒன்றும் பழங்கதை இல்லை!
நெருப்பென்றே திமிறி எழுந்து
நெஞ்சத்தில் துணிவை விதைத்து
நீ எழுந்து வா...வா.. வா.. பெண்ணே!
No comments:
Post a Comment