Translate

Saturday, 22 December 2018

நம்பிக்கை பயணம் கவிதை

கனவெல்லாம் நிஜமென்று
நடக்கும் நாள் எதுவோ!?
உழைப்பெல்லாம் பயனாக
கிடைக்கும் நாள் எதுவோ!?

உறங்காமல் விழித்தேதான்
இருக்கும் இலக்குகளே
உனை அடைந்தே தான்
தீரும் எந்தன் கனவுகளே!

கண்ணீரே கரைந்தாலும்
காயம் ஆரவில்லை!
செல்லும் பாதையெல்லாம்
முள்ளென்றாலும் பயணம் முடிவதில்லை!

தீராத பெரும்தாகம் கொண்டேதான்
நாட்கள் நடக்கிறதே!
ஓயாத உழைப்பேதான்
எந்தன் முதலீடே!

காயங்கள் பட்டாலும்
களைப்பென்றே வந்தாலும்
கால்கள் ஓய்வதில்லை!
பெரும் ஆழத்தில் புதைத்தாலும்
விதைகள் சாவதில்லை!

மீண்டும் மீண்டும் மோதிடும்
துணிவே என்றும் துணையாகும்!
துயரென்று வந்தாலும்
பயம் என்று ஏதுமில்லை!

வேரோடு சாய்ந்தாலும்
மரங்கள் சாவதில்லை!
சோர்வென்று அறியாத
தாழ்வென்று நினையாத
நம்பிக்கை தோற்பதில்லை!

இதோ இதோ என் வெற்றி!
அது எட்டும் தூரத்திலே!
இதோ இதோ என் வெற்றி!

#போராடு

No comments:

Post a Comment