Translate

Saturday, 15 December 2018

காதோரமா கதை சொல்லம்மா...கவிதை

காதோரமா கதை சொல்லம்மா
நீயாகவே எனை சேரம்மா
தானாகத்தான் வரும் காதலை
பேரின்பமாய் ஏற்போமே
என்னாளுமே உயிராகவே
இனி வாழ்வோமே!

உயிரே...உயிரின் உறவே...
இரவே..இரவின்...பனியே
பகல் போலவே ஒரு சூரியன்
இரவெல்லாமே இருந்தாலென்ன
நீயாகிய மறு நிலவினை
நான் கொண்டேனடி!

அழகே...அழகின் மொழியே
விழியே...விழியின் வழியே
உனை சேர்ந்திடும்
என் பிம்பத்தின்
உயிர் ஆகிய பெரும் தவமே!

கனவே கனவில் தோன்றும் உலகே
உன்னோடுதான் நான் வாழ்ந்திட
என்னோடுதான் நீ சேர்ந்திட
ஆகாககா ஆனந்தமே!
ஆயுள் எல்லாம் பூ வாசமே
வந்ததே தென்றலே நீயாகிறாய்!

#இளையபாரதி

No comments:

Post a Comment