அவளுக்கு...மழை என்றே பெயர்...!
பெரும் கடலின் துளித்துளி
பிம்பம் அவள்!
மின்னலை கட்டிக்கொண்ட
மேகத்தின் மகள் அவள்!
இடியென கோபமாய் கொந்தளிக்கும்
கணவனின் கண்ணீர்த்துளி அவள்!
காற்றை காதல் கொண்டே
மரங்களின் மோகம் கொண்டவள்!
தாகம் தீர்க்கும்
தடாகங்களை பிரசவிக்கும்
தாயுமானவள்...தயை செய்பவள்!
இரவு பகலுக்கும்
சிற்றுயுர் பேருயிருக்கும்
மேடு பள்ளத்துக்கும்
பேதங்கள் காட்டிடா
பெரும் கருணை அவள்!
மலை சிகரத்தில் விழுந்து
அடி நகரத்தில் நதியாய் நடந்து
கடலாய் கரைந்து போகிறாள்!
இதில் எத்தனை கவிஞனின்
கரங்களுக்கு கவிதையாகிறாள்!??
எத்தனை உயிர்களின்
உயிர்ப்பாய் இருக்கிறாள்!
ஓ! பெருமழை என்றே
வந்துவிட்டாள் இப்போதும் இங்கே!
வாடி! ராசாத்தி!
#இளையபாரதி
பெரும் கடலின் துளித்துளி
பிம்பம் அவள்!
மின்னலை கட்டிக்கொண்ட
மேகத்தின் மகள் அவள்!
இடியென கோபமாய் கொந்தளிக்கும்
கணவனின் கண்ணீர்த்துளி அவள்!
காற்றை காதல் கொண்டே
மரங்களின் மோகம் கொண்டவள்!
தாகம் தீர்க்கும்
தடாகங்களை பிரசவிக்கும்
தாயுமானவள்...தயை செய்பவள்!
இரவு பகலுக்கும்
சிற்றுயுர் பேருயிருக்கும்
மேடு பள்ளத்துக்கும்
பேதங்கள் காட்டிடா
பெரும் கருணை அவள்!
மலை சிகரத்தில் விழுந்து
அடி நகரத்தில் நதியாய் நடந்து
கடலாய் கரைந்து போகிறாள்!
இதில் எத்தனை கவிஞனின்
கரங்களுக்கு கவிதையாகிறாள்!??
எத்தனை உயிர்களின்
உயிர்ப்பாய் இருக்கிறாள்!
ஓ! பெருமழை என்றே
வந்துவிட்டாள் இப்போதும் இங்கே!
வாடி! ராசாத்தி!
#இளையபாரதி
No comments:
Post a Comment