Translate

Saturday, 15 December 2018

பேராண்மையை நீ கொண்டவா! கவிதை

பேராண்மையை நீ கொண்டவா!
தீராப்புகழ் தான் வெல்ல வா!
தோள் உயர்த்தியே சினம் காட்டி வா!
கண் அசைவிலே படை திரட்டி
பகை முடித்திடும் திரன் கொண்டு வா!

திசை எங்குமே புகழ் ஒலித்திட
பெரும் அன்பினை பறை சாற்றி வா!
பரண் ஏறியே திறன் காட்டிடும்
மறம் கொண்டே தான்
சிரம் நிமிர்த்திடும் பெருந்தகையே!

வா!..வா!..

வாள் சுழற்றிடும் களம் இறங்கியே
பகை அறுத்திடும் வீரா
வெற்றி வெற்றியாய்
குவித்து வைக்கும் நேரமே இது
எழுந்து வா!

#வீரம்

No comments:

Post a Comment