#தாய்மை!
ஓ! என் மகவே!
மனம் நிறைந்த உன் தந்தை
என் மடி நிரப்பினார்
பேரன்பு புதையலாய் உன்னை!
நீ கருவாய் உருவான நிமிடம்
ஈடில்லா இன்பத்தின் எல்லைகள்
கடந்து வந்தேன்!
என்னுயிரில் உன்னுயிரை
தாங்கும் பொழுதெல்லாம்
மண் மீது நடந்ததில்லை நான்!
மகிழ் வானில் அன்றோ பறந்தேன்!
தாய்மை பதவி தந்த
தனிப்பெரும் கருணையடா நீ!
புளிப்பு மாங்காய் தேடின
சுவை மொட்டுக்கள்!
எனக்கான பசி கடந்து
உனக்கான உணவுகள் உண்டேன்!
அடி வயிற்றில் கரம் வைத்தே
மெல்லிறகாய் வருடினேன்
நீ உலவும் உணர்வை பெற!
ஒரு புறமாய் படுத்தே
உன் உயிர் காத்தேன்!
உதைக்கும் உன் கால்கள்
தடம் காட்டும் நேரமெல்லாம்
கண் வியந்தே ரசித்தேன்!
எப்போதும் உன் தந்தையின்
கரம் கோர்த்தே இருக்க
ஏங்கிய நாட்களெல்லாம்
பெருந்துணை நீயடா!
அன்று...
கோடி மின்னல்கள் தாக்கியதாய்
தோன்றி மறையும் வலி வந்தே
எனை துடிக்கச் செய்தது!
மரணத்தின் வாசல் வரை
சென்று...சென்று..திரும்பி வந்தது- உயிர்!
யாரென்ற தெரியாத நபர்கள்...
நிர்வாணமாய் நான்!
இருண்டு போகும் கண்களின்
கடைசி காட்சி...உன் தந்தையையே
தேடி நின்றது!
இடுப்பு எலும்புகள்
சடக்கென்று உடைவதாய் உள்ளுணர்வு உணர்த்திக்கொண்டே இருக்க
கண்கள் மூடி....கரங்கள் மடித்து
வலிகள் கடந்தும் வேண்டிக்கொண்டேன்
இறைவனை...!
குவ்வா... குவ்வா... என்றே
அழுகை சத்தம்!
முதலாய் உன் அழுகை கண்டு
அகமகிழ்ந்து ஆனந்தம் கொண்டேனடா!
அத்தனை வலிகளும்
கண்ணீரென கரைந்து ஓடிட
தொப்புள் கொடி உறவே
நெஞ்சோடு அனைத்தேன் உன்னை!
மார் நிறைந்து
மனம் நிரம்பி வழியும் அமுதென அன்னையின் உயிர்த்துளி
தாய்ப்பாலாய் நீ அருந்திட
தாய்மையின் புனிதம் அடைந்தேன்
ஆருயிரே... என் அன்பு மகவே!
கோடி முத்தங்களடா...என் பெருநகையே!
#இளையபாரதி
ஓ! என் மகவே!
மனம் நிறைந்த உன் தந்தை
என் மடி நிரப்பினார்
பேரன்பு புதையலாய் உன்னை!
நீ கருவாய் உருவான நிமிடம்
ஈடில்லா இன்பத்தின் எல்லைகள்
கடந்து வந்தேன்!
என்னுயிரில் உன்னுயிரை
தாங்கும் பொழுதெல்லாம்
மண் மீது நடந்ததில்லை நான்!
மகிழ் வானில் அன்றோ பறந்தேன்!
தாய்மை பதவி தந்த
தனிப்பெரும் கருணையடா நீ!
புளிப்பு மாங்காய் தேடின
சுவை மொட்டுக்கள்!
எனக்கான பசி கடந்து
உனக்கான உணவுகள் உண்டேன்!
அடி வயிற்றில் கரம் வைத்தே
மெல்லிறகாய் வருடினேன்
நீ உலவும் உணர்வை பெற!
ஒரு புறமாய் படுத்தே
உன் உயிர் காத்தேன்!
உதைக்கும் உன் கால்கள்
தடம் காட்டும் நேரமெல்லாம்
கண் வியந்தே ரசித்தேன்!
எப்போதும் உன் தந்தையின்
கரம் கோர்த்தே இருக்க
ஏங்கிய நாட்களெல்லாம்
பெருந்துணை நீயடா!
அன்று...
கோடி மின்னல்கள் தாக்கியதாய்
தோன்றி மறையும் வலி வந்தே
எனை துடிக்கச் செய்தது!
மரணத்தின் வாசல் வரை
சென்று...சென்று..திரும்பி வந்தது- உயிர்!
யாரென்ற தெரியாத நபர்கள்...
நிர்வாணமாய் நான்!
இருண்டு போகும் கண்களின்
கடைசி காட்சி...உன் தந்தையையே
தேடி நின்றது!
இடுப்பு எலும்புகள்
சடக்கென்று உடைவதாய் உள்ளுணர்வு உணர்த்திக்கொண்டே இருக்க
கண்கள் மூடி....கரங்கள் மடித்து
வலிகள் கடந்தும் வேண்டிக்கொண்டேன்
இறைவனை...!
குவ்வா... குவ்வா... என்றே
அழுகை சத்தம்!
முதலாய் உன் அழுகை கண்டு
அகமகிழ்ந்து ஆனந்தம் கொண்டேனடா!
அத்தனை வலிகளும்
கண்ணீரென கரைந்து ஓடிட
தொப்புள் கொடி உறவே
நெஞ்சோடு அனைத்தேன் உன்னை!
மார் நிறைந்து
மனம் நிரம்பி வழியும் அமுதென அன்னையின் உயிர்த்துளி
தாய்ப்பாலாய் நீ அருந்திட
தாய்மையின் புனிதம் அடைந்தேன்
ஆருயிரே... என் அன்பு மகவே!
கோடி முத்தங்களடா...என் பெருநகையே!
#இளையபாரதி
No comments:
Post a Comment