Translate

Thursday, 27 December 2018

கல்லூரியின் மடியில் - அவளின் நான்

கல்லூரியின் மடியில்
நான் பிறந்திட்ட போது
நான் பேசிய முதல்பெண் அவள்!
தயக்கம் தானாகவே வந்திருந்தது!
அதுவரை என்னிடம்!

வாய் திறந்து கேட்டேன்
முதலாய் “பெயரை!”
இதழ் மலர்ந்து புன்னகைத்தாள்
பெயர் கூறி!
எட்டிய திசையில்
எழுமுனை நட்சத்திரமாய் “அவள் முகம்”!

கணிப்பொறியின் அறையில்
கவனமாய்ப்பேசின வார்த்தைகள்
அவளுடன் ஆவலுடன்!
உடன் கவிதையும் சிந்தினேன்
காந்தமாய் ஈர்த்துக்கொண்டாள்!

அதனால் தானோ அரும்புவிட்டன
எம் படைப்புகள் சிந்தையில்!
கவிதை பூத்த சிந்தை
காய்ந்தே இருந்தது
முள்மந்தையாய் அதுவரை!

கல்லூரியும் வகுப்பறையும்
வாய்விட்டுக்கேட்டன கவிதைகளை!
அதில் மழலை பிழை இருக்கலாம்!
தாயாய் ஏற்றனர் நண்பர்கள்!

அதனால்தான் சொல்கிறேன்!
அவள் எனக்குப்பிடித்தவள் என்று!
இவ்விடத்தில் காதல் இல்லை!
காலம் தீண்டும் நட்பு மட்டுமே !
ஆராதிக்கப்படுகிறது அவளுடன்!
அவள் என்றுமே எனக்குப்பிடித்தவள்!

No comments:

Post a Comment