இசையின் இணைதலுக்கு
காத்திருக்கும் மெலடி!
மழை பெஞ்சா மனசெல்லாம்
நனையாம குளிரும்!
நீ வந்தா உசுரெல்லாம்
உற்சாகம் பிறக்கும்!
அடியே அழகு களவானியே
கண்ணில் கனவெல்லாம்
வந்தாய் நீயே!
நிஜமாக நீதானே வந்தாய் பெண்ணே
நினைவெல்லாம் சுகமாக
நின்றாய் கண்ணே!
ஒரு நூறு ஜென்மம்
எடுத்தாலும் உன்னை
வரமாக கேட்பேன்
வாயாடிப்பெண்ணே !
அலைமோதும் கடல் தாண்டி
இருந்தாலும் உன்னை
அன்பாலே அடைகின்ற
திமிர் தானே என்னை
உந்தன் அருகே இணை சேர்க்கும்!
இல்லாத உலகங்கள்
இருந்தாலும் அங்கே
உன்னோடு நான் சென்று
வருவேனே பெண்ணே!
பனிதூவும் நிலமெல்லாம்
அனில் போல உன்னை
சுமந்தேதான் சுற்றி
வருவேனே பெண்ணே!
குளிர்க்காத்து வீசும் பொழுதெல்லாம்
எந்தன் மூச்சுக்காற்றாலே
உனக்கு இதம் என்றும் தருவேன்!
பதமான சொல்லெல்லாம் பூமாலையாக்கி
பொன்னான பெண்ணே
உனக்கென்று தருவேன்
கவிதை நிலவே!
#காதல்_மெலடி
காத்திருக்கும் மெலடி!
மழை பெஞ்சா மனசெல்லாம்
நனையாம குளிரும்!
நீ வந்தா உசுரெல்லாம்
உற்சாகம் பிறக்கும்!
அடியே அழகு களவானியே
கண்ணில் கனவெல்லாம்
வந்தாய் நீயே!
நிஜமாக நீதானே வந்தாய் பெண்ணே
நினைவெல்லாம் சுகமாக
நின்றாய் கண்ணே!
ஒரு நூறு ஜென்மம்
எடுத்தாலும் உன்னை
வரமாக கேட்பேன்
வாயாடிப்பெண்ணே !
அலைமோதும் கடல் தாண்டி
இருந்தாலும் உன்னை
அன்பாலே அடைகின்ற
திமிர் தானே என்னை
உந்தன் அருகே இணை சேர்க்கும்!
இல்லாத உலகங்கள்
இருந்தாலும் அங்கே
உன்னோடு நான் சென்று
வருவேனே பெண்ணே!
பனிதூவும் நிலமெல்லாம்
அனில் போல உன்னை
சுமந்தேதான் சுற்றி
வருவேனே பெண்ணே!
குளிர்க்காத்து வீசும் பொழுதெல்லாம்
எந்தன் மூச்சுக்காற்றாலே
உனக்கு இதம் என்றும் தருவேன்!
பதமான சொல்லெல்லாம் பூமாலையாக்கி
பொன்னான பெண்ணே
உனக்கென்று தருவேன்
கவிதை நிலவே!
#காதல்_மெலடி
No comments:
Post a Comment