Translate

Friday, 20 July 2018

உலவித்திறியலாம் பெண்ணே!

கவிதை ஒன்றுதான் காதல் பேசியே கடந்து போகுதே பெண்ணே...
இரவும் பகலென
இருந்த பொழுதுகள்
இன்னும் நீளுதே கண்ணே
உறவும் நீயென
உயிரும் நீயென உண்மை சொல்லிட வந்தேன்

கண்ணில் ஈரமாய்
உயிரின் ஓரமாய்
கிடந்து துடிக்கிறேன் இங்கே...
வானம் மீதிலே எறிப்போகிட
நிலவு ஒன்றிங்கு கண்டேன்

நீயும் நானுமாய்
நாமும் இங்குதான் பேசும் காதலை
நாளும் பொழுதெல்லாம்
கொண்டேன்

உதட்டு வார்த்தைகள் உள்ளம் மீதிலே மோதி திரும்பிட
உணர்வு வந்திங்கு
உயிரும் கொடுத்திட
நானும் திரும்பியே வந்தேன்

காதல் வந்திட்ட
இதயம் இனியுமே
பறந்து திரியுமே
நாமும் காதலின்
கரங்கள் பற்றியே
உலவி திறியலாம் பெண்ணே!

No comments:

Post a Comment