Translate

Friday, 20 July 2018

கவிதைப்பெண்ணே!

மெல்ல மெல்ல வந்து என்னில் கலந்த பெண்ணே...
இன்னும் இன்னும் உன்னை கொஞ்சும் போது நெஞ்சம்
புதிய புதிய இன்பம் அடைந்து மகிழவே
மறந்து போகிறேன் என்னை நானே!

பிறந்த குழந்தையென
நம்மை நினைத்து
வந்து கலந்த மகிழ்
துள்ளி எழுந்து
ஆட்டம் போடுதே!

அருகில் வந்தவளே
அணைத்து பிணைத்தவளே
மனதில் நிறைந்து
நித்தம் பூத்து குலுங்குகின்ற
பூந்தோட்டமே!

வெள்ளை பனியினிலே
முல்லை மலரென
அழகை தெளித்து செல்லும் அருவியே!

உதடும் உதடும் இனி உண்மை ஆகிவிட
கண்கள் பேசும் மொழி
கவிதை ஆனதே!

ஆயுள் முழுவதும் நீ
அடர்ந்து படர்ந்து விட
நித்தம் மலர்ந்து
நினைவில் கலந்தவளே
நீயும் நானும்
பாலும் தேனும் ஆகிறோம்!

No comments:

Post a Comment