அன்று அவள் பிறந்தநாள்...
இன்று அவள்
எனக்கானவளும் இல்லை...
சில வருடங்கள் நினைவில் கூட
அவள் வந்ததில்லை...!
அன்று அவள் பிறந்தநாள்...!
அன்றைய இரவில்
இனிய மனதில் ஆயிரம் பூக்கள் மலர்ந்ததாய் அவள் முகம் -கனவில்...!
திக்குமுக்காடி போனேன்
எப்படி இந்த அதிசயம் என்று...
வைகறை பொழுதிலேயே
வாழ்த்து அனுப்பி வைத்தேன்...
அன்று அவள் பிறந்தநாள்... என்பதால்!
காதல்
ஒருநாளும் நான் சொல்லியதில்லை...!
அறிந்திருந்தும்
அவள் கேட்டதுமில்லை...!
ஆயினும்
இதயத்தின் ஓரம்
நிரந்தரமாய் இருப்பிடம்
கொண்டுவிட்ட அவள்...
என்றும் இனியவள்... எனக்கு!
அவள்...
என் இத்தனை கவிதைகளின்
தாய்...
அவள்!
இன்று அவள்
எனக்கானவளும் இல்லை...
சில வருடங்கள் நினைவில் கூட
அவள் வந்ததில்லை...!
அன்று அவள் பிறந்தநாள்...!
அன்றைய இரவில்
இனிய மனதில் ஆயிரம் பூக்கள் மலர்ந்ததாய் அவள் முகம் -கனவில்...!
திக்குமுக்காடி போனேன்
எப்படி இந்த அதிசயம் என்று...
வைகறை பொழுதிலேயே
வாழ்த்து அனுப்பி வைத்தேன்...
அன்று அவள் பிறந்தநாள்... என்பதால்!
காதல்
ஒருநாளும் நான் சொல்லியதில்லை...!
அறிந்திருந்தும்
அவள் கேட்டதுமில்லை...!
ஆயினும்
இதயத்தின் ஓரம்
நிரந்தரமாய் இருப்பிடம்
கொண்டுவிட்ட அவள்...
என்றும் இனியவள்... எனக்கு!
அவள்...
என் இத்தனை கவிதைகளின்
தாய்...
அவள்!
No comments:
Post a Comment