Translate

Friday, 20 July 2018

அன்பென்னும் பூச்சரம் ஆயிரம் உண்டு...
அதன் அழகென்பது
உன் மேனி தொட்டால் மட்டும்....

முன்பின்னும் பாரா சந்தோசங்கள் நீ தரவே....
என் மகிழ்வென்னும் பேருலகம்
மலருதம்மா....

அடித்துச்சன்டையிட்டு ஆனந்தக்கூத்தாடும் என் அன்பு தன்கையின்
அகமகிழ பிறந்தவளே...


உனை அள்ளிகொஞ்சும்
பொழுதெல்லாம்
பேருவகை
வந்து எமை
செருக்கு கொள்ளச்செய்கிறதே!

தாலாட்டுப்பாட
அன்னை மடியில் நீ தவழ்ந்து
ஆரவாரம் செய்வதெல்லாம்
ஆண்டவனும்
கண்டிரா பெருமகிழ்வன்றோ?

தமிழும்,
மழலை மொழியுமன்றி
பொழியும் இன்பச்சுவை தற
ஏது மொழி இவ்வுலகில்...?

அமிழ்தாய் உன்புன்னகை
ஆயுல் நீட்டிப்புச்செய்யும்...

உன் மழலைத்தென்றல்
வீசும் காற்றில்
னான் மகிழ்வாய்
கறைந்து போகிறேனம்மா....


முத்தங்களுடன்
#தாய்மாமன்

No comments:

Post a Comment