தனிப்பெரும் சாதியென
அகமகிழ்ந்து
உயர்ந்தே பிறந்தேனென
உவகை கொண்டு
சேவகம் செய் என்றே
பிறரை நிந்திக்கும்
அகந்தை மனிதனே...!
உன் அடிசிந்தையை கிளரிப்பார்
மனிதன் எனும் நிலையை நீ
இழந்து விட்டதை!
கூர் அரிவாள் கொண்டே
குருதி வெள்ளம் ஓட செய்த
கேவளத்தை
பெருமை என்றே எண்ணிச்சாகும் சதைப்பிண்டமே
உன் இதயத்தில்
மலம் கலந்ததை கிண்டிப்பார்!
உன் நிர்வாணம் மறைத்த ஆடையிடமும்,
பசி போக்கிய சோற்றிடமும்,
உன் நாசி புகுந்த காற்றிடமும்
கேட்டுப்பார்...!
எத்தனை சாதி மனிதரை
தொட்டு வந்ததென???
பிணமாகி போன பின்னே
உன் சிதை எரிக்கும் நெருப்பும்,
புதைத்தால் சதை தின்னும் மண்ணும்
உன் சாதி பெருமை கேட்பதில்லை!
உன்னை அழித்தே தீரும்!
வீரம் என மடமை கொண்டே
சக மனிதனை கொள்ளும்
உன் வக்கிரத்தை
வந்தெறிக்கும் பெருநெருப்பை
தேடிக்காத்திரு
மனிதம் இழந்த இழிநிலையில்!
#பெருங்கோபம்
அகமகிழ்ந்து
உயர்ந்தே பிறந்தேனென
உவகை கொண்டு
சேவகம் செய் என்றே
பிறரை நிந்திக்கும்
அகந்தை மனிதனே...!
உன் அடிசிந்தையை கிளரிப்பார்
மனிதன் எனும் நிலையை நீ
இழந்து விட்டதை!
கூர் அரிவாள் கொண்டே
குருதி வெள்ளம் ஓட செய்த
கேவளத்தை
பெருமை என்றே எண்ணிச்சாகும் சதைப்பிண்டமே
உன் இதயத்தில்
மலம் கலந்ததை கிண்டிப்பார்!
உன் நிர்வாணம் மறைத்த ஆடையிடமும்,
பசி போக்கிய சோற்றிடமும்,
உன் நாசி புகுந்த காற்றிடமும்
கேட்டுப்பார்...!
எத்தனை சாதி மனிதரை
தொட்டு வந்ததென???
பிணமாகி போன பின்னே
உன் சிதை எரிக்கும் நெருப்பும்,
புதைத்தால் சதை தின்னும் மண்ணும்
உன் சாதி பெருமை கேட்பதில்லை!
உன்னை அழித்தே தீரும்!
வீரம் என மடமை கொண்டே
சக மனிதனை கொள்ளும்
உன் வக்கிரத்தை
வந்தெறிக்கும் பெருநெருப்பை
தேடிக்காத்திரு
மனிதம் இழந்த இழிநிலையில்!
#பெருங்கோபம்
No comments:
Post a Comment