உண்டு களித்து
உடைபல மாற்றி
கதைபல பேசி
கடந்து போன
காலங்கள் இனி இல்லை!
ரத்தமமும் சதையும்
கொணர்ந்திட்ட பகையால்
படைபல கண்டு
தடைபல வென்று
தடம் இட்டு சென்ற
முன்னோர் தந்த
சுதந்திரம்,
சொல்பேச்சும்
(பேச்சுரிமை)
பேனா வீட்சும்
(எழுத்துரிமை)
வீரம் காட்ட
விளைந்த சுதந்திரம் மடை மாறி போகும் பாதை கண்டீறோ?
அன்னியர் ஆண்ட
அன்னைபூமியில்
அடிமை விலங்குடைத்து
ஆகாய வானில்
பறக்கும் சுதந்திரக்கொடி
அறம் மீறும்
நிறம் மாறும்
அரசியல் கூத்தால்
கிளிந்திட நான் கண்டேன்!
ஊழல் பெருச்சாலி
ஓடும் சாக்கடை தானிங்கு அரசியல் என
ஆகிவிட்ட தேசத்தில்
சுதந்திரம் ஏராளம் தான்!
எதற்கென்ற கேள்வி எழுகின்ற உள்ளத்தில்
சுடுகாட்டு ஊழல் செய்ய,
இறைச்சி உண்ட
உயிர் பறிக்க,
நீர் கேட்ட உரிமை மறுக்க
சுதந்திரம் ஏராளம் தான்!
உணவு தரும் விவசாயி
உயிர் மாய்க்க,
உயிர் நீத்த மனிதப்பிணம் 'ஆதார்' அளிக்க,
ஆட்டோக்கள்
தீக்குளிக்க
காவலனே பற்றவைக்கும்
சுதந்திரம்
உண்டிங்கு!
ஓலம் இடும் கூடன்குளம்
கதறி அழும்
கதிராமங்களம்
கடைச்சரக்காய்
ஆனதிலும்
கமிசன் வாங்கி கொண்டதிலும்
உள்ளதடி சுதந்திரம்!
மலம் அல்லும் கரங்களிலே
ஆயிரம் காசு வைத்து
வாக்கு வாங்கும்
வியாபாரம்
செழிப்படைந்த
நாட்டிலே
உரிமைக்குரல்
உடைத்தெறிய
ஓங்கும் லத்தி
மண்டை உடைக்க
தடை இல்லை...
தடை ஏதும் இங்கில்லை!
பொக்கிசங்கள்
அள்ளிச்சென்று,
கொள்ளை வரி போட்டு
கொலையும் தான்செய்த
கொடியவனாம்
ஆங்கிலேயன் எனும்
கதைகள் இங்குண்டு!
இவையாவும் இப்பொழுதும்
நடந்தேறும் காட்சிகளும் இங்குண்டு!
குடி கெடுக்கும் சாரயம் கொடுப்பதனால் - குடியரசு!
குண்டர்கள் ஆட்சியில்
குறை சொன்னால்
சிறை செல்ல
வழி சொல்லும்
சட்டமே குண்டர் சட்டம்!
நீ உண்ணும் உணவும்,
நீ பேசும் மொழியும்,
நீ வாழும் இடமும்,
நீ செய்யும் தொழிலும்
அரசேதான்
முடிவு செய்யும்
எனும் நிலை வந்துவிட்ட நாட்டில்...
சுதந்திரம் காலாவதி
ஆகிடும் அறிகுறிகள்
சுதந்திரமாய் சிறகடிக்கும்!
உடைபல மாற்றி
கதைபல பேசி
கடந்து போன
காலங்கள் இனி இல்லை!
ரத்தமமும் சதையும்
கொணர்ந்திட்ட பகையால்
படைபல கண்டு
தடைபல வென்று
தடம் இட்டு சென்ற
முன்னோர் தந்த
சுதந்திரம்,
சொல்பேச்சும்
(பேச்சுரிமை)
பேனா வீட்சும்
(எழுத்துரிமை)
வீரம் காட்ட
விளைந்த சுதந்திரம் மடை மாறி போகும் பாதை கண்டீறோ?
அன்னியர் ஆண்ட
அன்னைபூமியில்
அடிமை விலங்குடைத்து
ஆகாய வானில்
பறக்கும் சுதந்திரக்கொடி
அறம் மீறும்
நிறம் மாறும்
அரசியல் கூத்தால்
கிளிந்திட நான் கண்டேன்!
ஊழல் பெருச்சாலி
ஓடும் சாக்கடை தானிங்கு அரசியல் என
ஆகிவிட்ட தேசத்தில்
சுதந்திரம் ஏராளம் தான்!
எதற்கென்ற கேள்வி எழுகின்ற உள்ளத்தில்
சுடுகாட்டு ஊழல் செய்ய,
இறைச்சி உண்ட
உயிர் பறிக்க,
நீர் கேட்ட உரிமை மறுக்க
சுதந்திரம் ஏராளம் தான்!
உணவு தரும் விவசாயி
உயிர் மாய்க்க,
உயிர் நீத்த மனிதப்பிணம் 'ஆதார்' அளிக்க,
ஆட்டோக்கள்
தீக்குளிக்க
காவலனே பற்றவைக்கும்
சுதந்திரம்
உண்டிங்கு!
ஓலம் இடும் கூடன்குளம்
கதறி அழும்
கதிராமங்களம்
கடைச்சரக்காய்
ஆனதிலும்
கமிசன் வாங்கி கொண்டதிலும்
உள்ளதடி சுதந்திரம்!
மலம் அல்லும் கரங்களிலே
ஆயிரம் காசு வைத்து
வாக்கு வாங்கும்
வியாபாரம்
செழிப்படைந்த
நாட்டிலே
உரிமைக்குரல்
உடைத்தெறிய
ஓங்கும் லத்தி
மண்டை உடைக்க
தடை இல்லை...
தடை ஏதும் இங்கில்லை!
பொக்கிசங்கள்
அள்ளிச்சென்று,
கொள்ளை வரி போட்டு
கொலையும் தான்செய்த
கொடியவனாம்
ஆங்கிலேயன் எனும்
கதைகள் இங்குண்டு!
இவையாவும் இப்பொழுதும்
நடந்தேறும் காட்சிகளும் இங்குண்டு!
குடி கெடுக்கும் சாரயம் கொடுப்பதனால் - குடியரசு!
குண்டர்கள் ஆட்சியில்
குறை சொன்னால்
சிறை செல்ல
வழி சொல்லும்
சட்டமே குண்டர் சட்டம்!
நீ உண்ணும் உணவும்,
நீ பேசும் மொழியும்,
நீ வாழும் இடமும்,
நீ செய்யும் தொழிலும்
அரசேதான்
முடிவு செய்யும்
எனும் நிலை வந்துவிட்ட நாட்டில்...
சுதந்திரம் காலாவதி
ஆகிடும் அறிகுறிகள்
சுதந்திரமாய் சிறகடிக்கும்!
No comments:
Post a Comment