கண்கள் மோதி காயம் பட்டு
இதயம் வலிக்கிறதே!
உன் மௌனம் பேசும் பாஷை எந்தன் செவியில் அறைகிறதே!
உன் நித்திரை செய்யும் வேலை என்ன சொல்லடி பெண்ணே!?
உன் கனவில் என்னை
உலவச்செய்து
இம்சை செய்பவளே...
மூச்சு காற்றை முகத்தில்
வீசி வன்முறை செய்கின்றாய்!
சிறு முத்தம் என்றே கொஞ்சம் தந்து
என் வார்த்தை சிதைக்கின்றாய்!
வேண்டாம்... வேண்டாம்..
ஏதும் வேண்டாம்...
என்னை விட்டுவிடு...
நீயா... நானா... போட்டி
ஏதும் இனிமேல் வேண்டாமே!
நீயும் நானும்...
நாம் என்ற சொல்லும் வேண்டாமே!
இதயம் வலிக்கிறதே!
உன் மௌனம் பேசும் பாஷை எந்தன் செவியில் அறைகிறதே!
உன் நித்திரை செய்யும் வேலை என்ன சொல்லடி பெண்ணே!?
உன் கனவில் என்னை
உலவச்செய்து
இம்சை செய்பவளே...
மூச்சு காற்றை முகத்தில்
வீசி வன்முறை செய்கின்றாய்!
சிறு முத்தம் என்றே கொஞ்சம் தந்து
என் வார்த்தை சிதைக்கின்றாய்!
வேண்டாம்... வேண்டாம்..
ஏதும் வேண்டாம்...
என்னை விட்டுவிடு...
நீயா... நானா... போட்டி
ஏதும் இனிமேல் வேண்டாமே!
நீயும் நானும்...
நாம் என்ற சொல்லும் வேண்டாமே!
No comments:
Post a Comment