காதோடு மெல்ல
கதை வந்து சொல்ல...
நீ வேண்டும் பெண்ணே!
நிழல் போலே உன்னை
நிதம் தோறும் எந்தன்
உயிர் தொடர்ந்து வரவே
வரம் வேண்டும் பெண்ணே!
வரும் காலம் யாவும்
நமக்காக வேண்டும்..
வாராயோ பெண்ணே!
கரம் கோர்த்து நடப்போம்!
பூ வாசம் ஒன்று...
உனதென்று கண்டு
மறந்தேனே என்னை
மணப்பாயோ பெண்ணே!
இதலோரம் மெல்ல
சிரிப்போன்று செல்ல
கண்டேனே பெண்ணே!
கணவாகிப்போனேன்!
நிஜமெல்லாம் நீயே...
நின்றாயே பெண்ணே!
நிமிடங்கள் யாவும்
மகிழ் என்ற ஒன்றை
தந்தாயே பெண்ணே!
என் பிள்ளை உன்னை
தாயென்று சொல்லும்
வரம்தானே எனக்கு
"தா" என்று கேட்பேன்!
தவழும் தென்றல்...
உன் சேலை புகுந்து...
செய்யும் குரும்பை...
மறுத்தாயே பெண்ணே!
ஏனென்று தென்றல் கேட்டபோதே
எனக்கென்று மட்டும்
உண்டென்று சொல்லி
நெகிழ்ந்தாயே பெண்ணே!
உன் அன்பை பெற்ற
ஒரு ஜீவன் எந்தன்
இதயம் யாவும்
துடிக்கின்ற நேரம்
நான்தானே உந்தன்
உயிராகி போனேன்!
இனி என்ன இன்பம்
இருந்தாலே என்ன...!?
நீ இருக்கும் போது
வேறேதும் வேண்டாம்!
உன் முகம் இருக்க-பெண்ணே
நிலவென்று வேண்டாம்!
உன் பெண்மை தூவும்
புது வாசம் போதும்
மலர்கூட்டம் இங்கே
இனி ஏதும் வேண்டாம்!
என்னோடு நீ இருக்கும் நேரம்
பகலென்று ஒன்று
எப்போதும் வேண்டாம்!
மகிந்தே கழியும்
பொழுதுகள் போதும்...
முக்காலம் என்று
வேறேதும் வேண்டாம்!
உன் முத்தங்கள் போதும்
கடல் முத்துக்கள் வேண்டாம்!
நீ மட்டும் போதும்
உலகத்தில் எனக்கு
வேறென்ன வேண்டும்!
#கவிஞர்_இளையபாரதி
கதை வந்து சொல்ல...
நீ வேண்டும் பெண்ணே!
நிழல் போலே உன்னை
நிதம் தோறும் எந்தன்
உயிர் தொடர்ந்து வரவே
வரம் வேண்டும் பெண்ணே!
வரும் காலம் யாவும்
நமக்காக வேண்டும்..
வாராயோ பெண்ணே!
கரம் கோர்த்து நடப்போம்!
பூ வாசம் ஒன்று...
உனதென்று கண்டு
மறந்தேனே என்னை
மணப்பாயோ பெண்ணே!
இதலோரம் மெல்ல
சிரிப்போன்று செல்ல
கண்டேனே பெண்ணே!
கணவாகிப்போனேன்!
நிஜமெல்லாம் நீயே...
நின்றாயே பெண்ணே!
நிமிடங்கள் யாவும்
மகிழ் என்ற ஒன்றை
தந்தாயே பெண்ணே!
என் பிள்ளை உன்னை
தாயென்று சொல்லும்
வரம்தானே எனக்கு
"தா" என்று கேட்பேன்!
தவழும் தென்றல்...
உன் சேலை புகுந்து...
செய்யும் குரும்பை...
மறுத்தாயே பெண்ணே!
ஏனென்று தென்றல் கேட்டபோதே
எனக்கென்று மட்டும்
உண்டென்று சொல்லி
நெகிழ்ந்தாயே பெண்ணே!
உன் அன்பை பெற்ற
ஒரு ஜீவன் எந்தன்
இதயம் யாவும்
துடிக்கின்ற நேரம்
நான்தானே உந்தன்
உயிராகி போனேன்!
இனி என்ன இன்பம்
இருந்தாலே என்ன...!?
நீ இருக்கும் போது
வேறேதும் வேண்டாம்!
உன் முகம் இருக்க-பெண்ணே
நிலவென்று வேண்டாம்!
உன் பெண்மை தூவும்
புது வாசம் போதும்
மலர்கூட்டம் இங்கே
இனி ஏதும் வேண்டாம்!
என்னோடு நீ இருக்கும் நேரம்
பகலென்று ஒன்று
எப்போதும் வேண்டாம்!
மகிந்தே கழியும்
பொழுதுகள் போதும்...
முக்காலம் என்று
வேறேதும் வேண்டாம்!
உன் முத்தங்கள் போதும்
கடல் முத்துக்கள் வேண்டாம்!
நீ மட்டும் போதும்
உலகத்தில் எனக்கு
வேறென்ன வேண்டும்!
#கவிஞர்_இளையபாரதி
No comments:
Post a Comment