Translate

Friday, 20 July 2018

கவிதை என்றால்!

நித்தமும் நீந்திப்போகும்
அற்ப வாழ்வின் ஆசைத்துளிகளில்
மொத்தமாய் உயிர்கொள்கின்றன உணர்வுகள்...

அத்தனையும் புத்தியிலே புதைத்து வைத்தாளும்
பெரும் புயலென வெடித்துவிடும்
அதனால் வடித்துவிடுகிறோம் கவிதைகளாய்..

 நிச்சயம் புன்சிரிப்பையும்
பொங்கிவரும் மகிழ்வையும் மட்டுமே
தரும்... மறுவாசிப்பில்...

சுவையின் சொப்பண முத்துக்கள் தான் கவிதை!

ரசிக்கத்தெரிந்தவற்கு
மட்டுமே கவிதை உணர்வோவியம்
மற்றோற்கு அது
எழுத்துக்களின் எண்ணிக்கை மட்டுமே

#இளையபாரதி

No comments:

Post a Comment