எனக்கே என்னை அறிமுகம் செய்திட
உந்தன் கண்களில்
எந்தன் பிம்பத்தை
மாட்டிவைக்கிறாய்!
காதல் தோன்றவே
கட்டிக்கொள்கிறாய்!
கனவு காட்சியை
ஒளிப்பதிவு செய்கிறாய்!
உதட்டு வியர்வைகள்
உலர்த்த வேண்டியே
மலரிதலினால் முத்தம்
பகிர்கிறாய்!
நெடுந்தூரமாய் கூட்டிப்போகிறாய்
குழந்தை போலவே
பேசி மகிழ்கிறாய்!
விரல்கள் கோர்த்து
கை வீசி பார்க்கிறாய்!
மலரை காட்டியே
அழகு என்கிறாய் - அது
உன்னில் தோற்றதை
உணர மறுக்கிறாய்!
ஊசி பார்வையால்
குத்தி கிழிக்கிறாய்!
பனிப்பூக்களை
அள்ளி தெளிக்கிறாய்!
நெத்தி பொட்டென
என்னை ஒட்டி கொள்கிறாய்!
நித்தம் நித்தமும்
வானவில்லாக
வண்ணம் மாறியே
வாஞ்சை செய்கிறாய்!
பெண்ணின் வாசத்தை
பூசி அணைக்கிறாய் - உன்
முகத்தின் அழகினால்
நிலவை போவென
துரத்தி அடிக்கிறாய்!
யாவும் நானென கத்தி சொல்கிறாய்!
ஆனபோதுமே ஒரு யுத்தம் செய்கிறாய் -ஆம்
அன்பை பொழிவதில்
யுத்தம் செய்து நீ
வெற்றி உனதென
ஆர்ப்பறிக்கிறாய்!
உந்தன் கண்களில்
எந்தன் பிம்பத்தை
மாட்டிவைக்கிறாய்!
காதல் தோன்றவே
கட்டிக்கொள்கிறாய்!
கனவு காட்சியை
ஒளிப்பதிவு செய்கிறாய்!
உதட்டு வியர்வைகள்
உலர்த்த வேண்டியே
மலரிதலினால் முத்தம்
பகிர்கிறாய்!
நெடுந்தூரமாய் கூட்டிப்போகிறாய்
குழந்தை போலவே
பேசி மகிழ்கிறாய்!
விரல்கள் கோர்த்து
கை வீசி பார்க்கிறாய்!
மலரை காட்டியே
அழகு என்கிறாய் - அது
உன்னில் தோற்றதை
உணர மறுக்கிறாய்!
ஊசி பார்வையால்
குத்தி கிழிக்கிறாய்!
பனிப்பூக்களை
அள்ளி தெளிக்கிறாய்!
நெத்தி பொட்டென
என்னை ஒட்டி கொள்கிறாய்!
நித்தம் நித்தமும்
வானவில்லாக
வண்ணம் மாறியே
வாஞ்சை செய்கிறாய்!
பெண்ணின் வாசத்தை
பூசி அணைக்கிறாய் - உன்
முகத்தின் அழகினால்
நிலவை போவென
துரத்தி அடிக்கிறாய்!
யாவும் நானென கத்தி சொல்கிறாய்!
ஆனபோதுமே ஒரு யுத்தம் செய்கிறாய் -ஆம்
அன்பை பொழிவதில்
யுத்தம் செய்து நீ
வெற்றி உனதென
ஆர்ப்பறிக்கிறாய்!
No comments:
Post a Comment