Translate

Friday, 20 July 2018

போராட்டம்

இதோ இந்த சுதந்திரம், யாரென்று தெரியாத ஒருவன் நம்மை ஆள்வதா? அடக்குமுறை செய்வதா? நம் வளங்களை கொள்ளையடிப்பதா? நம் உரிமைகளை பறிப்பதா? எனும் கோபத்திலும் வெறியிலும் தன் இன்னுயிரையும் பொருட்படுத்தாது போராடி உயிர் நீத்து, நாம் மாண்டாலும் பரவா இல்லை , நம் சந்ததி வாழ வேண்டும் என்னும் மிகப்பெரிய தியாகத்தின் பால் நமக்கு கிடைத்தது.
அத்தகைய தியாகிகளுக்கும், மாவீரர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியை, புகழ் வணக்கத்தை இந்த ஒருநாள் மட்டுமல்ல எந்த நாளும் செலுத்துவோம்!

 அதே வேலையில் இன்று நாம் கொண்டாட எத்தனிப்பது அவர்கள் ஆசைப்பட்ட, அவர்கள் எதிர்பார்த்த சுதந்திரம் தானா?
எனும் கேள்விகளையும்,
இந்த நாளினை கருப்பு நாள் எனவும், இதை கொண்டாட போவதில்லை எனவும் கூறுப்படும் கருத்துகளையும்
வெற்றுக்கொண்டாட்டங்களினூடே நாம் புறந்தள்ளி விடக்கூடாது...

அதிகாரமும், நிர்வாகமும் ஆங்கிலேயனிடமிருந்து சமகால அரசியல் வாதிகளிடம் கைமாறி மட்டுமே இருக்கிறது. மேலும் ஆங்கிலேயர்களை விட சமகால அரசியல்வாதிகள் கொள்ளையும், தரமற்ற பணிகளும்,
அதிகப்படியான அடக்குமுறைகளும்
கையால்பவர்களாக இருக்கிறார்கள் என்னும் உண்மையை உணர்ந்து, சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பதை அறிந்து, அவனுக்கு இவன் பரவா இல்லை என்னும் மனனிலையினின்று விடுபட்டு
சமகால அரசியல் அவலங்களை துடைத்தெரிய நாம் முனைவதே உன்மையான சுதந்திரம். அதுவே நமக்காக உயிர் நீத்து வரலாறாய் வாழும் நம் முன்னோற்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகவும், புகழ் வணக்கமாகவும் இருக்கும்.

அந்த நாளே நமக்கு உண்மையான சுதந்திர நாளாக இருக்கும்.

சுதந்திரம் வெற்று முழக்கமல்ல...
ஒருநாள் கொண்டாட்டத்தோடு முடிய...

சுதந்திரம் அனைவருக்குமான
சுவாசக்காற்று...

இங்கே யோகிகளால் தடைபடாமல் இருக்க உறுதி ஏற்போம்!

#இளையபாரதி #ஹரிஹரன்

No comments:

Post a Comment