Translate

Saturday, 21 July 2018

பொழுதுகள்

அன்பே நீ போகாதே...
தூரம் அது வேண்டாமே!
உன்னில் நான்தானே இருக்க
ஆசை கொண்டேனே!

இதற்குள் ஒரு ஆனந்தமே
இருக்கும் அதை அறிவாயோ!?
மனங்கள்...
அவற்றை விட்டுவிடு...
அவையே பேசிக்கொள்ளட்டும்...

இடையே இங்கு நாமெதற்கு
விலகி நிற்கும் நிலை எதற்கு!

வா.. வா..
என் பெருமகிழ்வே!
என்னுள் உன்னை கண்டுகொள்ளேன்!

அதனால்...
புரிதல் உண்டாகும்...
உயிரும் இனி ஒன்றாகும்..

வரும்...
பொழுதுகள் இனி நன்றாகும்!

No comments:

Post a Comment