Translate

Friday, 20 July 2018

கவிஞர் தாமரைக்கு ஒரு வாழ்த்து!

செந்தாமரையே ..
செந்தேன் மொழியே...
பைந்தமிழ் மகளே..
தவமாய் கிடைத்தாய்...
திரையில் மிளிர்ந்தாய்...
தமிழில் படைத்தாய்...
தமிழ் மட்டும் படைத்தாய்...

ஆண் கூட்டத்தில்
பெண் நீ நுழைந்தாய்...
பெருந்தீ யென கனன்ராய்!
ஆங்கிலம் மறுத்தாய்...
அதை அறவே துறந்தாய்...
மயிலிறகென இதமாய்
இதயம் வருடும்
மென் பாடல்கள் கொடுத்தாய்...
இசையில் கலந்து
அமிழ்தென பகிர்ந்தாய்...

அழகின் மொழிக்கு
அரியணை தந்தாய்..
அதுவே துணையென
அரங்கில் வென்றாய்!

வாழ்த்துக்களுடன்
கவிஞர் இளையபாரதி!

No comments:

Post a Comment