Translate

Friday, 20 July 2018

வெட்கித்தலைசாய் தேசியக்கொடியே!

ஆங்கிலேயனிடம்
அடிபட்டு வாங்கி வந்துவிட்டதினால்
மட்டும்
 நீ உயரப்பறந்திடலாமா??

அறம் நிறைந்த
வரலாற்றுப்புரட்சியில்
கயமை செய்து
கலவரம்
செய்தவனை
காவலனாய்
கொண்டதேசமிது...

மக்காளாட்சி என்றே சொல்லி
மிருகவதை செய்த
மாமா மன்னர்கள்
ஆட்சி செய்யும்
அரண்மனையில்
 நீயும் பறக்கவேண்டுமா
தேசியக்கொடியே???

உணவு தந்தான்
என்பதற்காய்
ஏழைக்குடிசையில்
எறி தனல் எரிந்து
வந்தான்...

வஞ்ஞம் தீரவே
வன்முறை செய்துவந்தான்...

குடியரசு கொண்டாட
கொடுமைகள் அவிழ்த்து விட்டான்
என்பதை அறிந்தும்
 நீ பறந்தால்
வெட்க்கித்தலை சாய்
தேசியக்கொடியே...

எல்லை காத்தவனுக்கு
உணவில்லையாம்
சொன்ன சொல்லிற்கு
உரிமை இல்லையாம்

வஞ்சனை மனிதர்தம்
வார்த்தை விசம் அறுந்தி
மாண்டுபோகும் மனிதர் நாட்டில்
கேடு கெட்ட கொண்டாட்டம்
தேவைதானா?

ஆண்ட பகைவனும்
அறம் காத்த
வரலாறுகள்
இங்குண்டு...

ஆளும் துரோகி
 நாட்டில்
தீ வைத்த தடமுண்டு...
தடி அடித்த தழும்புண்டு...

குடிகெடுத்த
குணம் கொண்டு
குடியரசு
கொண்டாடும்
கொடுங்கோளன்
கரங்களால்
ரத்தக்கறை படிந்த
கயிற்றில்
காற்றில் பறக்கும் தேசியக்கொடியே
வெட்கித்தலை சாய்...


வேதனைக்கண்ணீர்
கடல் நிறம்ப
வங்கக்கடலின்
கறையோரம்
வந்த காற்றில் பறந்துவிடலாம்
என்றெண்ணாதே??

வறியவர் தம் குடிசையோடு
வயிறும்தான்
எறிந்துகொண்டிருக்கிறது...

அதன்
துளித்தனல் பட்டால் போதும்
முடிந்துவிடும்
உன்
கர்ஜனை....

வெட்கித்தலைசாய்
தேசியக்கொடியே😭😭😭😭

No comments:

Post a Comment