Translate

Friday, 20 July 2018

நீ வாராயோ!

நீ யாரோ பெண்ணே!
எனக்காக உன்னை
இறைவன் படைத்தானோ?

எங்கெங்கோ உன்னை
தேடிய கண்ணை
கேளாமல் நானும்
மனமெங்கும்
காதல் நிரப்பி வைத்தேன்!

நீ வந்து இங்கே
மலர்காற்றாய் மெல்ல
வீசி செல்லாயோ?

பூந்தோட்டம் உள்ளே
உன்மேனி மெல்ல
செல்லும் போது
பூக்கள் கூட்டம்
வெட்கி நாணாதோ?

உன் ஸ்பரிசம் பட்டு
இளந்தென்றல் காற்று
இன்பங்கள் அடையதோ!

என் மண மேடை
உன் மணக்கோலம் கண்டு
நாம் வாழ்வில் இணைய
கெட்டிமேளம் இசைக்கின்ற நாளை
நான் செதுக்கி கொண்டிருக்கிறேன்...
நீ வாராயோ!

No comments:

Post a Comment