Translate

Tuesday, 31 December 2019

வில்லுப்பாட்டு

Singer: தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட

Chorus : ஆமா

Singer: வில்லினில் பாட
வந்தருள்வாய்கணபதியே!

Chorus: வந்தருள்வாய்கணபதியே!

Singer: வந்தனம் வந்தனம் வந்தனமே
இங்கு வந்தசனமெல்லாம்
குந்தனும்  குந்தனும் குந்தனுமே!

Chorus : வந்தனம் வந்தனம் வந்தனமே
இங்கு வந்தசனமெல்லாம்
குந்தனும் குந்தனும் குந்தனுமே!

Singer : கோடான கோடி... கூட்டமும் இங்கே
கூடி நிக்குற கூட்டமையா...

Chorus : ஆமா...கூடி நிக்குற கூட்டமையா...

Singer : பொங்கலோ பொங்கல்
என்று நாமும்
பாட்டு படிக்கிற நேரமைய்யா!

Chorus: ஆமா...
பாட்டு படிக்கிற நேரமைய்யா

Singer :(Talk) அதாகப்பட்டது...மகா ஜனங்களே
இன்னைக்கு என்ன விசேஷம் தெரியுமா?

Chorus:(T) என்ன விசேஷம்...?

Singer : நம்ம HTC கம்பெனியிலே...

Chorus: நம்ம HTC கம்பெனியிலே...

Singer :  வருஷமெல்லாம் உழைச்சு கழைச்ச நம்மலுக்கு
ஆடுகோழி காடைன்னு விருந்து வைச்சு...
ஆட்டம் பாட்டம்னு இந்த பொங்கலை கொண்டாடுற நாளு!

Chorus : என்னாது ஆடு, கோழி, காடையா..
அப்படியெல்லாம் இருக்காதே...

Singer : அட..ஆமால்ல...
ஆடு, கோழி, காடையெல்லாம்
இங்க...இங்க அட இல்லைஇல்லை...

Singer:  பட்ஜெட்டு எகிறிடும் பாக்கெட்டு தீர்ந்திடும்

Chorus :  பட்ஜெட்டு எகிறிடும் பாக்கெட்டு தீர்ந்திடும்

Singer:  ஆடு, கோழி, காடை இல்லை இல்லை

Chorus :  ஆமா...ஆடு, கோழி, காடை இல்லை இல்லை

Chorus : சரி. அது தான் இல்லை ..வேற என்னவெல்லாம் இருக்காம்...?

Singer: நம்மளோட இந்த பொங்கலு  கொண்டாட்டத்துல...
தேவலோக ரம்பை, ஊர்வசி, மேனகைனு
இருக்கிற நம்ம அழகான பெண்கள்...
ஒரு 10 15 கிலோ கடலை மாவை பூசிக்கிட்டு...

Singer:
மானாட்டம்...மயிலாட்டம்...
குயிலாட்டம் ஒயிலாட்டம்..
என்று கூத்து நடக்குது பாருமைய்யா...

Chorus:  ஆமா...
கூத்து நடக்குது பாருமைய்யா...

Singer : சந்தடி சாக்குல வந்தனம் போட்டுட்டு வில்லுப்பாட்டிருக்குது கேளுமையா....

Chorus: ஆமா...
வில்லுப்பாட்டிருக்குது கேளுமையா....

Singer : 

Sunday, 20 October 2019

கவிப்போம் கவிதை - தாய்மை

மகவே...என் மகிழ்வே!
மனம் நிறைந்த உன் தந்தை
என் மடி நிரப்பினார்...
பேரன்பு புதையலாய் உன்னை!

நீ கருவாய் உருவான நிமிடம்
ஈடில்லா இன்பத்தின் எல்லைகள்
கடந்து வந்தேன்!
என்னுயிரில் உன்னுயிரை
தாங்கும் பொழுதெல்லாம்
மண் மீது நடந்ததில்லை நான்!
மகிழ் வானிலன்றோ பறந்தேன்!

தாய்மை பதவி தந்த
தனிப்பெரும்...
கருணையடா நீ!
புளிப்பு மாங்காய் தேடின
சுவை மொட்டுக்கள்!
எனக்கான பசி கடந்து
உனக்கான உணவுகள் உண்டேன்!

அடி வயிற்றில் கரம் வைத்தே
மெல்லிறகாய் வருடினேன்...
நீ உலவும் உணர்வைப் பெற!
ஒரு புறமாய் படுத்தே
உன் உயிர் காத்தேன்!

உதைக்கும் உன் கால்கள்
தடம் காட்டும் நேரமெல்லாம்
கண் வியந்தே ரசித்தேன்!
எப்போதும்...
உன் தந்தையின் கரம் கோர்த்தே
இருக்க...ஏங்கிய நாட்களெல்லாம்
பெருந்துணை நீயடா!

அன்று...
கோடி மின்னல்கள் தாக்கியதாய்
தோன்றி மறையும் வலிவந்தே
எனைத்துடிக்கச் செய்தது!
மரணத்தின் வாசல் வரை-உயிர்
சென்று...சென்று..திரும்பி வந்தது
உனதும் எனதுமாய்-உயிர்!

ஏதென்று அறியாத தருணம்...
யாரென்ற தெரியாத நபர்கள்...
நிர்வாணமாய் நான்!
இருண்டு போகும் கண்களின்
கடைசி காட்சி...
உன் தந்தையையே தேடிநின்றது!

இடுப்பு எலும்புகள்
சடக்கென்று உடைவதாய்...
உள்ளுணர்வு உணர்த்திக்கொண்டே
இருக்க
கண்கள் மூடி....கரங்கள் மடித்து
வலிகள் கடந்தும் வேண்டிக்கொண்டேன்
இறைவனை...!

அப்பொழுதான்...
குவ்வா... குவ்வா... என்றே
அழுகை சத்தம்!
முதலாய்...
உன் அழுகை கண்டு
அகமகிழ்ந்து ஆனந்தம் கொண்டேனடா!

அத்தனை வலிகளும்
கண்ணீரென கரைந்து ஓடிட
தொப்புள் கொடி உறவே
நெஞ்சோடு அனைத்தேன் உன்னை!

மார் நிறைந்து
மனம் நிரம்பி வழியும் அமுதென அன்னையின் உயிர்த்துளி
தாய்ப்பாலாய் நீ அருந்திட
தாய்மையின் புனிதம் அடைந்தேன்
ஆருயிரே... என் அன்பு மகவே!
கோடி முத்தங்களடா...என் பெருநகையே!

#இளையபாரதி

Friday, 4 October 2019

நற்றமிழில் நன்றி மடல்!





புரட்டாசி 17...


பகைசூழ் தமிழ்நிலம் வாழ்
பண்பட்ட மக்களிடத்தும்
வஞ்சக வானரங்கள் அவர்
நெஞ்சக பிணியுடையர்
இனம், மொழி, நிலம் என
யாவும் திரிபு செய்யும்
பொல்லாதார் கருங்கோலில்(ஆட்சியில்)

இனி கட்டாயமே..யாம்
தமிழ் பேசுதலும்...
தமிழ் போற்றுதலும்...
தமிழ் வழி வாழுதலும்...
தமிழ் நிறுவுதலும்...
இனி கட்டாயமே...!

இவ்வழியே யான்
தமிழ்வழியாய்
ஆங்கில தேதி விடுத்து(OCT-3)

#புரட்டாசி_17

எனும் இந்நாளில்
#அகவை_தினம் போற்றி
அக மகிழ்ந்தோம்...!
தமிழ்_இறை #முருகன்
திருவடி வணங்கினோம்!

யாரென்று...
அறிந்தும்...அறியாமலும்...
அன்பை விதைத்து
வாழ்த்து தென்றல் வீசிய

அத்தனை..
நன்மக்களுக்கும்...என்
நெஞ்சம் தோன்றிய
ஈடில்லா அக மகிழ்வின்
பெருமகிழ்வை
நற்றமிழ் மொழித்தேன் கலந்து
நன்றியாய் நவிழ்கிறேன்...!

எங்கும்...தமிழ்... எதிலும் தமிழ்....
அதிலும் யாம்...அன்புத்தமிழ்...
திசை எங்கும் பரப்புவோம்!


பெருநன்றியுடன்
#இளையபாரதி

Thursday, 3 October 2019

தமிழ் (என பொழியும்) தேன் மொழி (மழை நீ)#திவ்யா😍






நன்மையும்...நயபேச்சும்
இன்மையின் இனிமை யாவும்
உன்னையே வந்து சேர்ந்திடும்....!

அன்பும் கருணையும்
உன் நெஞ்சில் இருந்து...மகிழ்ந்திடும்!
இன்னும் பிறரிடம் பிறந்தும்
உன்னை சூழ்ந்திடும் ...!
மகிழ் யாவும் வரமென...
உன் சிரிப்புகள் நிறைந்திடும்...!

பெரும் கல்வியும்...
பேரானந்தமும்...
நல் ஆரோக்கியமும்...
நயம் நிறைந்த வார்த்தை செல்வமும்...
பொன்னும் பொருளும்...
அதனுடன் பொழியும் புகழும்
உன்னை சேர்ந்திடும்...!

இனிக்கும் இளமையும்...
இயல்பில்... நன்னடத்தையும்...
நாவில் நல்சொற்களும்...
அம்மை அப்பனின்...
அன்பு மழையும்...

சகோதர உறவுகளின்
சிறந்த நெருக்கமும்...
நெஞ்சம் யாவும்...நீங்கா பேரானந்தமும்..பெருமகிழ்வும்
என்றும் நிலைத்திட...

இனி வரும் காலம் யாவும்...
நீ இன்பத்தில் திளைத்திட...
அன்பு அண்ணனின்...
ஆசை நெஞ்சில்...
பிறந்து பொழியும்..
இனிய தமிழில்...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!💐🎂😍😍

Monday, 30 September 2019

மின்சாரம் இல்லா இரவொன்று... கவிதை

மின்சாரம் இல்லா இரவொன்று...
விளக்கினை ஏற்றி
அதில் உன்முகம் காட்டி
வெளிச்சங்கள் என்னில் பாய்ச்சினாய்!

பகலென்று இங்கே தேவைகள் இல்லை
உன்அன்பே எந்தன் தீராத தொல்லை
வாயேன்...எந்தன் வாசப்பூவே!
நேசம் கொண்டே என்நெஞ்சம் சாய!

பெண்ணே...!
நீ மட்டும் போதும்...
நித்திரை தீரும்...!
உன் சேலை வாசம்...
என் மேனி வீசும்
இந்த பொழுதுகள் நீளும்!

பூவின் மேல தேனீ உலவி
சிறு உரசலும் இன்றி தேனைப்பருகும்...
நீ பூவாய் இங்கே வண்ணங்கள் வீசி
என் தேனீ நெஞ்சம்...
உன்னோடு உலவி
செய்யும் கலவி...
வெகு காலங்கள் வேண்டும்!

#ஹரி

பெண்ணின்_காதல்_வரிகள் - பாடல்

 ஆகா.. இது மாலை நேரம்
ஆகா.. மழை பொழியும் காலம்
ஓகோ...மனம் உன்னை தேடும்
நீயும்... என் நெஞ்சம் பாயும்...பேரலை!

வாடா என் விண்மீன் வீரா
நேரா நீ என்னை சேரடா
காதல்... அது என்னில் பூக்கவே
விதையென விழுகிற
உன் பிம்பம் பேரின்பம்!

என் புடவையில் உந்தன் வாசமும்
ஒரு மடிப்பினில் உன் மீசைமுடிகளும்
இதயத்தில் பல ஆசை நொடிகளும்
இருந்திட எண்ணம் தோன்றுதே!

உன் தோள்களில்
நான் சாயும் வேளையில்...
புன்னகை...அது பூக்கும் பார்வையில்
நினைவுகள் அது நிலவின் ஓரத்தில்
நாம் மட்டும் தொலைந்து போகிறோம்!

என் மௌனங்கள்...உந்தன் புரிதலில்
என் அழுகைகள் உந்தன் மடியினில்...
என் மகிழ்வுகள் உந்தன் மனதினில்...
என் தாய்மையும் உந்தன் ஆண்மையில்...
என் தனிமைகள் உந்தன் இரவினில்...
இது யாவும் போதும்...
இனி உலகமே உனக்கென சுழலுமே!

என் தந்தையாய் நீயே இருந்திட
என் தோழனாய் நீயும் வாழ்ந்திட
என்னை நான்...எங்குமே... தொலைக்கவில்லை!

கடற்கரை..நாம் பேசி கழித்திட...
கடல் அலை...நம்மை பார்த்து ரசித்திட...
பறவைகள் நம் தோளில் அமர்ந்திட...
மழலையாய்.. மாறியே போகிறோம்!

#இளையபாரதி

90'ஸ் கிட்ஸ் லவ்வு சாங்கு!

எழந்தைப்பழ செவப்பழகி
எழவம்பஞ்சு சிரிப்பழகி
இஞ்சி முட்டாய் காரம் போல
மொறச்சு மொறச்சு பாக்குறியே!

அருக்கம்புல்லு மெத்தையிலே
நாமிருப்போம் ஒத்தையிலே
பேசிப்பேசி நேரம் போக
இரவு காத்தும் தீர்ந்திடுச்சு!

பட்டு துணியா என்ன
ஒட்டிக்கிட்ட பெண்ணே
சிட்டுக்குருவி போல நானு
சும்மா சும்மா பறக்குறேன்!

முத்தம் தந்தா போதும்
கொழந்தை வந்து சேரும்
இந்த புரளிய நம்பி வந்த
90'S கிட்ஸு நானு!

ஐசு வண்டி சத்தம் போல
உன் பேச்சு கேக்கும் திசையிலே
சுத்து முட்டாய் கயிறப்போல
சுத்தி சுத்தி பாக்குறேனே!

டயரு வண்டி ஓட்டிக்கிட்டு
கடைக்கு போன 90s கிட்சு நானு
சக்திமான போல உன்ன
வியந்து பாக்குறேன் பாரு!

சவ்வு மிட்டாய் பொம்மையபோல்
எனக்கு மகிழ்ச்சி தந்தவளே
பூம்பூம் மாடு போல
நீயும் போரதிசை நான்வருவேன்!

கடலைமிட்டாய் கால்கோனா...
உனக்கு வாங்கி தருவேனா...
சட்டையில் வச்சு ஆளுக்கு கொஞ்சம்
காக்கா கடி கடிப்போமா!?

#Dedicated to 90'S  Kidsue...

#இளையபாரதி

Saturday, 21 September 2019

புத்தாண்டு புதுசா பொறந்தாச்சு ரவுசா - 2019 கவிதை

புத்தாண்டு  புதுசா
பொறந்தாச்சு ரவுசா
கத்திதான் பெருசா
வாழ்த்துப்பாடு!

உல்லாச உலகம்
உனக்காக பிறக்கும்
எந்நாளும் இளமை
நிக்காம குதிக்கும்
வா... எறங்கி ஆட..
நீ ஆடிப்பாடு!

ஊரெல்லாம் நமக்கு
உற்சாகம் இருக்கு
தயக்கம் தான் எதுக்கு
தாருமாறா நீ ஆட்டம் போடு!

கெத்தா தான் கெளம்பி
வந்தாலே போதும்
வரும்காலம் நமக்கு
வெற்றிய பரிசா மாலை போடும்!

#லட்சிய_கனவுகள் யாவும் வெற்றி பெற
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
#2019

ஜாடைமாடைப் பார்வையிலே பாடல்

ஜாடைமாடைப் பார்வையிலே
சேதி சொல்லிப்போன புள்ள
சாயங்காலம் வந்தா
மடி சாயும் காலம் வருமே!

உள்ளாரா நெஞ்சுக்குள்ள
உன் நெனப்பு ஊரயில
கள்ளு போல போதை ஒன்னு
என் கண்ணை கட்டி விடுதே!

அக்கம் பக்கம் யாருமில்லை
உன்னைப்போல துணையுமில்லை
கட்டிக்கிற நேரத்தில
ஒட்டிக்கிற உன் அழகு
என்னை மொத்தம் மாத்திடுச்சே!

நெஞ்சோரம் உன் உசுர
அச்சடிச்சு வச்சிருக்கேன்
அச்சாரம் போட்டுப்புட
ஆசையத்தான் சொல்லிப்புட்டேன்
பஞ்சாங்கம் பாத்திடத்தான்
நல்ல நாளும் வருதே!

பஞ்சு மெத்தை தேகத்தில
என்னை தள்ளி விட்டபுள்ள
ஒட்டு மொத்த அழகையெல்லம்
அள்ளி அள்ளி கொட்டிவச்சு
என்னை வளைச்சு போட்டுப்புட்ட!

#அச்சச்சோ

Local கானா! பாடல்

Local கானா!

Heart குள்ள கலக்கலாக
ஏறங்குனியே style ஆ!
all timeu - உன்ன
love u பண்ணனும்
அதான் இங்க Bylaw!

மாடர்ன்...beauty மயிலா
நீதான் ஊட்டி ரயிலா
ticketu வாங்கி காத்துனுக்கேன்
மாமன் style ஆ!

பச்சை புடவை கட்டிக்கினு
வந்த புயலா...மனசு சுட்டு நீயும்
எறிக்கிறியே கத்திரி வெயிலா!

Scene ஆ நடந்தது வராத
Light ஆ ஸ்மைலு பண்ணாத
ஊசி பட்ட பலூன் போல
ஒடையுதடி மனசு
ஆனா நீயும் இருக்குறடி
பவர்புல்லு லென்சு

ஒத்தைய கெத்து காட்டிதான்
வேட்டி ஏத்தி கட்டித்தான்
உனக்குன்னு வாங்கிவறேன் ரோசு ரோசு!
சிறிச்சிக்கின்னே வாங்கிக்கின்னா
மனசு பண்ணும் ரவுசு ரவுசு!

தாஜூமகால் கட்டணுமா
LOve பண்ணிட்டா...நம்ம
ஓட்டை குடிசை ஒழுகுதடி
இப்போ light ஆ!

Beachஆண்டை போயி நின்னு
கடலை போடத்தன்
காத்தடிச்சு கூப்பிடுதடி
மெரினா நம்மளத்தான்!

சாயங்காலம் போலாமடி
சிலுக்கு சிலையே
கால் நனைச்சு போகட்டுமே
கடலு அலையே!

அண்ணல் காந்தியடிகள்! கவிதை

என் மேல் பாசம் கொண்டு,
அதிகம் ஊக்கப்படுத்தும் #பெரியம்மாவின்
வேண்டுகோளுக்கு இணங்க
எழுதிய வரிகள்
#காந்தியடிகள்!

ஒற்றை துணியில்
நாட்டின் மானம் காத்து நின்றவர்!
எரியும் தீயின் நடுவே
அகிம்சை மெழுகை பார்த்துக்கொண்டவர்!
ஆயுதங்கள் உரசும் சண்டையில்
அன்பைப்பேசி தனித்து நின்றவர்!

போர்கள் ஓய்ந்து போகும்-சிந்தும்
ரத்தம் காய்ந்து போகும்
அன்பு மட்டுமே
உயிரின் ஆழம் பாய்ந்து
நாளும் வாழும் எனும்
தத்துவத்தில் வாழ்வை
அமைத்து தேசத்தந்தை ஆனவர்!

பொய்மை மறுத்து
மெய்யியலில் ஆட்சி செய்தவர்!
உலகப்பந்தில் இந்தியத்தின் சுதந்திரத்தை
வென்று வைத்தவர்!

எந்த நாளும் நம்மில்
புகழால் மறையாது
வாழ்ந்து கொண்டிருப்பவர்...!

அன்னை தேசத்து தந்தையானவர்
அனைவருக்கும் தாத்தா
எனும் உறவு தந்தவர்
காந்தியடிகள்!

பெருமையும் பெருமைப்படும்
அருமையானவர்-
அண்ணல் காந்தியடிகள்!

உன்னிடத்தே... கவிதை

உன்னிடத்தே...
நான் சொல்லிடாத
காதலின் ஜீவனாய்...
நினைவுகளாக என்னுள்ளே இருந்து
என் அத்தனை கவிதைகளுக்கும்
கரு தந்து...தாயுமானவளே...!

உன் பெயர் - நிச்சயம்
நான் சொல்லிடவேண்டும்
அறிஞர்பால் நிறைந்திட்ட
பெரும்சபையில்
வெற்றியின் பரிசுகளோடு
யான் நின்று
உன் பெயர்
நிச்சயம் சொல்லிடவேண்டும்!

நீயே...
என் கவிதைகளின்
"தாய்"என்று!
அந்த நாளைத்தேடி
உழைத்துக்கொண்டு இருக்கிறேன்
உன் நினைவுகளோடு!

#விசித்திரன்

ஒளி_ஓவியம்_இருளில்! கவிதை

ஒளி_ஓவியம்_இருளில்!

தீபத்தின் ஜூவாளை ஒன்று
நிமிர்ந்து எரிகிறது!
ஏனோ!?? இருள்...
அதன் அடியில் மட்டும்
விலக மறுக்கிறது!

உறுகிச்சாவும் மெழுகின் வலிகள்
உலகம் அறிவதில்லை!
அழுகைக்கண்ணீர் வழிந்து செல்வதை
மனங்கள் மறுப்பதில்லை- ஆயினும்...
அன்பைத்தருவதில்லை!

சிரிக்கும் முகத்தின் ஓவியம்
கண்ணீர் வடிக்கும்...
காட்சிகள் தெரிவதில்லை!
மீட்பார் யாருமின்றி
அழைப்பர் உடன் செல்லும்
அபத்தம் நீங்கவில்லை!

உடல் தீர்க்கும் பசியில்
செரித்தே போகும்
இவள் சிதிலங்கள் கிடைப்பதில்லை!

குடும்ப குத்துவிளக்கு
என்றே அடைமொழி சூடியவள்
சிவப்பு விளக்கில்
விட்டில் பூச்சியாய்
சின்னாபின்னம்
ஆகிப்போகிறாள்!

ஒளி ஓவியம்-இருளில்!

#சிவப்பு_விளக்கில்_பெண்!

#தொலைவு! கவிதை


காதலர்கள் பேசிக்கொள்வதாக!

#தொலைவு!

என்னுயுரே!
எத்தனையோ கிலோமீட்டர்கள் கடந்து நாம் இருந்த போதெல்லாம்
நான் உணரவில்லை
நீ தொலைவில் இருப்பதாய்!

இப்போது உணர்கிறேன்
நீ அருகில் இருந்தும்
உன் மூச்சுக்காற்று
படாத நேரங்களில்!

எல்லைகள் தூரம் என்றாலும்
இதயங்கள் இணைந்திருந்தால்
தொலைவென்று இங்கேது!

நெடுந்தொலைவுகள் கடந்தும்
கால்கள் ஓயவில்லை
உனைக்காணும் தேடலில்!

மனங்கள் பேசிக்கொள்ள
விட்டுவிடுவோமே!
தூரங்கள் இனி ஏது!?
அலைகள் அடித்து
ஓய்ந்துவிடவா போகிறது
கரையின் மீதான கடலின் காதல்!?

ஏன் இடைவெளி...?
நமக்கிடையேயான
சில மில்லிமீட்டர் தூரம் கூட
எனக்கு பெரும் தொலைவுகள் தான்!
வா... அன்பே அருகில்!
தொலைவுகள் இனியேது!

#தொலைவுகள்_தொலையட்டுமே!

#வாழ்க_நீ_எம்மான் - கவிதை

#வாழ்க_நீ_எம்மான்

தேசம் முழுவதும்
நேசம் கொண்ட பெரும் மனிதர்!
மனித ஆத்மாக்கள்
அடைந்திட முடியாத மகாத்மா!

சுதந்திரக்காற்று சிறைபட்ட நேரத்தே
வெகுண்டெழுந்த அகிம்சா மூர்த்தி!
அரிச்சந்திரன் வழியே
பொய்யுரையா பெருந்தகை!

ஆயுதக் காட்டிலும்
அன்புச்செடி வளர்த்தவர்
அடிமை விலங்கை
அறத்தால் பிளந்தவர்!

மதங்கள் கடந்தும்
மனிதம் நிறை(த்)ந்தவர்!
இந்தியத்தாய்க்கும் தந்தையானவர்
சிந்தை முழுவதும் அகிம்சை நிறைந்தவர்!

எதிரிகள் ஆண்டபோதும்
இரும்பென சுழன்றவர்
சுதந்திர நாட்டில்
சுடப்பட்டு மாண்டவர்!

இறக்கும் தருணத்திலும்
எத்தனை இனியவர்?!
குண்டுகள் தந்த
கோட்ஸேவுக்கும்
கருணை தந்தவர்!

இன்னொரு பிறப்பு
இவர்போல்
இறைவனுக்கும்
சாத்தியமில்லை!

இந்நாள் மறைந்திட்ட
அண்ணல் நினைவுகள்
அனைவரும் போற்றுவோம்!

அவர்போல் அணுவேணும்
வாழ்ந்திட
பெரும்முயற்சி
செய்திடுவோம்!


என்னடா நெனைக்கிற - கவிதை

என்னடா நெனைக்கிற
நெஞ்சுல மிதிக்கிற
பொட்டப்புள்ள பொறப்பையே
புழுவா நீயும் நசுக்குற!

தனியா நடக்குற
பொண்ண நீயும் தொரத்துற
பஸ்சுல கிட்டவந்து
ஒட்டி ஒட்டி ஒரசுர!

உனக்கு இல்லையாடா
அக்கா.. அம்மா..தங்கச்சி...
எதுக்கு நசுக்குற...நெஞ்சுமேல கைவச்சி!

சாதிதான் பெருசுன்னு
soundஅ கூட ஏத்துற
காதலு பண்ணிப்புட்டா
கலாட்டா பண்ணுற
கவுரவம் பெருசுன்னு
என்னை கொலை செய்யுற!

பொம்பள பொறப்பெல்லாம்
உனக்கு அடிமையாகுமா!?
முன்னேறி வரணுமுன்னா
"Adjust" பண்ண வேணுமா!?

கத்திய நீட்டுற
காதல் பண்ண சொல்லுற!
வேணான்னு தள்ளிப்போனா
வாயி மேல வெட்டுற!

பொம்பள உடம்பையே
உத்து உத்துப்பாக்குற
குழந்தைய சிரழிச்சும்
ஆடைய குத்தம் சொல்லுற!

ஆம்பளத்தனமுன்னு
அடக்க நீயும் நெனைக்கிற
அடிமை இவளுன்னு
திமிராத்தானே நடத்துற
கோவிலும் உனக்கின்னு
குதியாக்குதிக்கிற...
எதித்து நின்னாக்க
அடிச்சு ஏன்டா தொறத்துற!

தூங்காத கண்கள் - நெஞ்சம் கவிதை

தூங்காத கண்கள் - நெஞ்சம்
நீங்காத உன்னை தேடுதே!
ஓ!..ஓ!..பெண்ணே!
இந்த இரவுகள் பாரமே
நீ தூரம் இருப்பதனால்!

துயில் கொள்ளா கண்கள்
ஏனோ... உன்னை தேடுதோ!
உன் அழகிய பிம்பம்
என் அருகினில் இருக்க
மழலை போலே மனம்
ஏதேதோ பேச
சிரிப்புகள் வந்து என்
உதடுகள் உரசுதே!

உன்னோடு...என் வாழ்வு-என்றே
எந்நாளும் உள்ளம் கூறிடும்
அந்த வார்த்தை கேளடி!
உன் பார்வை பூக்களை
என் மீதே தூவடி!

நான்... இங்கே...!
நீ.. அங்கே...!
இந்த பிரிவினை...
இதயம் தாங்குமா..?
உனை விட்டு மனமே தூங்குமா!?

உன் செல்போன் இணைப்பால்
நம்மை பிணைக்கலாம்!
இணையம் இருக்க
தூரம் தொலைக்கலாம்!

காதல் பேச்சுக்கள்...
நள்ளிரவுகள் நீளட்டும்!
உந்தன் நினைவுகள்
என் இதயம் நீந்தட்டும்...!

ஓ! பெண்ணே...!
என் வார்த்தைகள் பாரடி...
வந்தே நீயும்...
உயிரில் சேரடி!

#காதலன்

தீபம் யாவும் விழி மூடிப்போன - கவிதை

தீபம் யாவும் விழி மூடிப்போன
நடு இரவின் கருப்பில்
உன் நினைவு என்னில்
வெள்ளை ஒளியாய் வெளிச்சம் போட்டு
மனதின் திரையில் உந்தன் பிம்பம்
காட்டி வைக்கிறதே!

மறந்து போன நினைவின் தூண்டல்
உன்னால் தன்னால் நிகழ்கிறதே!
கண்ணால் பேசி... மனதால் பார்த்து
இதயம் நிறையும் காதல் வேண்டும்!

ஆசை வந்து ஆளைத்தாக்கும்
நேரம் யாவும் உன் நினைப்பில்
உருகி வடியும் என் இதயவழியை
கேளடிப்பெண்ணே!

இன்னும் இன்னும் காதல் கூடும்
எந்தன் எண்ணம் யாவும்
உன்னைத்தேடும்!
நீ நடந்து போகும் பாதை யாவும்
பூவாய் வந்து என் இதயம் நின்று
உன்னைத்தாங்கும்!

ஓ! காதல் தீபம் ஏற்றும் மாலை
காற்றும் வந்து மோதிப்பார்க்கும்
தோற்றுபோயி வெட்கம் வந்து
உன் காலடியில் விழுந்து வாழும்!

மயக்குதே வானம்
மயங்குறேன் நானும்
தயக்கமே தொல்லையே - உன்னிடம் எல்லைகள் தாண்டியே
வருகுதே நினைவு யாவும்!

நீலவானம் நீந்திப்போகும்
நிலவும் கூட உன்னைக்கண்டால்
காதல் செய்ய ஏங்கிச்சாவும்!
நான் மட்டும் விதிவிலக்கா!??
உன் மீது காதல் வைத்தேவிட்டேன்!
இதோ. .இதோ. என் காதல் வரிகள்!

#இளையபாரதி

முன்னேதும் இல்லாத பெரும்காதல் - கவிதை

முன்னேதும் இல்லாத பெரும்காதல் உன்மீது இப்போது தோன்றுதே!
எப்போதும் இல்லாத பேராசை
புதிதாக என்னை சூழுதே!

நீயின்றி நானில்லை...
நானின்றி நீயில்லை...
என்றாகும் நாள் தேடி
என் நெஞ்சம் ஓடுதே!

அன்பாலே நாம் பேசி
ஒன்றான உயிராக
நாம் மாறும் காலங்கள்
கண் முன்னே தோன்றுதே!
வாயேன்...என் வாயாடி!

#இளையபாரதி

Corporate companyக்கு காலு அமுக்குறான்! கவிதை

Corporate companyக்கு
காலு அமுக்குறான்!
Government அ commision கடையா மாத்தி வைக்கிறான்!!

நாடுநாடா சுத்திப்புட்டு
போஸ் கொடுக்கிறான்!
அப்போ...அப்போ...rest எடுக்க
Return ஆகுறான்!

யாரு..யாரு...!?னு பேரக்கேட்டா
என்ன சொல்லுவேன்!??
Goback trendingல
பாக்க சொல்லுவேன்!?

டெல்லியில விவசாயி
அழுது பொழம்புனான்!
அப்போயெல்லாம் பாக்காம
கதற வச்சுட்டான்!

இப்போ வந்து 6000 தரப்பாக்குறான்!?
அதச்சொல்லி ஓட்டுக்கேட்க
மேடை ஏறுறான்!??
ஏழைத்தாயி மகனுன்னு
கண்ணீர் வடிக்கிறான்!???

"ஹமாரே.. தேஸ்க்கே"னு
கைய விரிக்கிறான்!??
Gunஅ வச்சு மக்களையே
சுட்டுத்தள்ளுறான்!??

"கழகமில்லா தமிழகம்"னு
கூவித்திறிஞ்சவன் இப்போ
5 சீட்டு வாங்கித்தொலைக்க
Queue இல் நிக்கிறான்!

எப்படியும்...ஏமாத்த கிளம்பிவருவான்!
" தேசபக்தி" என்று சொல்லி
ஓட்டுக்கேட்பான்!??
அப்பக்கூட ஏமாந்திராதே தமிழினமே!
ஒருத்தனையும் ஜெயிக்கவிடாதே
தமிழினமே!???

#இளையபாரதி

வெட்கமே நீ விலகிப்போகாதே! கவிதை

வெட்கமே நீ விலகிப்போகாதே!
பக்கமாய் ஒரு நாணம் சேர்க்காதே!
இத்தனை நாட்களாய்
எங்கு நீ
இருந்து தொலைந்தாயோ!??
இன்றுதான் இதயம் சேர்கிறாய்!

ஆகா...
அண்டார்டிகா பனிமழையாய்
என்னுள் பெய்கிறாய்!
பெண் Heart-இலே
என்னை விதைக்கிறாய்!

இது புது அனுபவம்!
வாழ்வெங்கும் பெரும்தவம்
வரமாய் வந்தவள் நீயா!
மனதிலே ஒளி ஏற்றிடும்
அன்பு தீயா!!?

அருகில் வந்து...
எதிரில் நின்று...
கண்கள் அணைக்கிறாய்!
ஓ!
அந்த விழிகள் என்னை விழுங்குதடி!
இந்த நொடிகள் நெஞ்சம் பறக்குதடி!

நீயே!
உயிரோவியம்!
காதல் ஆயிரம்
கண்டு கொண்டேன்
தூரிகையின் பாதத்தடத்தில்!

என்னவளே!
என்னுயிராய் இனி நீதான்
வாழ்வளிப்பாய்!
இதயம் எங்கும்
குதூகளிப்பாய்!

கேள்...!
என் காதல் மொழிகள்...
கேள்...!
உன் அழகின் பெருமை பேசும்
அவை அற்புதவரிகள்!

#I_Am_Back

என் இதயத்தின் ஓசை கவிதை

என் இதயத்தின் ஓசை
நீ பேசும் பாசை அது
எப்போதும் இனிதாகும்
உணர்வாலே உருவாகும்
ஒரு காதல் வரமாகும்!

வரும் போகும் நிமிடங்கள்
உன் நினைவாலே புதிதாகும்!
பயணங்கள் தொடர்ந்தாலும்
பாதைகள் கரைந்தாலும்
உன் கரம் கோர்த்து இருந்தாலே
காலங்கள் வரமாகும்!

அழகான மொழியாவும்
உன் பேச்சு என்றாகும்!
பிறக்கின்ற பூவெல்லாம்
உனக்கே என்றாகும்!

அழகியே...நாம் பழகியே
பார்க்கின்ற தருணங்கள்
மனமெங்க்கும் மகிழ்கொட்டும்!

ஓட்டுப்போடுவோம் - கவிதை

வீட்டுக்குள்ள திருடன் வந்தா என்ன செய்வோம் நாம!??
அஞ்சு பத்து வாங்கிக்கிட்டு உள்ளவிடுவோமா... !??
இல்லை...
ஊரைக்கூட்டி அடிச்சு நொறுக்கி
ஓட விடுவோமா!???

சொல்லுங்க...சொல்லுங்க மக்கா...
நீங்க சொல்லுங்க மக்கா...
கால்ல விழுந்து சேவை செய்யும்
நல்லவனா இவிங்க..!?
காசு கொடுத்து பதவி வாங்கும்
கேடிகதான் இவிங்க!

ஓடி...ஓடி..உழைப்போம்முன்னும்
உங்க வீட்டுப்பிள்ளையின்னும்
சொல்லிடுவான் பாரு!
ஜெயிச்சபின்னே கேட்டுடுவான்
யாரு!?? ஆமா நீ யாரு!!

கண்ணுமுன்னே கொள்ளையடிப்பான்
மண்ணை அள்ளி கடத்திவைப்பான்
வீட்டை காட்டை பிடுங்கிக்கிட்டு
வளர்ச்சியின்னு வயித்துல அடிப்பான்!

சாராயம் வித்திடுவான்
ரவுடித்தனம் பண்ணிடுவான்
எல்லாம் மோ(ச)டி கூட்டம்
எறங்கி போடுவான் ஆட்டம்!

இது எல்லாம் அடங்கிப்போக
ஒன்னா தொடங்கிடுவோம் நாம!
ஓட்டு என்னும் ஆயுதத்தால்
விரட்டி விரட்டி அடிச்சுடலாம்!
நல்ல ஆள தேர்ந்தெடுத்தா
இவிங்களை ஓட ஓட தொரத்திடலாம்!

#ஓட்டுப்போடுவோம்

அவள்... மூச்சுக்காற்றில் முனகல் சத்தம் - கவிதை

அவள்...
மூச்சுக்காற்றில் முனகல் சத்தம்
பேசும் மொழியில் போதை உச்சம்
கண்கள் சொருகும் நேரம்
கரங்கள் இறுக்கி அணைக்கப்பார்க்கும்
ஓ! இன்ப வீதியில் இன்றும் உலா!
மேக மெத்தையில் மோக நிலா!

முத்தங்கள் தின்கிறேன் நான்...
முரட்டுத்தனம் என்றேதும் இல்லை...
மோதல் மட்டும் உண்டு
ஊடலின் கூடலில்!

கூந்தல் களைந்த நேரம்
மல்லிகை மழையென தூவும்!
வாசம் வந்து தாக்கும்- புது
நேசம் புன்னகை யாகும்!

யாவும் மறந்து யாவும் துறந்து
தாவும் முயல்கள் தாபம் தீர்க்கும்!
இன்னொருமுறை என்றே மனம் கேட்கும்!
இதுவரை இதயம்
உச்சத்தில் துடிக்கும்
இன்பம் இதுவென
மிச்சத்தை கொடுக்கும்!

இரவுகள் கரையும் நேரம்
இன்பங்கள் நிறைந்து ஓடும்!
மீண்டும் முத்தங்கள் மட்டும் பேசும்
மௌனம் வந்து மூச்சின் காற்றாய் வீசும்!
போதும்...போதும்...என்றே தோன்றும்
ஆனபோதும் ஆரம்பம் மீண்டும் ஆகும்!

#என்னது#

இதய கூட்டுல இருந்து வாட்டுற - கவிதை

இதய கூட்டுல இருந்து வாட்டுற
மனச தாக்கியே உசுர கிழிக்கிற
ஏண்டி...
என்ன பாத்துதான்...
கண்ணடிச்சு தான் காதல் ஏத்துன!

நெருப்பு ஓரமா இருக்கும் பூவ..மா
இருட்டு காட்டுல அழையும் ஆளம்மா
ஐசப்போலதான் வந்து சேரம்மா
வெளிச்சப்பூவென ஒளியை காட்டம்மா

அன்பு மொத்தமா அள்ளிக்கொள்ளத்தான்
இன்ப தேனையும் எடுத்து பருகத்தான்
மழையின் சாரலில் நனைந்து ஆடத்தான்
பனியில் இரவிலே நடந்து செல்லத்தான்
துணை நீயடி... இனி துன்பம் ஏதடி
என்றும் நீயேதான் எந்தன் தாய்மாடி!

#அப்படியா

உன் அழகு மொத்தம்... அள்ளித்திங்க - பாடல்

உன் அழகு மொத்தம்... அள்ளித்திங்க
ஆசைப்பட்ட மனசு இங்க
தேடித் திரியுதடி ...
உன்ன...தேடித்திரியுதடி

உன் கண்ணைப்பார்த்தா போதும்
அது காதல் ரொம்ப பேசும்
உன் பார்வை பட்டாப்போதும்
மனம் பூக்கள் வாசம் வீசும்

கொஞ்சிக்கொஞ்சி பேசும்
சில குருவிகள் உன்னைப் பாடும்
தத்தித்தத்தி ஆட
மலை அருவிகள் உன்னை தேடும்

யாரடி...நீ தேவதை
கூறடி நம் காதலை
பாரடி என் நானிலம்...
நீயடி!

உன் அழகு மொத்தம்... அள்ளித்திங்க
ஆசைப்பட்ட மனசு இங்க
தேடித் திரியுதடி ...
உன்ன...தேடித்திரியுதடி

இன்னும் என்ன தூரம்
நீ சென்றால் கூட தேடும்
காதல் கனவுகள் கூடும்
கரங்கள் ஒன்றாய் சேரும்!

சோலையே...
மலர் மாலையே
அதிகாலையே
என் கண்கள் உன்னைப்பார்க்கும்
இந்தப் பொழுதுகள்
இன்பம் சேர்க்கும்!

தொலைவிலே என் பயணங்கள்
அருகிலே உன் நினைவுகள்
அடடடா ஒரு ஆனந்தம்
மனதிலே தோன்றுதே
மகிழ்வெல்லாம் எல்லை மீறுதே!

காதலே நீ காற்றிலே கரைகிறாய்
மனமெல்லாம் நினைவென நிறைகிறாய்!

உன் பாதம் படருதே கவிதை

உன் பாதம் படருதே
என் நெஞ்சம் மலருதே
வாராய் கண்மணியே!
பெண் பூவாய் பூத்தவள்
தேன்கனிகள் காய்த்தவள்!

அன்பே...நீ நிஜமாகிறாய்!
நீண்ட கடலாகிறாய்!
பெய்யும் மழையாகிறாய்!
பொழியும் துளியாகிறாய்
நடந்து நீ சென்றுதான் நதியாகிறாய்!

மீண்டும்...மீண்டும்
பெண்ணின் ஸ்பரிசம்
வேண்டும் என்றே
கேட்கும் மனதில்
மாயங்கள் நீ செய்கிறாய்!

நாணலே... நாணலும்...
நாணிதான் போகுதே...!
விழிகளில் விழுந்த நான்
எழுந்து போக பார்க்கிறேன்!
இருந்து வாழும் வரங்கள் தந்து
என்னை உன்னில் சேர்க்கிறாய்!

யாரடி...பூங்குயில்!??
இது உன் ராகமா!??
நீயும் சொல்வாயமா!!!
என்னை வெல்வாயமா!

காற்றிலே தவழ்கிறேன்...
காதலாய் மகிழ்கிறேன்...
உன் நெஞ்சமா...அது என் தஞ்சமா...!??
ஆஹ..ஹா...ஆனந்தம்
சென்னை மழை போலவே
என்னை வந்து சேருதே...!

#கடினம்
#மீள்

வானத்து மேகங்களே... கவிதை

வானத்து மேகங்களே...
வாழ்த்துக்கள் தூவுங்களே...
வார்த்தைகள் தீருமோ...
வான் நிலா போதுமோ...
அவளிடம் காதலை சொல்லியே
செல்லுதே பனிக்காற்று!

அவள்...
முகமெல்லாம் வெட்கங்கள் படருதே...!
கண்களும் மெல்லமாய் பார்க்குதே...! பருவத்தின் பறவைகள்...
யாரிடம் அனுமதி கேட்டு நிற்கும்...!??

ஓ!
சிறகையே... திறந்துதான்
பறந்து செல்லும்...!
புது உலகையே கடந்துமே
கால்கள் செல்லும்...
காதலின் ஊட்டங்கள்...
அளவிலா நாட்டங்கள்...
அவளது மொழிகளின் மீதிலே!

முதல் முறை பார்க்கிறேன்...
முகிலென்று வியக்கிறேன்...
அகில் போலே...
அவள் வாசம்...
நாசிகள் துளைக்குதே!

நான் எனை மறந்துதான்
அவளிடம் கறைகிறேன்
அனுமதி கேட்காமல்
வெகுமதி கொடுக்கிறாள்!
புன்னகை மொழியிலே
முத்தங்கள் தருகிறாள்!

அவள்...அவள்...
இனி...
என் வாழ்க்கை...!
அது யாவுமே
இனி அவள்...அவள்...மட்டுமே...
மலருதே காதலும்...
மறுமொழி தேவையா!
கண்கள் தான்
பேசிக்கொண்டு விட்டனவே!

23.07.2019
#மீண்டும்... #மீண்டும்
#எழுகிறேன்

தீரா காதல் கொள்கிறேன்! கவிதை

தீரா காதல் கொள்கிறேன்!
என்தேவதை நீ மட்டும் என்கிறேன்!
ஆசை முழுவதும் சொல்கிறேன்-என் ஆயுள்முழுவதும் வா!வா! அழைக்கிறேன்!

யாரடி பெண்ணே நீ யாரோ!?
நீ இருக்கும் நிமிடங்கள்
நான் வேரோ!??
பொழியும் பனியிலே
தவழும் மழைத்துளி
உன் உதடுகள் உரசிட - உஷ்ணம்
நான் இங்கே உணர்கிறேன்!

அடைமழை நேரத்தில்
உன்புடவை சாரத்தில்
இருந்தே ரசிக்கிறேன்
இயற்கையின் கருணையை!

அடடா...ஆடைக்குள்
மழைத்துளி விழுந்ததே!?
முத்தாய் மேனியில்
முத்தங்கள் கொடுக்குதே!

வெட்கப்பறவைகள்...
விலகிட பார்க்குதே...
சொக்கும் விழிகளில்
காதலும் முளைக்குதே!

கண்கள் பார்த்து உன்னை கவிதை

கண்கள் பார்த்து உன்னை
எந்தன் காதல் சொல்ல வேண்டும்!
காலம் யாவும் கரங்கள்
கோர்த்து நடந்திட வேண்டும்!

கால்கள் நனையும் வரையில்
கடல் நுரைகள் மோதிட வேண்டும்!
காற்றும் களையும் வரையில்
மடி கிடந்து சிரித்திட வேண்டும்!

பகலும் கரையும் நேரம்
பசும் புல்வெளி கிடந்திட வேண்டும்!
இரவுகள் இருக்கும் வரையும்
பேசி மகிழ்ந்திட வேண்டும்!

இளமை தீரும் வரையும்
இறுக்கம் இருந்திட வேண்டும்!
இன்னும் நீளும் நேரம்
இன்ப நினைவுகள் சேர்ந்திட வேண்டும்!

முதுமை வந்த பின்னும்
முத்தங்கள் முளைத்திட வேண்டும்!
தோல்கள் சுருங்கிய போதும்
இதயம் இணைந்திட வேண்டும்!

நடுக்கம் வந்த பின்னும்
உன்னோடு நடை பயின்றிட வேண்டும்!
பொக்கை விழுந்த போதும்
நாம் காதல் பேசிட வேண்டும்!

கண்கள் மூடும் நேரம்
நாம் இல்லாது போகிட வேண்டும்!
இந்த வாழ்வே
நீயும் நானும் என்றாகிட வேண்டும்!

#கனவு

ஒருவார்த்தை சொன்னால் போதும் கவிதை

ஒருவார்த்தை சொன்னால் போதும்
உயிர் வேண்டும்...என்றால் கூட
உனக்காக நான் தருவேனே!
ஒரு பார்வை பார்த்தால் போதும்
பெரும்காதல் பகிர்ந்துடுவேனே!

பெண்ணே...நீ!
எந்நாளும்... என் வாழ்வில்...
மகிழ்பூக்கள் தூவும் மாமழை!
மனதோடு சிலிர்க்கும் பேரலை!

ஒரு விரலில் உலகத்தை தூக்கி
உனக்கென நான் தருவேன்!
உன் அன்பில் கறைந்துறுகி
உருவங்கள் நான் தொலைப்பேனே!

என்னோடு...நீ!
உன்னோடு நான்!
நம்மோடு நாம்!
ஆகாகா...ஆனந்தபூ மழை!

#இளையபாரதி

வெள்ளந்தி சிரிப்பா...? கவிதை

வெள்ளந்தி சிரிப்பா...?
வெளையாட்டு முறைப்பா...?
தாலாட்டும் பேச்சா...?
தலைகோதும் விரலா...?
எதை வைத்து எனை
எட்டிப்பிடிக்கிறாய்
விடாது நெருப்பாய்!

ஓ...இன்னும் இருக்கிறதோ ரகசியம்!?
இந்த உலகத்து அதிசயம் நீயான பின்பு!
முன்போல் முத்தங்கள் கேட்காமல்
இல்லை நீ இப்போதெல்லாம்!

அப்போதெல்லாம்...
அசட்டு சிரிப்பை
உதட்டு தேனில் குழைத்து
சகட்டு மேனியாய்
ஊட்டிவிடுகிறாய் முத்தகளின் வழி!
விழி பிதுங்குகிறேன் நான்!
வியர்வை மழை பொழிவதினால்!

#கவிஞனோ_நான்!???
#உன்_காதல்_சொல்லும்_போதெல்லாம்!

#இளையபாரதி

ஒரு நெடும்பயணம்...கவிதை

ஒரு நெடும்பயணம்...
நீ வா போகலாம்...
ஒரு மயில் நடனம்...
நீ வா ஆடலாம்...

ஒரு கடும் சண்டை...
நீ வா போடலாம்...
ஒரு காதல் முத்தம்...
நீ வா பகிரலாம்...

ஒரு பெரும் தேடல்....
எங்கே நீ என...
என் பயணத்தின்
பக்கத்து இருக்கை
உனக்கென காத்திருக்கு!

மண் மோதும் என் நிழலும்
உன் நிழலை எதிர்பார்த்திருக்கு...
என் கண்ணில் படும்
உன் பிம்பம் எங்கே
உளவுதடி எம் பெண்ணே!

ஓ!
வாழ்க்கையின் வழிப்பயணம்
நீ வந்து கொண்டு இருக்கிறாயா!??
வா.. வா...
மகிழ்மனம்
மலர்கொத்துகளோடு
காத்திருக்கு உனக்கென
கரங்கள் விரித்து!

#காதலுடன்_இளையபாரதி

இத்தனை பேரழகா...கவிதை

இத்தனை பேரழகா...
ஓ! பிறந்தவள் நீதானே...!
அத்தனை அழகினையும்
நீ ஆடையில் மறைத்தாயே!

பெருமழையாய் பேரன்பை
பொழிபவள் நீதானே!
குடையின்றி நான் நனைய
கட்டளை இட்டாயே!

ஒரு துளியில் மூழ்கடித்து
மோகம் என்றாயே!
கால் நனைக்கும்
கடல்அலையாய்
உயிர் நனைக்கும்
காதல் தந்தாயே!

ஆளில்லா நள்ளிரவில்
மஞ்சள்... ஒளிவெள்ளம்
பாயும் தெருவில்
போதை கண்களால் கிறங்கடித்து
எனை பித்தன் என்கிறாய்!

பாதையெங்கும் கரம்கோர்த்து
உடன் நடந்திட கேட்கிறாய்!
பஜக்கென்று முத்தம் தந்து
வெகுளியாய் சிரிக்கிறாய்!
இப்படியாய் எனை மயக்கி
மனம் எங்கும் மகிழென மலர்கிறாய்!

#இளையபாரதி

அதிகாலை நேரம்... கவிதை

அதிகாலை நேரம்...
இரவெல்லாம் பெய்த
பெருமழையின் ஈரம்...
ஊசிக்காற்றாய் நாசி துளைக்க
மொட்டவிழ்த்த பூ ஒன்று
வாசம்வீசி உனை தேடிப்பார்க்கிறது!

நிலவின் இரவு ஒளியை
இரவல் வாங்கிய
பதுமையென...
நீ...
வெண்முகத்தில்
புன்சிரிப்பை விரவச்செய்து
நடந்து வருகிறாய்
பூக்கடை சாலையில்!

ஆளில்லா அறவம் கண்டு
உன் வாசம் யாவையும்
களவு கொள்கின்றன
பூக்கடை மாலைகள்!

ஓ!
இப்படித்தான் மணம் வீசுகின்றனவோ
இறைவன் திருவடி
மாலைகள் யாவும்!

#ரகசியம்_கண்டேன்!

நான் தொலைந்து போகிறேன்! - கவிதை

நான் தொலைந்து போகிறேன்
நீ மறைந்து பார்க்கிறாய்
வான் நிறைந்து மேகமும்..
மழையென உடைந்து வீழுதே!

உடைகள் மாற்றும் தேகமாய்
பொழுதும் மாறிப்போகுதே!
விடிந்த காலை...
நடந்து சென்று மாலையாய்
மஞ்சள் ஆடை சூடுதே!

வெள்ளி முளைத்த வானமும்
நிலவை பூத்து சிரிக்குதே!
இரவு வந்து இங்குமே
இனிமை தேனை பருகுதே!

உறவுப்பெண்ணாய் நீயும்
உரிமையாக இருந்து தான்
இதயவானில் பறவையாய்
இன்பம் கொண்டு பறக்கிறாய்!

ஓ...! நெடுஞ்சாலை- கவிதை

ஓ...!
நெடுஞ்சாலை...
நீ... என் பின்னே...!
தோளோடு தோள்சாய்ந்து...
நாம் போகிறோம்!

ஓ...!
எதிர் காற்று...!
உன்னைப்பார்த்து...
எனைத்தாண்டி...
உனைத்தீண்ட...
ஒடியாருதே!

ஓ...!
சூடான பேச்சு...
காதோரம் நீ பேச...
உன்மூச்சு...
பலமாக
எனைத்தாக்குதே!

ஓ...!
இரு சக்கரவண்டி...!
இணைந்தே ஒரு பயணம்...!
தோளோடு மார் சாய
பள்ளங்கள்...
பயனாகுதே!

ஓ...!
இது நெடுந்தூரம்...
புதுப்புதுக் காட்சி...!
மரமெல்லாம்...
பின்னோடுதே!

ஓ...!
சரசரக்காத்து...
தொடத்தொடப்பார்த்து...
சங்கீத குயில் பாடல்
நமை சேருதே!

ஓ...!
பெண்ணே...பெண்ணே...!
நீ... என்...பின்னே!
இறுக்கி அணைத்து...
இருந்தால் போதும்
வாழ்வின்...வெகுஎல்லை...
நாம் போகலாம்!

#ஒரு_Bike_Ride
#Dream_Girl
#காலை_நேரத்து_கனவு
#மீண்டும்_இளையபாரதி

நீ மழையாய் பொழிந்தால் - கவிதை

நீ மழையாய் பொழிந்தால்
நான் மரமாய் நனைவேன்!
நீ புல்லாய் முளைத்தால்
நான் பனியாய் அமர்வேன்!

விழுதென விழுந்துமே
உன்னை நான் தாங்குவேன்
அகிலென இருந்தே தான்
உன் வாசமாய் வாழுவேன்!

உன் சிரிப்பு போதும்
என் ஜென்மங்கள் நீளும்!
உன் கண்கள் போதும்
என் பார்வை பரவும்!

முத்தங்கள் போதுமென்று
பொய்களை நான் சொல்வேன்
நித்தமும் உணர்ந்து நீயும்
மொத்தமாய் தான் தருவாய்!

அன்னையை போலென்னை
அணைக்கும் பேரன்பு நீ!
குழந்தையாய் உனைத்தாங்கும்
மற்றோரு தகப்பன் நான்!

#அவள்

ஒரு பூவில் பலவாசம் கண்டேன் - கவிதை

ஒரு பூவில் பலவாசம் கண்டேன்
உன்மடியில் தலைசாய
நான் ஆசை கொண்டேன்
யாதொரு பொழுதுமே
உன் நினைவு நெஞ்சில்!
வேறொரு மனிதனாய்
நான் உணர்ந்து கொண்டேன்!

இனிதொரு தருணம்
நீ இருந்தால் மட்டும்!
நீ இல்லா நிமிடங்கள் தனிமையில்
நான் மாட்டிக்கொண்டேன்!

தலைக்கவசம் அணிந்தே
சாலையில் சென்றேன்
உன் நினைவு வர
ஓரமாய் நின்றேன்!

உன் முகம் நினைத்து
நான் சிரித்து சென்றேன்...
போலீசுகாரனும் எனை
பித்தனாய் பார்த்தான்!

புது புது கனா...
இப்போது என்னில்...
நீ அழைப்பில்
வந்தாய் செல்போன் எண்ணில்...
வேறென்ன வேண்டும்...
உன் பேச்சு போதும்...
பொழுதென்ன ஆச்சென்ற
அச்சங்கள் தீரும்!

உறவே... நீ எங்கே? கவிதை

உறவே... நீ எங்கே?
நானோ தனி இங்கே!
யாரோ..உன் அருகில்...
நெஞ்சம் பூ போலே மென்மையாய்
இன்னும் நீ வேண்டும் உண்மையாய்!

இதோ சிறுபறவை பறக்கின்றது...
அது நீ என்றே...
மனம் நினைக்கின்றது!

விரலிடுக்கில் வார்த்தைகள்
வந்து வந்து முளைக்குது
அவை...
உன்னை மட்டும்
கவிதையாய்...
செல்போனில் வடிக்குது!

உயிரின் ஆழம் இறங்கியே - கவிதை

உயிரின் ஆழம் இறங்கியே
உனது மூச்சும் பரவுதே!
பனி வீசும் குளிரென
படபடக்க வைக்குதே!

சிறகு விரித்த பறவைகள்
சிந்தை யாவும் பறப்பதை
உணர்ந்து கொண்ட நொடியிலே
உந்தன் நினைவு வந்ததே!

மகிழம் பூவு வாசமாய்
மடியில் சேரும் குழந்தையாய்
சேலைத்தலைப்பு இருக்கவே
வேலை மறந்து திரிகிறேன்!

கொலுசின் சினுங்கள் ஒலியிலே
இசையின் மழலை பிறப்பதை
இதயம் உணர்ந்து கொண்டதோ
ஒரு துளி நதியென
மகிழின் கண்ணீர் வழியுதே!

பிகில் ஒரு பாடல்

என்னிடம்...#பிகில் படத்துக்கு
ஒரு song எழுத சொன்னா...
அது இப்படி தான் இருக்கும்...

வெறித்தனமா...
வேட்டையாடத்தான்...
வேங்கையன் வந்துருக்கான்!

அந்த காட்டுக்குள்ள
இந்த நாட்டுக்குள்ள
குள்ளநரி கூடிப்போச்சு...
அது குரலிவித்தை
காட்டிக்காட்டி...போடும்
ஆட்டமும் கூடிடுச்சு...

எடுடா...எடுடா...
வேலுக்கம்பை..
அடிச்சு...
உடைடா...உடைடா...
முதுகெலும்பை...

இனிமேலுமே...பொறுமை எல்லாம்
வேலைக்கு ஆகாதுங்க...
எதித்து நின்னு சண்டை செஞ்சு
வேட்டை ஆடிடனும்...
அவன்...வெவகாரத்தை...
அந்த அதிகாரத்தை
அடிச்சு உடைச்சிடனும்...

இனிமே..இனிமே...
போடும் ஆட்டம்...
பிகில...ஊதும்....நம்ம கூட்டம்...

எதிரி..சிதறி..ஓடனுமே...
அடிச்சு ஆட்டம் போடணுமே..
ஊருக்கெல்லாம்...
நல்லபிள்ளை...
இவன் தான்..இவன் தான்... பாத்துக்கோங்க...
சொல்லுறது சரியா இருந்தா...
ஒன்னா வந்து கூடிக்கோங்க....

பிகிலு...பிகிலு...சத்தம் போட்டா...
அரங்கம்...அதிரும் அதிருவேட்டா...

வெ..றி..த்தனமா...வேட்டைக்காரன்...
கெளம்பி...கெளம்பி...வந்துட்டான்டா...
எதிர வந்து நின்னுடாத...
உசுர வீணா விட்டுடாத...

பிகிலு...பிகிலு...
சத்தம்...திகிலு.. திகிலு...

#இளையபாரதி

மனசுக்குள் ஆயிரம் பூக்களே- கவிதை

மனசுக்குள் ஆயிரம் பூக்களே
உன்பேர் சொல்லி தினமும் பூக்குதே
கை மடிப்புக்குள்
மறைத்திட்ட நினைவுகள்
கடல் அலையென திமிறி கிளம்புதே

ஒருவித உணர்வுகள் உயிரிலே
உனை மட்டும் உணர்ந்து கொள்ளுதே
அதைவிட பெரிதென ஏதுமே
எனக்கெதும் இருந்திடவில்லையே...

அரைநொடி பிரிவின் தவிப்பிலே
பனியென உறைந்து போகிறேன்
புதிதொரு உலகத்தின் வானத்தை
உன் கண்களால் திறந்து பார்க்கிறேன்

இனிமைகள் உலவிடும் இதயத்தில்
மேகமாய் நானே படர்கிறேன்
இதழது பேசும் மொழியிலே
நதியென தேன்சுவை கிளம்புதே

பெண்மையின் சாரலில் நனைகிற
மீசையின் ஆசைகள் புனிதமே
இறுக்கியும் அணைக்கும் நேரத்தில்
இறகுகள் உரசிடும் மென்மைதான்

ஆண்மனம் நீட்டிய கரங்களில்
பெண்மையும் சுகமாய் உளவுதே
இதுவரை யாவும் காதலே
இனியும் அதுதான் காதலே!

#நள்ளிரவு
#புதுநினைவு
#ஒரு_கவிதை

#இளையபாரதி

சட்டுன்னு...சட்டுன்னு சட்டுன்னு பாடல்

ஆண்:

சட்டுன்னு...சட்டுன்னு சட்டுன்னு ஒரு பார்வை பாத்துட்டு போகுறா...
பட்டுன்னு..பட்டுன்னு. பட்டுன்னு.. என்
மனசில பச்சை குத்துறா...

ஒரு பூக்கடை நடந்து போகுதா
ஒரு தேன்மழை திகட்ட பாயுதா
ஒன்னும் புரியல...
உண்மை வெளங்களை
அசந்து நிக்கிறேன் ஆம்பளை..

பெண்:

மனசுல மல்லி பூக்குது
நீ வந்ததா வாசம் வீசுது
பெண்மையும் கொஞ்சம் சிதறுது
போதையாய் உன்னை தேடுது

என்னவோ நீயும் பண்ணுற
என்பேர் சொல்லி கொஞ்சம் குழப்புற
மனசெல்லாம் ஒரு நடுக்கந்தான்
சுகமெல்லாம் அதில் இருக்கத்தான்
இனியுமே என்ன செய்யனும்
சொல்லடா என் தேவதா...

ஆண்:

உன் கண்ணுதான்...ஆயுதம்
என் மனசெல்லாம் இப்ப போர்க்களம்
ஒரு சண்டை போடலாம்
அதில் வென்று பார்க்கலாம்
இன்றும் நாளையும்
இனி வாழ்ந்து பார்க்கலாம்!

ஒரு மகன்...தாய்க்கு எழுதுவது!

நீயின்றி நானிங்கே ஏதம்மா
உன் நினைவின்றி என் நெஞ்சம் வாழுமா
அன்பின்றி போகும் உயிர்கள் யாவும் உயிரின்றி வாழும் உருவம் தானே
தாயன்பை பெற்ற பிள்ளைகள் யாவும்
தவமின்றி அடையும்
வரம்தான் வாழ்க்கை!

உன் அன்பில் உலவும்
ஓராயிரம் கோடி...அர்த்தங்கள் யாவும்
தாய்மையின் பெருமை பேசுமே..!
என் போன்ற பிள்ளை
உன் முன்னே நிற்க
இன்னமும் நெஞ்சம் ஏங்குமே!

பசியென்ற ஒன்று...
இல்லாத போதும்
தாய்ப்பாலை தந்த தெய்வம் நீ...!

எனைக்காக்க...
இரவென்றும் பகலென்றும்-நீ
உறங்காத பொழுதுகள்
இன்னும் இங்கே  நீளுதே!

அந்த நிலையிங்கு
இனியேதும் போதுமே...!
என்மடி உனையே
இனி எப்போதும் தாங்குமே!

உன் தந்தை போலே...
உன் அண்ணன் போலே..
உன்பிள்ளை...
உனைநான் தாங்குவேன்...
அது ஒன்றே போதும்
எப்போதும் இன்பத்தில் இயங்குவேன்...!

உன்பசி தீர்த்து...
என் உணவுகள் தீரட்டும்...
உன் அன்பில்...
எந்தன் வாழ்விங்கே...
வாழட்டும்!

#இளையபாரதி

என்னங்கடா இங்க சட்டம்

என்னங்கடா இங்க சட்டம்- நீங்க
கொள்ளையடிக்க போடும் திட்டம்
குண்டும் குழியா ரோடவச்சு
Helmet-அ கேட்டு டார்ச்சர் பண்ணுற
போலீசு குறுக்க லத்திய விட்டு
கர்ப்பிணியை கூட
காவு வாங்குறான்
அதுக்கும்...
விலையை ஏத்தி காசு வாங்குறான்!

தெருவிளக்கு எறியலைன்னு...
சாக்கடை சரியா போகலைன்னு...
ரோட்டுல தண்ணி நிக்குதுன்னு
சாமானியன் கத்தி சொன்னா கேக்கலை...!
கரண்ட்டு கம்பம் விழுந்து செத்தான்
என்னான்னு கூட பாக்கலை!

பஸ்சுல பிதுங்கி போகுது பாரு
Train ல தொங்கி நோவுது கூட்டம்
இப்போ...எங்க போச்சு உங்க சட்டம்
மழை பெஞ்ச தண்ணியில்
ரோடும் போச்சு
நாடும் குட்டி சுவரு ஆச்சு!

முதுமைக்காதல்

காதலே... காதலே...
நரைவந்து நாமும்...
கிழம் எய்தபோதும்
கைத்தடி வைத்து நாமும்...
நடைசெல்லும் போதும்...
கண்கள் மங்கி...
பார்வை இருண்ட போதும்
உன் பக்கமே நானிருப்பேன்!

பெற்ற பிள்ளைகள்...
நம்மை பேனாதுபோயின்
பேரக்குழந்தைகள்...
நம்மின் அண்டாதுபோயின்
அன்பாலே உன்னிருப்பேன் நான்...!

செவியாவும் தூங்கி செவிடானபோதும்
பழமைகள் பேசியே...
நம் பொழுதுகள் கழியும்!

உன் மௌனம் அறிந்தே...
என்மனம்...
ஏதென்று கேட்கும்...!
உன் மேனி நடுங்க
என் உயிர் காயும்...!

பெருங்கூட்டத்தில் நின்றும்
கண்கள் உன்னையே தேடும்...
பெரும்பந்தி என்றாலும்
என் குழந்தை நீ என்றே...
கரம் அன்னத்தை நீட்டும்!

வரும் வெட்கத்தில்...
பொக்கை...
சிரித்தேதான் மகிழும்!

#முதுமையிலும்...
#இளமை_தீரா_காதலுடன்
#உன்னோடு_நானிருப்பேன்

#இளையபாரதி

Tuesday, 16 April 2019

கேடுகெட்ட Election Commison

சட்டம் என்னடா சட்டம்-அது
சவடால்காரன் கொட்டம்!
நீதி செத்து நாளாச்சு
நேர்மை பொதைஞ்சு போயாச்சு
யாரு இங்க யாரு
கொள்ளைக்காரக் கூட்டம்தான் பாரு!

சவக்குழியில சனநாயகம்
பதவி சண்டையில் பணநாயகம்
பார்த்துட்டு நிக்கோம் நாம!
ஏச்சிட்டு இருக்கான் அங்க!

தேர்தல் ஆணையமா இல்ல
தேடும் ஆணையமா...
என்னடா செய்யிரீங்க
Election Commision-ஏ
எங்கதான் இருக்குறிங்க
Election Commision-ஏ

ஓ! ஆளுகிற ஆளுக்கு
காலு அமுக்கித்தான் 
அவன் தூக்கிப்போடும்
எலும்புக்கு நாக்குத்தொங்கதான்
ஏங்கிக்கிட்டு இருக்கிறியா
Election Commision-ஏ!

நாடெல்லாம் எதிர்க்கட்சி கூடாறத்துல
குடைஞ்சு எடுகிறியே IT raid தான்!
ஆளுகின்ற கூட்டமெல்லாம் All Clear ஆ...!
மொத்தமா ஆகிடுச்சா Full Paid தான்!

election ரத்துபண்ணி scene-u காட்டுற
மொத்தமா ஜனநாயகத்தை
போட்டு தாக்குற!
இன்னமும் நம்பவா..?
நீயெல்லாம் நேர்மைக்காரன்னு!?

விவசாயி சின்னத்தையே
சிதைச்சு போட்டுட்ட!
அப்பட்டமா சமத்துவத்தை
புதைச்சு போட்டுட்ட!

போங்கடா நீங்கல்லாம் டுபாக்கூறுதான்
மோடிக்கு காலு அமுக்கும் பலபேருதான்!
பாத்துட்டா சாமிகளா பல்லு பட்டுரும்
(பல பேரின் சாபம் )
அப்புறம் உனக்குமே அல்லுவிட்டுரும்!

போங்கடா...நாசமா...
நீதியும் காசுதான்...
நாளைக்கு ஓட்டுமே காசுதான்!

#அடச்சீ

Sunday, 14 April 2019

கண்ணா பின்னா பேரழகி

M:
கண்ணா பின்னா பேரழகி முன்னப்பின்ன தான் பழகி
கன்னம் கன்னம்  ஒட்டிவச்சு ஒரசிக்கலாம்! 

F:
புல்லுக்கட்டு போல
நீ மேஞ்சுடுவ ஆள
மல்லுக்கட்டு மாமா
நீ ஜல்லிக்கட்டு காளை!

கண்ணா...பின்னா...

M:
உம்மேலே தான்
love u வந்துச்சு
Heart க்குள்ள தான்
ஜில்லு ஜில்லு ஜில்லு காத்தடிக்குது!

F:
மீசை முடி
உரசும் படி
ஒட்டி நின்னு
முத்தம் முத்தம் நித்தம் போடலாம்!

M:
sweet heartu உள்ள நீதானே
ஐசப்போல cooling ஏத்துற!

F:
Dalring மாமா கண்ணடிச்சு தான்
காணாப்போறேன்
கன்னிபொண்ணு நான்!

M:
Cutie பெண்ணே
பட்...டாம்பூச்சியா-நீயும்
பட பட பட சிறக்கடிக்குற!
எட்டித் தொடத்தொட நீ பறக்குற!

F:
naughty நெஞ்சில்
மின்மி..னிபோல்
ஜிகு ஜிகு ஜிகு ஒளி வீசுர!

கண்ணா...பின்னா...

சரணம்-1
M:
உசுரல உரசுர தீயேதீயே
உனக்கென பிறந்தவன் நானேதானே
மனசுல மாட்டுன மீனேமீனே
கதகளி ஆட்டமா ஆடுறாயே

F:
உன்னைப்போல ஆம்பளைய பாத்தபின்னே
என்னென்னமோ ஆகிப்போறே இந்தப்பெண்ணே அட
பாதாம்பிஸ்தா kulfi யா கறையுறேனே
உன்பார்வை பட்டா ஐஸைப்போல உறையுறேனே

ஒல்லி...பெல்லி...
இடுப்புமேல
குறுகுறு குறுவென பாக்குராயே

M:
கில்லி...தண்டா...
அட்டம்போட...
அடடட அட முடேத்துற
சடசட சட மழையடிக்குற
வெடவெட வெட குளிரேத்துற

F:
படபட பட கண்ணடிக்குற
மடமட மட மனம்நெறையுற

மனச தொறந்து காட்டு என் love-u உனக்கு treat-உ

அழகே...அருகே...
வந்து நீ...
மனச தொறந்து காட்டு
என் love-u உனக்கு treat-உ
இனி குத்து song-u beat-u...ஹே...
போடு போடு dance-u - நீ
போடு போடு dance-u!

சில்லாமா..ஹே.. ஹே.. சில்லாமா
சொல்லம்மா... நீ ..நீ.. சொல்லம்மா
க்கில்ஃபா சில்ஃபா
ஒரு song ஒன்னு போடு
Kulfi ஐஸ் ஏ...
நீ கூட சேந்து ஆடு...

இது குத்தாட்டம் போடும் வயசு
அட கொண்டாட்டம் போடுது மனசு
இது குத்தாட்டம் போடும் வயசு
அட கொண்டாட்டம் போடுது மனசு

வாடி...என் lady...
நீ touch-u phone-u screen-u
உன்ன தொட்டுபாப்பேன் நானு!
அடி கூலான ஆப்பிள் ஜூஸு
Taste பண்ணி பாத்துப்புட்டா மாசு

அடடா..திருடா...
நீ மனச தூக்கிப்போன
என் வயச torture பண்ண
உன்ன பாத்தாலே உள்ளாரா ஜாலி
உன்னாலே நான் இப்போ காலி

பிரிட்டிஷ் quene u வாடி- நீ
Beauty ராணி பேத்தி
Party பண்ண போறேன்
ஒரு heartin smily போடேன்!

Heart beatu ஏறிப்போச்சு
love Treat start-u ஆச்சு
இனி செம Dance u போட்டு
நீ Party mood-U காட்டு
ஐச அள்ளிப்போட்டு
ஒரு Chill-u coke u ஊத்து


தேர்தல் வருது சாமியோ!

மண்ணு மணக்க வந்தமழை
எங்கபோச்சோ தெரியல!
ஏரியும் குளமும் இருந்த தண்ணி
என்ன ஆச்சு புரியல!
காசுக்கு பாட்டில் தண்ணிகிடைக்கும் இது
ஆட்டுக்கும் மாட்டுக்கும் தெரியல!

காஞ்சு போன காட்டுல
புழுதி காத்து வீசுது
காக்கா குருவி கூட்டமெல்லாம்
இரையைதேடித் திரியுது
இது மனுசன் மட்டும்...
வாழும்பூமி இல்லையின்னு
யாருக்கு இங்க புரியுது!???

எட்டுவழி சாலையின்னு
மரத்தை எல்லாம் வெட்டுறான்!
புதுசா ஒன்ன நட்டுவைக்க
எத்தனை பேரு இருக்கிறான்!??

இத எதுத்து கேட்டா எல்லாரையும்
போலீசை வச்சு அடிக்கிறான்!
தேர்தல் வந்தா நல்லவனா
காச கொடுத்து நடிக்கிறான்!

ஓட்டுக்கு காசு வந்தஉடனே
நம்ம ஆளும் சிரிக்கிறான்
அப்படியே கொண்டுபோயி
tasmac யில குடிக்கிறான்!

நாடு நாசமாபோனா என்ன
நாம நல்லா இருக்கனும் என்று
இனி யாரும் இருந்துவிட முடியாது!

வீட்டுக்குள்ள வந்து கூட
வாயிலையே சுட்டுறுவான்!
நோட்டை செல்லாதாக்கி உன்னை
வீதியிலே விட்டுருவான்!

Commision வாங்கிட்டு கற்பழிக்க
போலீசுமே விட்டுருவான்!
அரசியல்வாதி தொடர்பில்லேன்னு
அட்வான்சா சொல்லிடுவான்!

இனி உனக்கிருக்கும் ஆயுதம்தான்
"ஓட்டு"ன்னு புரிஞ்சுக்கோ??
காசப்பாத்து போட்டுறாம
நல்ல ஆளுயாரு தெரிஞ்சுக்கோ!

Saturday, 9 February 2019

தீபம் யாவும் விழி மூடிப்போன - கவிதை

தீபம் யாவும் விழி மூடிப்போன
நடு இரவின் கருப்பில்
உன் நினைவு என்னில்
வெள்ளை ஒளியாய் வெளிச்சம் போட்டு
மனதின் திரையில் உந்தன் பிம்பம்
காட்டி வைக்கிறதே!

மறந்து போன நினைவின் தூண்டல்
உன்னால் தன்னால் நிகழ்கிறதே!
கண்ணால் பேசி... மனதால் பார்த்து
இதயம் நிறையும் காதல் வேண்டும்!

ஆசை வந்து
ஆளைத்தாக்கும் நேரம் யாவும்
உன் நினைப்பில்
உருகி வடியும் என் இதயவழியை
கேளடிப்பெண்ணே!

இன்னும் இன்னும் காதல் கூடும்
எந்தன் எண்ணம் யாவும்
உன்னை தேடும்!
நீ நடந்து போகும் பாதை யாவும்
பூவாய் வந்து என் இதயம் நின்று
உன்னை தாங்கும்!

ஓ! காதல் தீபம் ஏற்றும் மாலை
காற்றும் வந்து மோதிப்பார்க்கும்
தோற்றுபோயி வெட்கம் வந்து
உன் காலடியில் விழுந்து வாழும்!

மயக்குதே வானம்
மயங்குறேன் நானும்
தயக்கமே தொல்லையே - உன்னிடம் எல்லைகள் தாண்டியே
வருகுதே நினைவு யாவும்!

நீலவானம் நீந்திப்போகும்
நிலவும் கூட உன்னைக்கண்டால்
காதல் செய்ய ஏங்கிச்சாவும்!
நான் மட்டும் விதிவிலக்கா!??
உன் மீது காதல் வைத்தேவிட்டேன்!
இதோ. .இதோ. என் காதல் வரிகள்!

#இளையபாரதி

Thursday, 7 February 2019

முயற்சி- கவியரங்க கவிதை

தீதற்று பிறந்திட்ட பெருந்தமிழே!
பெரும்புகழ் சேர்த்து
வாழ்கின்ற செந்தமிழே...!
இளமை மாறா முதுமை நிறைந்த
மூத்த மொழியே!
மொழிகளின் பேரன்னையே!
நற்சுவை நவிழும் நூல்களின்
நல்சுனையே!
பிரிவற்று பேதங்கள் களைந்து
அறம் கொண்ட அன்புக்கரம் நீட்டும்
இயற்கையோடு இணைந்த தமிழே
புகழ் வணக்கம்!

தமிழ் ஈன்ற திருமகனே!
நல்தடம் பதித்த பெருந்தலைவா!
தமிழன்னை கவிஅணிகள் புனைந்திட கற்பனை சுரங்கம் திறந்தவா!
இக்கவிப்பேரரங்கம் சிறந்திட
தலைமை ஏற்ற பெருந்தகையே
தமிழ் வணக்கம்!

பறந்த பேரவை நிறைந்த தமிழ்ச்சொந்தங்களே!
முத்தமிழ்பால் உயிரிணைத்து
முக்கனித்தமிழ் சுவை பருக
எத்தனித்த பேரவா கொண்டு
கவி அரங்கம் விரவி இருக்கும்
நற்றமிழ் புதல்வர்களே!
இக்கவியின் நல் வணக்கங்கள்!

மகத்துவம் கொண்ட மானுட வாழ்வில் நற்பெயர் பெற்று உயர்ந்திட
அடியேன் எடுத்துரைக்கும்
பெரும் பொருள்-முயற்சி!

எத்தனை இன்பதுன்பங்கள்
எதிர்பட்டாலும் அத்தனையும்
வீழ்த்தி அடியெடுத்து வைக்கும்
பேராற்றல் முயற்சிக்கு மட்டுமே உண்டு!

அறிய பேரறிவு பெற்றாலும்
திண்ணிய திறமைகள் கொண்டாலும்
எண்ணியபடியே இலக்கினை
முயற்சியற்று முடித்தவர் எவருளர்!?

பெரும்பாறையிடத்து ஒரு வித்தும்
நல்நிலமதில் ஒரு வித்தும்
விழுந்த போதும்
நன்னிலமே நான் கொண்டேன் என
சோம்பல் கொண்ட வித்தது(வித்து+அது)
சூம்பி மடிந்த கதை உண்டு!

இடர்பட்டேனும் இன்னமும்
என்னுயிர் பிறந்தெழும் எனும்
திண்ணம் கொண்ட விதை ஒன்றில்
பெரும் முயற்சியால் முட்டி
பாறை இடுக்குகள் உடைத்து
எழுந்து நிமிர்ந்த செடி சொல்லும் முயற்சியே...வெற்றிகள் குவிக்க வல்லதென்று!

நல்லதே பணமும், திறமையும்
உழைப்பும் என்றாலும் இவை
உறங்கிப்போகிடின் ஏது பலன்!?

இவை இல்லா மனிதனும்
புதிதுபுதிதென முயன்று
தோற்றாலும் அது தரும் கற்பிதம்
செய்திடுமே அற்புதம்!

அரிய பெரும் சாதனைகள்
கண்டுபிடிப்புகள் அத்தனையும்
விளைந்தது இடைவிடா முயற்சியினால்
தானன்றி வேறெதில்!

திறமை கொண்டும் அதை வெளிக்காட்டும் முயற்சியற்றோர்
வாழ்வில் முன்னேறி வருதல் என்பது
இலக்கின் எதிர்திசையில்
விரைந்து செல்லும் பரியின்
நிலையாகும்!
ஒரு போதும் உயர்வை நல்கிடாது!

உழைத்து முடித்தவன்
உடல் வியர்வை என
முயற்சி செய்பவன்
திசை எங்கும் வெற்றிகள் முளைக்கும்!
புது சக்திகள் பிறக்கும்!

முயற்சி என்பது
நெஞ்சத்தில் இருந்திட
புகைவண்டி இயக்கிட உதவும்
நிலக்கரி தீயென
மனிதன் சக்திகள் பெற்றே
வெற்றிகள் குவித்து
வாழ்வில் நிலையான உயரத்தை அடைவான் என்றே கவிபாடி

நல்லதோர் வாய்ப்பை
பொன்மாலைப் பொழுதில் நல்கி
தமிழோடு நம்மை உறவாட செய்த
கவியரங்க ஏற்பாட்டாளர்களுக்கும்,
சீரிய தலைமையாய் நின்று
திறம்பட கவிகளின்
நன்மொழிகள் ஒலித்திட செய்த நடுவர்
அவர்களுக்கும்,
கதிர் நிலத்தே விளைந்த பயிரில்
முத்தெது...பதரெது...என்று
கண்டுணரும் பேராற்றல் கொண்டோராய்
பாடிய கவிகளின் தரம் அறிந்து
நல்சுவை பருகிடும்
பார்வையாளர்களுக்கும்
உயிர் தொட்டு யாவுமாய் என்னுள்
நிறைந்திட்ட தாய்த்தமிழுக்கும்
அடியேனின் அன்பு கலந்த
நன்றியும்...வணக்கங்களும்!

#கவிஞர்_இளையபாரதி_ஹரிஹரன்

Sunday, 3 February 2019

அம்மா - கவிதை

உதிரம் பிரித்து கருவைத்தரித்து
உயிரில் உயிரை விதைத்து
ஒவ்வொரு நாளும்
கண்ணயரா இரவுகள் கடந்து
ஈருடல் சுமந்து
ஓருடல் பிறப்பித்த
பெரும் கடவுள் அம்மா!

தனக்கெனும் வாழ்வை
பிறர்க்கென தவத்தின்
வரமாய் கொடுத்தே
பிள்ளைகள் வளர்க்கும்
பெண்மை அவள்-அம்மா!

அன்புக்கடலில் உலவவிட்டு
மழலையின் இன்பஅலைகள்
கரைகடக்கச் செய்பவள்-அம்மா!

இடரென்று எத்தனை வந்தாலும்
அத்தனையும் தாங்கும்
அரண் என்றே முரணின்றி
முத்தங்கள் தருபவள்-அம்மா!
முற்றுப்பெறா அன்பின்
முத்தமிழ் சொல் அம்மா!

எவ்வொரு உயிரிலும்
பிறப்பை தருபவள்
தனியொரு சிறப்பை
தனக்கென அணிந்தவள்-அம்மா!

#இளையபாரதி

Monday, 28 January 2019

ஒரு ஓவியம் பேசுகிறது! கவிதை



முகிலா...
உன் தூரிகை தீட்டிய
காரிகையின் கற்பழிப்பை
நான் சுமந்து காட்சிப்பட்டேன்!

கருவறைக்குள்
காமத்திரை திறந்திட்ட
அந்தணன் செய்யா-துவேஷம்
நீ செய்தாயாமே!?

ஓ!
தேசபக்தர்கள் கூடிவிட்டனரா...?
ஆசிபாவின் அந்தரங்கம்
ஆலயத்திற்குள் சிதைக்கப்பட்டதை
அறியவில்லையோ-அவர்கள்!

அன்னையாக அவதானிக்க
மூன்றுநாள் குருதிக்கொடை
இயற்கை என்றான பெண்டிர்
சபரிமலை சாமி தரிசனம்
செய்தலாகாதாமே
சொல்லியது அவாதானே!?

காவி நாடென்று பாவி நாமென்று
நிலங்கள் பிடுங்கப்படுவதை...
டாலர் தேசத்து நிலையென்றே
விலைகள் ஏறிச்செல்வதை...
நாடுநாடாய் ஏழைத்தாய் மகன்
விமானம் பறந்து செல்வதை...
மாட்டுக்கறியுண்டாய் என மாந்தர்
ஆட்படும் மரணவதை...
யாவும் கூறினாயாமே முகிலா!?

பாண்டேக்கள்...
ஊளையிடும் மனுதர்மத்தை
பக்தாள்கள் சிதைத்தெறியும்
மதங்களின் சமதர்மத்தை...
நித்தமும்...நிர்வாணப்படும்
நீதி தர்மத்தை...
அக்கிரமம் என்றா சொன்னாய்-முகிலா!?

துப்பாக்கிகள் துழைத்தெறியும்
கவுரி லங்கேஷ் கழு(ரு)த்து ரத்தத்தை
காவி டவுசர் என்றே
வரைந்தே வைத்தாயாமே முகிலா!?

நன்நூல்கள் வழி தந்த
ஆட்சி இல்லை
இது முந்நூல் செய்யும்
வலி தந்த ஆட்சியென்றே
அறியாதவனா முகிலா!?

தூரிகை...ஏந்திவிட்டாய்...
புயலொன்று ஏவிவிட்டாய்...
ஓவியம் நான் பிறந்துவிட்டேன்!
சங்கிகள் கதருவது கேள் முகிலா!
இவை சதியென்றே
ஓங்கி நீ சொல் முகிலா!

#இளையபாரதி

Monday, 21 January 2019

தைப்பூசம்..மார்க்கம்பட்டியில்!

தைப்பூசமும்... இழந்தைப்பழங்களும்!

எம்பெருமான் முருகனுக்கு பக்தர்கள் மார்கழியில் மாலையணிந்து காலையும், மாலையும் இறைவழிபாடுகள் செய்வர். மைக்செட் குழாய்கள் இறைகானம் பாடும். வருடம் முழுவதும் அமைதியாகவே நகரும் என் கிராமத்தின் பொழுதுகள்...இந்த பக்தி பாடல்களால் ஒரு ஆரவாரத்தை நம்முள்ளே கடத்திவிடும்.

வெள்ளியும், செவ்வாயும் பொங்கச்சோறும், சுண்டலும் கிடைக்கப்பெறும் பொன்னாள் ஆக மாறிவிடும். அதிகாலை தொட்டே முருகன் கோவில் விழாக்கோலம் பூண்டுவிடும். நாங்களும் அங்கேயே சுழன்று கொண்டிருப்போம்.

எத்தனை பொங்கல் வைப்பார்கள்...?
என்னவெல்லாம் இன்று கிடைக்கும்
என்றே ஒரு ஆர்வம் தொற்றிக்கொள்ளும்.
இரவு நேர பஜனைகள் சற்று நீண்டு செல்லும். நாங்கள் காத்திருந்தாலும்...தூக்கம் காத்திறாது வந்துவிடும். அரைத்தூக்கத்திலும் ஆசையோடு பொங்கலும் சுண்டலும் வாங்கிவிட்டே வீடு செல்வோம்.

தைப்பூசம்...அன்றைய நாட்களில்
ஒரு உற்சாக திருவிழாதான்.
அன்னதானத்திற்காக  முதல் நாளே தேக்கமரத்து இலைகள் பறிக்க...ஏதோ வேட்டைக்கு செல்வதாய் செல்வர் இளைஞர் கூட்டம். நாங்களெல்லாம் சிறுவராய் இருப்பதால் அவ்வளவு எளிதாக அழைத்து செல்லமாட்டார்கள்.

எப்போது... தேக்க இலை பறிக்க அழைத்து செல்லப்படுகிறோமோ அப்போது நமக்குள் ஒரு தனி கெத்துதான். முசுறுகள்(செவ்வெறும்பு) அரண் செய்திருக்கும் தோட்டத்தில்...வேட்டைக்காரன் என நுழைந்து இலைகளை பறித்து குவிக்க வேண்டும். யார் அதிகம் பறிக்கிறார்கள் எனும் போட்டி எமக்குள்.

இதனிடையே...தேக்கந்தோப்பில் வளர்ந்திருக்கும் இழந்தை மரங்களில் பச்சையாகவும், அரைச்சிவப்பாகவும் பழங்கள் இருக்கும். பெரிய பையன்களை மீறி, இழந்தை முற்களைத்தாண்டி நமக்கானவற்றை பறிப்பதென்பது ஒரு சுவாரசிய போர்தான்.

பின்னர்...மாலையில் தேர் கட்டிவரும் ட்ராக்டரை கழுவ அம்பாள் கோவில் குளம் செல்வர். அந்த ட்ராக்டரில் இடம் பிடித்து செல்வது மீண்டும் ஒரு ஆனந்த போராட்டம் ஆகிவிடும். குளத்தில் தொப்பென்று குதித்து, ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை இறைத்து அடிக்கும் கூத்து தந்த மகிழ்வை இன்றைக்கு கோடி ரூபாய்களால் கூட தர முடியாது.
இன்றைய சிறுவர்களும் பெறமுடியாது அந்த பேரானந்தத்தை!

இரவில்...அன்னதானத்திற்கு சமைப்பர்.
அதற்காக காலையில் இருந்தே...அரிசியோ...புளியோ... காணிக்கையோ..கொண்டுவந்து தர சொல்லி மைக்கில் கூறுவர். அதில் நாமும் ஒரு முறை சொல்லிவிட ஆசை துடிக்கும்.அப்பப்போ நடந்தும் விடும்.

மாலையில் நாங்களெல்லாம் தண்ணீர் தூக்கி, சிறு சிறு வேலைகள் செய்து கோவிலே குற்றாலம் என துள்ளிக்குதித்து ஆட்டம் போடுவோம்.
நள்ளிரவில்..கருப்பட்டியும்..சுக்கும்..மல்லியும் சுண்டந்காய்ந்த தேனீர் வரும் பாருங்கள்.!  அதன் மணம் இப்போதும் நாசியில் நர்த்தனம் ஆடுகிறது.

மறுநாள்...
தைப்பூசதிருநாள்!
சுற்றுப்பக்க உறவுகள் எல்லாம் குவிந்து இருக்கும் கோலாகல திருநாள்! பக்தி பாடல்களால் பஜனை நீண்டு கொண்டே செல்லும். கூட்டம் மூன்று வீதிகளிலும் முண்டியடித்துக் கொண்டிருக்கும்!
இங்கும் அங்கும் கால்கள் பரபரக்கும்!

"ஏய்..எப்பா... இந்த பக்கம் சோத்தை கொண்டுவாயா..அங்க பாரு இன்னும் இலையே கொடுக்காம இருக்கு. ஏ..சாமி.. சீக்கிரம் சாப்பாட்டை அள்ளிபோடுய்யா..."இப்படியாக மைக்கில் குரல்கள் ஒலிக்க...கை நிறைய அன்னமும், மனம் நிறைய பக்தியும், ஊர் நிறைய மகிழ்வும் குவிந்திருக்க
ஆனந்தமாய் அன்னதானம் நடந்தேறும்.

அந்த நாட்களை கொண்டுவருமா
இன்றைய நாட்களின் தைப்பூசம்!
ஏக்கத்துடன்..என்னைப்போன்றே பலர்...என் கிராமம் விட்டு வெளி ஊர்களில்!

#தைப்பூச_வாழ்த்துக்கள்!

Sunday, 20 January 2019

கதையும்...காதலும்...ஒரு பாடல்!

தோல்விகள்...
எப்போதும் எல்லோரையும்
மொத்தமாய் சாய்த்து விடுவதில்லை.
ஏனெனில்...கல்லூரி நாட்களில் போலியான பட்டாம்பூச்சிகள் பறந்தடிக்கும் இதயத்தோட்டத்தில்
காதல் மலர் ஒன்று மொட்டுவிட்ட தருணம். அதன் அழகை...வாசம் குறையாமல் அவளிடம் தந்துவிட எண்ணினேன்.

அதுவரை எனக்கு நானே அறிந்துகொண்டதில்லை...அவள் என் நினைவுகளில் வந்துபோவதை. அந்த நினைவுகள் என் மனதில் மாநாடு நடத்த அனுமதி கேட்டுவந்த வேளையில்...அவளுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன்.

பெண்ணவளே...காதல் பூக்கள் உன்னிடத்தில் தஞ்சம் கேட்கின்றன. நெஞ்சம் தருவாயா... நானும் உடன் வந்து தங்குவதற்கு என்றே அனுப்பி வைத்தது
அனுமதி கடிதம்தான்.

அதற்கே...
நான் தேசதுரோகம் செய்ததாக விசாரணை இன்றி மரணதண்டனை தந்துவிட்டாள் என் நட்பிற்கு.என்
முகம் பார்த்திடவில்லை. என் விளக்கங்களுக்கு செவிமடுத்திடவில்லை. இடையே வந்து தொலைத்த என் பிறந்தநாளின் இனிப்பையும் எடுத்து ருசித்திடவில்லை.

மொத்தமாய்...தீ மூட்டிவிட்டாள்
அத்தனை நாள் நட்பிற்கும். வெட்கத்தோடு வேதனையும் வாட்ட...
கோபமாய் கிறுக்கி எறிந்தேன் கவிதை ஒன்றே. ஆயினும் மனம் தேறவில்லை.

அந்த தோல்வி துவட்டி எடுத்த வலிகளில் வந்து சேர்ந்தது இந்த பாடல் வரிகள் தான். அதுவரை கவிதையாகவே எழுதிப்பழகியவன் இசையின் வடிவினுக்கு "அணி" தர பாடல் எழுதிப்பழகலானேன்.

ஒரு தோல்வியும்...அது தந்த சோகமும்
வேறொரு சுகமாய் என்னோடு பயணிக்கிறது இன்றுவரை பல்வேறு பாடல் வரிகளாக. ஆனால் அவையும் என்போன்றே தனித்து இருக்கின்றன இசையின் கூடல் இன்றி.

எமது முதல் பாடல்வரிகள்...
மொத்த காதலையும் சுமந்து நிற்கும் தருணம்...

#Soup_Song

பாதகத்தி
பாவி நெஞ்ச கொன்னுபுட்டாடா
உசுர கையில் எடுத்து வச்சு தின்னுபுட்டாடா 
நட்பாக இருந்த நெஞ்சு
காதலா மாறிப்போக
நட்பும் தண்ணீரில் தள்ளாடுது !
மனம் கண்ணீரில் அள்ளாடுது !

நேத்து வர இருந்த நட்பு
இன்னைக்குத்தான் செத்துபோச்சு
என்னோட இருந்த நாள
நாளைக்கு இல்லாம செஞ்சு புதைச்சுப்புட்டாடா
அவ புதைச்சுப்புட்டாடா!

பூவாக இருந்த நெஞ்சு
தீயாத்தான் மாறிப்போச்சு
யாரு இங்கு
அத வந்து எட்டிப்பாத்தது
கையில் தொட்டுப்பாத்தது  !

தெருவில் வீசிப்போன இதயம்
துடிச்சு நிக்குது
அத காலில் எட்டி உதச்சுப்புட்டு
தள்ளிப்போகுது
அவ நெஞ்சு போகுது ...
மனம் பிஞ்சு போகுது!

ஏனோ தெரியவில்லை
ஏ நேரம் சரியும் இல்ல
காயம் இன்னும் ஆரவில்லை-
உள் மனசுல
எந்தன் முள் மனசுல!

என் நெஞ்சு இளவம் பஞ்சு
நீ அள்ளி வச்சு கொஞ்சு
மாட்டேன்னு தள்ளிப்போகாத
ஏ உசுர கிள்ளிப்போகாத
உன்ன  நான் மறக்கவில்லை
மறக்கவும் போறதில்லை
ஏ உசுர கொளுத்திப்போகாத!



Saturday, 19 January 2019

நாட்டியக்காரி கவிதை


நாட்டியக்காரி!


ஆடல் கலை வித்தகி
மேடை விளக்குகள் 
வண்ணமாய் மின்னும் போதும் 
தனித்த பெருவொளியாய்
அரங்கம் நிறைபவள்!

ஆட்டச் சிறப்பினும்
ஆடை குறைப்பையே கேட்கும்
சமூகத்தின் கண்களுக்கு
மார்பில் கொஞ்சமும்
இடையில் கொஞ்சமும்
உடையணிந்தே உற்சாகம் தருபவள்!

இளமை தீயில்
கற்பை அழிக்காது இருப்பவள்!
ஆனாலும்....
ஓர் இரவுக்கு அவளிடம்
விலை கேட்டே நகர்ந்தனர்- மாந்தர்!

சோகப்புன்னகையை
வேகமாய் காட்டிவிட்டு
விலகி செல்பவள்!
விடியா இரவுகளில் குடும்பத்தின்
விளக்காய் இருப்பவள்!

அணைக்கத்துடிக்கும்
ஆடவர் கூட்டம் அரங்கம் நிறைகிறது!
கலையின் சிலை அவள்
அங்கத்தின் துள்ளலில்
இளமை நிறைகிறது!

இன்னமும் அவள் பத்தினி
என்பதை ஏற்க மறுக்கிறது!
நாட்டியக்காரிதானே...
இல்லாமலா இருக்கும்-எனும்
ஏளன வார்த்தைகள் அவள்
இதயம் கிழிக்கிறது!

#இளையபாரதி

நீ தொட்டுப்பின்னிடும் - காதலி!

காதலி...!

நீ தொட்டுப்பின்னிடும்
கருஎழில் கூந்தல் அமர
காத்திருக்கும் மல்லியும் ரோஜாவும்
இட நெரிசலில் சிக்குற
நீ கூந்தல் உதற
சிதறிய துளி ஒன்று
வெயில் காய்ந்து வெள்ளை முத்தாய்
உன் கழுத்துப் பாசியாக காத்திருக்கிறது!

தொட்டுத்தடவி மீதிவிட்ட மஞ்சள்
உன் முகம் சேரா சோகத்தில்
மூர்ச்சையாகிப்போக...
உன் மேனி பட்டு வழிந்த நீரால்
மீள்உயிர் பெற்றதடிப் பெண்ணே!

பால்கடலில் திணை குழைத்து
செய்ததான உன்மேனி
குளிக்கும் காட்சி கண்டு
குளியல் அறைச்சுவரும்
காதல்ப்பிணி கொண்டதடி!

உன் மார்பமர்ந்தே ஈரம்பட்ட
பட்டாடையும் அதுவெயில்காயும் கயிறும்
புனிதமாகிப் போனது அறிவாயா!

பொன்னெடுத்து மடித்த சேலைகட்டி
நெற்றிப்பொட்டிடும் நேரத்தில்
உன் பெண்மை வாசம்
நாசி துளைக்குதடி!
நரம்பு சிரலிற்குதடி!

கால்கொலுசின் இசையொலி
கர்நாடக சங்கீத சபைஏறி
இசைத்தென்றல் வீசும் நேரம்
இதயவாசல் உன் வருகை பார்க்குதடி!

கவிவித்தை காட்டும்
எழுத்துக்கள் எல்லாம்
நம் காதல் பாடுதடி!
நறுமுகையே யாழிசையே
என் முத்தம் ஏற்றுக்கொள்ளடி!

#இளையபாரதி

Thursday, 17 January 2019

தமிழென்ற மொழியாம்- கவிதை

தமிழென்ற மொழியாம்
அமுதென்ற சுவையாம்
உழவென்ற தொழிலாம்
உயிரென்ற உறவாம்
எங்கள் நிலத்தே
பகலவன் ஏற்றிய
பசுமை ஒளியில்
உயிரினங்காள்
நன்றி நவிழும்
நல்லதோர் இனத்தின்
இணையற்ற பெருவிழா
"பொங்கல்" திருநாள்
கொண்டாட்டங்கள்
அலுவலகத்தில்!

வாழ்த்துக்களுடன்
#இளையபாரதி!

ஹரியின் குழந்தைத்தனம்! கவிதை

குழந்தைத்தனம்!

அவன் கல்யாண வயதைத்தொட்டுவிட்ட சமூக விலங்கு. எழுத்துக்களோடே உறவாடும் இணையவாசி. இன்னும் யாதொரு காதலும் கொண்டிராத போலிக் காதலன். மழலையினின்று மாறி வந்துவிட்டாலும் குழந்தைத்தனம் குறையாத குரங்கு பொம்மை. அன்பை விதைக்கவும், எடுக்கவும் தெரிந்த உயிர் நேசன்.

அதிகாலை விழிக்கும் போதெல்லாம் அம்மாவை அருகே அழைத்துக்கொள்வான். ஒற்றை முத்தத்தை கொடுத்துவிட்டு...பத்து முத்தம் வேண்டுமனென கேட்கும் கந்துவட்டிக்காரன். கட்டி அணைத்து சில நிமிடம் தூங்கக்கேட்கும் பிடிவாதன்.

கண்கள் திறந்ததும் கண் சிமிட்டியே காஃபி கேட்கும் தூங்கமூஞ்சி...! அன்னை அவள் சமையலறையில்...சமைக்கும் போதெல்லாம்...முதுகை கட்டிக்கொண்டு முத்தம் கொடுக்கும் இடைஞ்சல்காரன்.

தொலைக்காட்சி பாட்டு இசைக்கும்போதெல்லாம் ...சேர்ந்து ஆடிட அழைக்கும் தொல்லைக்காரன்.
தோள் சாய்ந்தே பேசி மகிழும் மழலைக்காரன்.

உண்ணும் போதெல்லாம் ஊட்டிவிட கேட்கும் செல்லப்பிள்ளை...
அன்னைக்கும் அன்னம் ஊட்டிவிடும்
மழலைத்தாய் அவன்.

நேற்று பிறந்த மகவென
மறுக்காமல் கட்டியனைத்தே
தாலாட்டு கேட்கும் சிறுபிள்ளை!

தட்டிக்கொடுத்தே சிரிக்கும்
அன்னையின் அரவணைப்பில்
தூங்கிப்பழகிய வாலிப_குழந்தை அவன்!

எத்தனை வயது ஆனாலும்
அன்னைக்கு குழந்தைத்தனம் மாறா
பிள்ளை தானே நாமெல்லாம்!

#அன்னையும்_நானும்!
#இளையபாரதி

களனியோடு விளையாடா கவிதை

களனியோடு விளையாடா
காளையர் கூட்டம்
கணினியோடு உறவாடும்
Computer உலகமிது!

ஆயினும் அன்னைத்தமிழ் நிலத்தே
உழைத்துக்களைத்தவன் வியர்த்துளிகள்
பொன்னினும் பெரிதாய் புகழ் சேர்க்க
ஆதவன் பெருவொளியால்
தீதின்றி வளர்ந்த நற்கதிரின்
அறுவடைத் திருநாளாம்
தைத்திங்கள் பொங்கல் பெருநாள்
உலகத்து தமிழர் திருநாள்!

தீங்குகள் சூழ்ந்தாலும்
நிமிர்ந்தெழுந்தே நின்று வென்ற
ஜல்லிக்கட்டுப் பெரும்புரட்சி
காளைகள் களம் நிறம்பட்டும்!

நிமிர்ந்த கரும்பின் சுவை
உள்ளம் நிறையட்டும்!
சுவை கூட்டும் வெல்லமும்
பாலும் பச்சரிசியும்
நெய்யும் முந்திரியும்
செம்பானையத்தே பொங்கி
இல்லமும் உள்ளமும்
மகிழ் நிறையட்டும்!

அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும்
அன்னைத்தமிழ் செம்மொழியில்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

#இளையபாரதி

கருத்த உடம்புக்காரி - கிராமிய பாடல்!

கிராமிய பாடல்!

கருத்த உடம்புக்காரி
கண்டாங்கி சேலைக்காரி
ஒய்யார கொண்டை போட்டு
களத்து மேட்டுப்பக்கம்
கஞ்சி கொண்டு வார புள்ள

வார சந்தையில
வலையலு வாங்கிருக்கேன்!
தேனி சந்தையில
தோடு ஒன்னு வாங்கிருக்கேன்!

சீமை போயி நானும்
சிலுக்கு துணி வாங்கிருக்கேன்!
சின்ன இடுப்புக்குத்தான்
ஒட்டியாணம் வாங்கிருக்கேன்!

மாமன் மனசுக்குள்ள
மாடி கட்டி வாழும் புள்ள
தையும் பொறந்திரிச்சு
பொங்கல் வந்திருச்சு

சல்லிக்கட்டில் மாமன்
காளை புடிக்க போறேன் புள்ள!
பொண்ணு பொருளையெல்லாம்-பரிசா அள்ளிக்கிட்டு வாரேன்புள்ள!

ஊரு சனமெல்லாம்
ஒன்னா இங்க கூடி நின்னு
பொங்கல் பொங்கிடனும்
இன்பம் நெறைஞ்சிடனும்
என்று சொல்லி நாம
சாமியத்தான் கும்பிடலாம்!

தீதொழித்து எழும் சூரியனே கவிதை

தீதொழித்து எழும் சூரியனே
உமை போற்றுகிறோம்!
வாழ்வளித்து மகிழும் தமிழ் மண்ணே
உமை போற்றுகிறோம்!

நிமிர்ந்தெழுந்து வளர்ந்த
செங்கரும்பே
பச்சைப்படலம் விரித்த நெற்கதிரே
நிலத்தே விளைந்த
பொன்பொருளே
உழைப்பில் உறுதுணையான
கோ இனமே
உமை போற்றுகிறோம்!

வானே.. மழையே...
வாழ்வளித்த மண்ணே...
நன்றி கொண்டே நாங்கள்
நற்பொங்கல் திருநாளில்
இறையென உம்மை போற்றுகிறோம்!
எந்நாளும் எம்மை காத்தருள்வாய்!

இல்லமும் உள்ளமும்
பெருமகிழ் பொங்க
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

#இளையபாரதி

ஒற்றைத் துணியில்-காந்தியடிகள் கவிதை

ஒற்றை துணியில்
நாட்டின் மானம் காத்து நின்றவர்!
எரியும் தீயின் நடுவே
அகிம்சை மெழுகை பார்த்துக்கொண்டவர்!
ஆயுதங்கள் உரசும் சண்டையில்
அன்பை பேசி தனித்து நின்றவர்!

போர்கள் ஓய்ந்து போகும்-சிந்தும்
ரத்தம் காய்ந்து போகும்
அன்பு மட்டும்
உயிரின் ஆழம் பாய்ந்து
நாளும் வாழும் எனும்
தத்துவத்தில் வாழ்வை
அமைத்து தேசத்தந்தை ஆனவர்!

பொய்மை மறுத்து
மெய்யியலில் ஆட்சி செய்தவர்!
உலகப்பந்தில் இந்தியத்தின் சுதந்திரத்தை
வென்று வைத்தவர்!

எந்த நாளும் நம்மில்
புகழால் மறையாது
வாழ்ந்து கொண்டிருப்பவர்...!

அன்னை தேசத்து தந்தையானவர்
அனைவருக்கும்ம் தாத்தா
எனும் உறவு தந்தவர்
காந்தியடிகள்!

பெருமையும் பெருமைப்படும்
அருமையானவர்-
அண்ணல் காந்தியடிகள்!

திமிலு முழுக்க திமிரு இருக்க - கவிதை

திமிலு முழுக்க திமிரு இருக்க
சீறி வாடா சிங்ககுட்டியே!
கொம்பு சீவி அங்கம் சிலிர்க்க
பாய்ஞ்சு வாடா பாலமேட்டுல!

அடங்காத ஊரு ஆளுக யாரு
அலங்காநல்லூர் பேர கேளு
பீட்டா கூட்டத்துக்கு அல்லு விட்டுரும்
ஜல்லிக்கட்டு புரட்சி வெடிச்ச
மண்ணு இதுதான் வணங்கி நிப்போமே!

மெரினா அதிர...உலகம் உதர
கூடி நின்னோம் கோடி சனங்க
கேடிப்பயல்லாம் ஆடி அடங்க
வேட்டை யாடுனோம்!

கோட்டை சுவரில் அதிர்வு கிளம்ப
வீர முழக்கம் எழுப்பிக் காட்டினோம்
இது மண்ணோட பெருமை
முன்னோர் தந்த அருமை ஜல்லிக்கட்டுதான்!
நாங்க விடமாட்டோம்தான்!

எங்கெங்கோ தமிழன் இருந்தாலும்
எல்லாரும் ஒன்னுன்னு கூடி நின்னோமே!
வீரம் தான் பொறப்புன்னு
பொளந்து கட்டினோமே!

வாடா ஜல்லிக்கட்டு வீரா...
களத்துல கொம்புக்கு நேரா
நிக்கிற கூட்டம்...திமிரான ஆட்டம்
ஆடுறத பாக்க கோடி சனம் கூடும்!

சீறி பாய்ஞ்சு வரும்...
சிங்கமா சிலிர்த்து வரும்...
கொம்ப சிலிப்பிக்கின்னு
எங்க காளை சுத்தி வரும்
புழுதி கிளம்புர களத்துல-கெத்தா ஜல்லிக்கட்டு நடந்து வரும்
இது எந்நாளும் எங்க தமிழ்மண்ணு!
உயிரும் தமிழும் எமக்கொன்னு!

அனைவருக்கும் தமிழர் திருநாள்
நன்றிப்பெருநாள் மாட்டுப்பொங்கல்
நன்னாள் நல்வாழ்த்துக்கள்!

#கவிஞர்_இளையபாரதி

மறையாத சூரியனோ காதல் கவிதை

மறையாத சூரியனோ
மங்காத முழுநிலவோ
தெரியவில்லை!
பெண்ணென வந்து கண்முன்னே
அழகென தோகை விரிக்கிறது
"அவள்" எனும்
பெண் மயில் விந்தையாய்!

நீ சென்ற பின் வரும்
முழு இரவையும்
முன்பகலையும்
உனை காணும் நன்பகல் வரை
முழுவதாய் வெறுக்க வைத்தாய்!

மனமெங்கும் மகிழ்பரப்பி என் எண்ணங்களையெல்லாம்
உன்னோடே இருக்கச்செய்தாய்!

கணினிக்கும் எனக்குமான
இடைவெளியில்
உன் பிம்பம் மட்டும் தெரிகிறதே!?
நீ என்ன "#Virtual_Reality"ஆ!

Mutual Friend Listல் இல்லாமல்
இன்னும் ஏன் இடைவெளி!
கண்களின்
ஒருநொடி Scanning ல்-எத்தனை ஸ்பரிசங்கள் செய்கிறாய்
தெரியுமா!

மனம்விட்டு சொல்லிடும் ஆசை
குளிர் அருவியாய் கொட்டுதடி
என் கோவிலமே!
வாழ்க்கைப் பெருந்துணையாய்
உன் கை பிடிக்கப் பார்க்கிறேன்
மறுக்காதே மயிலறகே!

இதயங்கள் இணைப்புவிழா
கொண்டாடட்டும் - வா
விழா நாயகம் ஆவோம்!

முழங்கால் மடித்து
உன் முன்னே ரோஜா நீட்டிடுவேன்
ஆனால் உன் அழகின் முன்னால்
மரணித்து விடுமே ரோஜா இனமும்!

இதோ...
என் முகநூலைப் பாரடி!
உனக்கென கவிதை படிக்கிறது!
Friend List ல் நீ இல்லை இன்னமும்!
அதனால்தான் என்காதலின்
கடிதங்கள் உன் கண்தரிசனம்
பெறவில்லை போலும்!

உன் முன்னே கடந்துபோகையில்
எப்படி சொல்லிட முடியும்
வெறும் வார்த்தைகளால்
நீ என் உயிரென!

என் கண் பாரடி கலைநிலவே!!
கண்கள் பேசிக்கொள்ளும்
நம் பெருங்காதலை!

வா... வசந்தமே...
வாழ்க்கைத்தென்றல்
வீச செய்வோம் ஒன்றாக!

#கவிஞர்_இளையபாரதி

Friday, 11 January 2019

புது காதல் மனதில்...பூவிதழாய் அவள்!

பன்னீர்த்துளி ஒன்று
ரோஜா இதழ் விட்டு
சேலை கட்டி வந்துவிட்டதோ!
பூ வாசம் தோற்றுப்போகிறது
அவளின் பெண்வாசத்தால்!

வீதியெங்கும் விரவி நிற்கும்
மகிழ் கடலின் புகழ் சேர்க்கிறாள்
பச்சை மலை தோன்றிய
நதியாய் நடை நடந்தே!

கண்கள் மூடியும்
அழகின் காட்சியாகிறாள்!
அருகம்புல் மீதமர்ந்த பனித்துளியாய்
கதிரவன் ஒளியை பிரதி எடுக்கிறாள்!

அந்த மாலைப்பொழுதில்
சிவந்த வானம்
நிரப்பி வைத்த செவ்வொளியில்
மஞ்சள் நிலவாய்
தனித்து தெரிகிறாள்!

இதழ் சிந்தும் புன்னகையால்
இதயம் எங்கும் சிதிலம் செய்தே
மனதின் தடையை
மண்பானையாய் உடைத்து எறிகிறாள்!

மங்களப்பூக்கள் சிதற
காதல் கோட்டையின்
திறப்புவிழா செய்கிறாள்!

இப்பொழுதெல்லாம்
அழைப்பிதழ் இன்றியும்
அமர்ந்து கொள்கிறாள்
இதய சிம்மாசனத்தில் - அவள்
அழைப்பிதழ் இன்றியும்
அமர்ந்து கொள்கிறாள்!

#புரியாமலே_நான்!

Saturday, 5 January 2019

ஏத்தம் எறைச்சு நாங்க...விவசாயி பாடல்

ஏத்தம் எறைச்சு நாங்க
நாட்டுப்புறப்பாட்டு படிச்சுத்தாங்க
கழனியில கதிரு வளர்த்தோம்
அடி அம்மாடி
கழனியில கதிரு வளர்த்தோம்!

கஞ்சிப்பானையில
புளிச்சத்தண்ணியத்தான்
குடிச்சிப்புட்டு
ஏறு புடிச்சோம்
அடி அம்மாடி
குடிச்சிப்புட்டு
ஏறு புடிச்சோம்!

புழுதிக்காட்டுலதான்
உழைப்பக்கொட்டிவச்சு
ஊருக்கெல்லாம்
அரிசி படைச்சோம்

காயிகனிகளோடு
பூக்கள் பழங்களுன்னு
அத்தனையும் வெளையவச்சோம்

கானக்கருங்குயிலு
காக்கைக்கிளிகளோடு
சிட்டுக்குருவிகளும்
கொத்தித்திண்ண
கண்டுமகிழ்ந்தோம்
அடி அம்மாடி
கொத்தித்திண்ண
கண்டுமகிழ்ந்தோம்!

கருக்கொண்ட மங்கையென
உருக்கொண்ட பிள்ளையென
உயர்ந்து வளர்ந்த பயிர்
மகிழ்ந்து நிறைந்த கதிர்
களம்வர தலை சுமந்தோம்
அடி அம்மாடி
களம்வர தலை சுமந்தோம்!

 நீ கண்ட பசிக்கெல்லாம்
 நான் கண்ட பொருள்தந்து
உன்னைக்காத்து நின்று
உலகை வாழவைத்த
விவசாயி
 நாங்களல்லோ
அடி அம்மாடி
விவசாயி
 நாங்களல்லோ

காலங்காலமாக
கட்டிக்காத்த நிலம்
காஞ்சு போக
மனங்களங்கிட கண்ணீர் வடிச்சோம்
அடி அம்மாடி
களங்கிட
கண்ணீர் வடிச்சோம்

ஏரி குளம் வெட்டாம
ஆறுகள இணைக்காம
 நிலத்துத்தண்ணி வத்திப்போச்சு!
வாழ்க்கை இப்போ
வானம் பார்த்த பூமியாச்சு
அடி அம்மாடி
வானம் பார்த்த பூமியாச்சு!

உழைப்புக்கேத்த
கூலியில்லை
விலை சொல்ல உரிமையில்லை
எல்லாம் இப்போ வணிகமாச்சு
ஏ வாழ்க்கையுந்தான்
கருகிப்போச்சு
அடி அம்மாடி
வாழ்க்கையுந்தான்
கருகிப்போச்சு!

எனக்கு மட்டும் ஆச்சுதுன்னு
ஏளனமா விட்டீங்கண்ணா
கணக்கு இங்கே தப்பாப்போகும்
அந்த கடவுளுக்கும் வயிறு காயும்
சும்மா விட்டுப்புட்டா
கடவுளுக்கும் வயிறு காயும்!

Wednesday, 2 January 2019

Single_Feeling - பாடல்

Loveu பண்ண ஒரு பொண்ணு வேணுமே
அன்பக்கொட்ட ஒரு ஆளு வேணுமே
டாவடிக்க ஒரு Darling வேணுமே
பேசி சிரிக்க ஒரு Figureu வேணுமே
சாமீ...நீ என்ன பண்ணுற
காமீ..கலர்புல் பொண்ணதான்...

சாமீ...நீ என்ன பண்ணுற
Single ஆகவே இருக்க வைக்குற
கண்ணுக்கு அழகா பொண்ண காட்டு நீ
என்னை பிடிக்கத்தான்
சொல்லி அனுப்பு நீ

PUB க்குள்ள நான் போகவேணுமே
போதும்... single Pass தான்
வேணும் Couple Pass தான்
காட்ட.. செம்ம mass u தான்

Text Chat எல்லாம் Waste ஆ கெடக்குது
Data Balance u வீனா போகுது
Bike u seat u மே Feel பண்ணுது
பொண்ண ஏத்த சொல்லி
Torture பண்ணுது

சாமீ...2K கிட்ஸ் எல்லாம்
love Status ஆ வெச்சு தொலைக்கிறான்
Meme போட்டுத்தான்
90s கிட்ஸவே கடுப்பு ஏத்துறான்

எங்க... எங்க... என் life u பார்ட்னரு
காட்ட சொல்லி தான்
Heart உம் பேஜார் பண்ணுதே!
சாமீ . கொஞ்சம் Favour பண்ணிவிட்டுரு
Love அ settle ஆக்கி விட்டிரு!

#Single_Feeling