உதிரம் பிரித்து கருவைத்தரித்து
உயிரில் உயிரை விதைத்து
ஒவ்வொரு நாளும்
கண்ணயரா இரவுகள் கடந்து
ஈருடல் சுமந்து
ஓருடல் பிறப்பித்த
பெரும் கடவுள் அம்மா!
தனக்கெனும் வாழ்வை
பிறர்க்கென தவத்தின்
வரமாய் கொடுத்தே
பிள்ளைகள் வளர்க்கும்
பெண்மை அவள்-அம்மா!
அன்புக்கடலில் உலவவிட்டு
மழலையின் இன்பஅலைகள்
கரைகடக்கச் செய்பவள்-அம்மா!
இடரென்று எத்தனை வந்தாலும்
அத்தனையும் தாங்கும்
அரண் என்றே முரணின்றி
முத்தங்கள் தருபவள்-அம்மா!
முற்றுப்பெறா அன்பின்
முத்தமிழ் சொல் அம்மா!
எவ்வொரு உயிரிலும்
பிறப்பை தருபவள்
தனியொரு சிறப்பை
தனக்கென அணிந்தவள்-அம்மா!
#இளையபாரதி
உயிரில் உயிரை விதைத்து
ஒவ்வொரு நாளும்
கண்ணயரா இரவுகள் கடந்து
ஈருடல் சுமந்து
ஓருடல் பிறப்பித்த
பெரும் கடவுள் அம்மா!
தனக்கெனும் வாழ்வை
பிறர்க்கென தவத்தின்
வரமாய் கொடுத்தே
பிள்ளைகள் வளர்க்கும்
பெண்மை அவள்-அம்மா!
அன்புக்கடலில் உலவவிட்டு
மழலையின் இன்பஅலைகள்
கரைகடக்கச் செய்பவள்-அம்மா!
இடரென்று எத்தனை வந்தாலும்
அத்தனையும் தாங்கும்
அரண் என்றே முரணின்றி
முத்தங்கள் தருபவள்-அம்மா!
முற்றுப்பெறா அன்பின்
முத்தமிழ் சொல் அம்மா!
எவ்வொரு உயிரிலும்
பிறப்பை தருபவள்
தனியொரு சிறப்பை
தனக்கென அணிந்தவள்-அம்மா!
#இளையபாரதி
No comments:
Post a Comment