Translate

Saturday, 9 February 2019

தீபம் யாவும் விழி மூடிப்போன - கவிதை

தீபம் யாவும் விழி மூடிப்போன
நடு இரவின் கருப்பில்
உன் நினைவு என்னில்
வெள்ளை ஒளியாய் வெளிச்சம் போட்டு
மனதின் திரையில் உந்தன் பிம்பம்
காட்டி வைக்கிறதே!

மறந்து போன நினைவின் தூண்டல்
உன்னால் தன்னால் நிகழ்கிறதே!
கண்ணால் பேசி... மனதால் பார்த்து
இதயம் நிறையும் காதல் வேண்டும்!

ஆசை வந்து
ஆளைத்தாக்கும் நேரம் யாவும்
உன் நினைப்பில்
உருகி வடியும் என் இதயவழியை
கேளடிப்பெண்ணே!

இன்னும் இன்னும் காதல் கூடும்
எந்தன் எண்ணம் யாவும்
உன்னை தேடும்!
நீ நடந்து போகும் பாதை யாவும்
பூவாய் வந்து என் இதயம் நின்று
உன்னை தாங்கும்!

ஓ! காதல் தீபம் ஏற்றும் மாலை
காற்றும் வந்து மோதிப்பார்க்கும்
தோற்றுபோயி வெட்கம் வந்து
உன் காலடியில் விழுந்து வாழும்!

மயக்குதே வானம்
மயங்குறேன் நானும்
தயக்கமே தொல்லையே - உன்னிடம் எல்லைகள் தாண்டியே
வருகுதே நினைவு யாவும்!

நீலவானம் நீந்திப்போகும்
நிலவும் கூட உன்னைக்கண்டால்
காதல் செய்ய ஏங்கிச்சாவும்!
நான் மட்டும் விதிவிலக்கா!??
உன் மீது காதல் வைத்தேவிட்டேன்!
இதோ. .இதோ. என் காதல் வரிகள்!

#இளையபாரதி

No comments:

Post a Comment