தீதற்று பிறந்திட்ட பெருந்தமிழே!
பெரும்புகழ் சேர்த்து
வாழ்கின்ற செந்தமிழே...!
இளமை மாறா முதுமை நிறைந்த
மூத்த மொழியே!
மொழிகளின் பேரன்னையே!
நற்சுவை நவிழும் நூல்களின்
நல்சுனையே!
பிரிவற்று பேதங்கள் களைந்து
அறம் கொண்ட அன்புக்கரம் நீட்டும்
இயற்கையோடு இணைந்த தமிழே
புகழ் வணக்கம்!
தமிழ் ஈன்ற திருமகனே!
நல்தடம் பதித்த பெருந்தலைவா!
தமிழன்னை கவிஅணிகள் புனைந்திட கற்பனை சுரங்கம் திறந்தவா!
இக்கவிப்பேரரங்கம் சிறந்திட
தலைமை ஏற்ற பெருந்தகையே
தமிழ் வணக்கம்!
பறந்த பேரவை நிறைந்த தமிழ்ச்சொந்தங்களே!
முத்தமிழ்பால் உயிரிணைத்து
முக்கனித்தமிழ் சுவை பருக
எத்தனித்த பேரவா கொண்டு
கவி அரங்கம் விரவி இருக்கும்
நற்றமிழ் புதல்வர்களே!
இக்கவியின் நல் வணக்கங்கள்!
மகத்துவம் கொண்ட மானுட வாழ்வில் நற்பெயர் பெற்று உயர்ந்திட
அடியேன் எடுத்துரைக்கும்
பெரும் பொருள்-முயற்சி!
எத்தனை இன்பதுன்பங்கள்
எதிர்பட்டாலும் அத்தனையும்
வீழ்த்தி அடியெடுத்து வைக்கும்
பேராற்றல் முயற்சிக்கு மட்டுமே உண்டு!
அறிய பேரறிவு பெற்றாலும்
திண்ணிய திறமைகள் கொண்டாலும்
எண்ணியபடியே இலக்கினை
முயற்சியற்று முடித்தவர் எவருளர்!?
பெரும்பாறையிடத்து ஒரு வித்தும்
நல்நிலமதில் ஒரு வித்தும்
விழுந்த போதும்
நன்னிலமே நான் கொண்டேன் என
சோம்பல் கொண்ட வித்தது(வித்து+அது)
சூம்பி மடிந்த கதை உண்டு!
இடர்பட்டேனும் இன்னமும்
என்னுயிர் பிறந்தெழும் எனும்
திண்ணம் கொண்ட விதை ஒன்றில்
பெரும் முயற்சியால் முட்டி
பாறை இடுக்குகள் உடைத்து
எழுந்து நிமிர்ந்த செடி சொல்லும் முயற்சியே...வெற்றிகள் குவிக்க வல்லதென்று!
நல்லதே பணமும், திறமையும்
உழைப்பும் என்றாலும் இவை
உறங்கிப்போகிடின் ஏது பலன்!?
இவை இல்லா மனிதனும்
புதிதுபுதிதென முயன்று
தோற்றாலும் அது தரும் கற்பிதம்
செய்திடுமே அற்புதம்!
அரிய பெரும் சாதனைகள்
கண்டுபிடிப்புகள் அத்தனையும்
விளைந்தது இடைவிடா முயற்சியினால்
தானன்றி வேறெதில்!
திறமை கொண்டும் அதை வெளிக்காட்டும் முயற்சியற்றோர்
வாழ்வில் முன்னேறி வருதல் என்பது
இலக்கின் எதிர்திசையில்
விரைந்து செல்லும் பரியின்
நிலையாகும்!
ஒரு போதும் உயர்வை நல்கிடாது!
உழைத்து முடித்தவன்
உடல் வியர்வை என
முயற்சி செய்பவன்
திசை எங்கும் வெற்றிகள் முளைக்கும்!
புது சக்திகள் பிறக்கும்!
முயற்சி என்பது
நெஞ்சத்தில் இருந்திட
புகைவண்டி இயக்கிட உதவும்
நிலக்கரி தீயென
மனிதன் சக்திகள் பெற்றே
வெற்றிகள் குவித்து
வாழ்வில் நிலையான உயரத்தை அடைவான் என்றே கவிபாடி
நல்லதோர் வாய்ப்பை
பொன்மாலைப் பொழுதில் நல்கி
தமிழோடு நம்மை உறவாட செய்த
கவியரங்க ஏற்பாட்டாளர்களுக்கும்,
சீரிய தலைமையாய் நின்று
திறம்பட கவிகளின்
நன்மொழிகள் ஒலித்திட செய்த நடுவர்
அவர்களுக்கும்,
கதிர் நிலத்தே விளைந்த பயிரில்
முத்தெது...பதரெது...என்று
கண்டுணரும் பேராற்றல் கொண்டோராய்
பாடிய கவிகளின் தரம் அறிந்து
நல்சுவை பருகிடும்
பார்வையாளர்களுக்கும்
உயிர் தொட்டு யாவுமாய் என்னுள்
நிறைந்திட்ட தாய்த்தமிழுக்கும்
அடியேனின் அன்பு கலந்த
நன்றியும்...வணக்கங்களும்!
#கவிஞர்_இளையபாரதி_ஹரிஹரன்
பெரும்புகழ் சேர்த்து
வாழ்கின்ற செந்தமிழே...!
இளமை மாறா முதுமை நிறைந்த
மூத்த மொழியே!
மொழிகளின் பேரன்னையே!
நற்சுவை நவிழும் நூல்களின்
நல்சுனையே!
பிரிவற்று பேதங்கள் களைந்து
அறம் கொண்ட அன்புக்கரம் நீட்டும்
இயற்கையோடு இணைந்த தமிழே
புகழ் வணக்கம்!
தமிழ் ஈன்ற திருமகனே!
நல்தடம் பதித்த பெருந்தலைவா!
தமிழன்னை கவிஅணிகள் புனைந்திட கற்பனை சுரங்கம் திறந்தவா!
இக்கவிப்பேரரங்கம் சிறந்திட
தலைமை ஏற்ற பெருந்தகையே
தமிழ் வணக்கம்!
பறந்த பேரவை நிறைந்த தமிழ்ச்சொந்தங்களே!
முத்தமிழ்பால் உயிரிணைத்து
முக்கனித்தமிழ் சுவை பருக
எத்தனித்த பேரவா கொண்டு
கவி அரங்கம் விரவி இருக்கும்
நற்றமிழ் புதல்வர்களே!
இக்கவியின் நல் வணக்கங்கள்!
மகத்துவம் கொண்ட மானுட வாழ்வில் நற்பெயர் பெற்று உயர்ந்திட
அடியேன் எடுத்துரைக்கும்
பெரும் பொருள்-முயற்சி!
எத்தனை இன்பதுன்பங்கள்
எதிர்பட்டாலும் அத்தனையும்
வீழ்த்தி அடியெடுத்து வைக்கும்
பேராற்றல் முயற்சிக்கு மட்டுமே உண்டு!
அறிய பேரறிவு பெற்றாலும்
திண்ணிய திறமைகள் கொண்டாலும்
எண்ணியபடியே இலக்கினை
முயற்சியற்று முடித்தவர் எவருளர்!?
பெரும்பாறையிடத்து ஒரு வித்தும்
நல்நிலமதில் ஒரு வித்தும்
விழுந்த போதும்
நன்னிலமே நான் கொண்டேன் என
சோம்பல் கொண்ட வித்தது(வித்து+அது)
சூம்பி மடிந்த கதை உண்டு!
இடர்பட்டேனும் இன்னமும்
என்னுயிர் பிறந்தெழும் எனும்
திண்ணம் கொண்ட விதை ஒன்றில்
பெரும் முயற்சியால் முட்டி
பாறை இடுக்குகள் உடைத்து
எழுந்து நிமிர்ந்த செடி சொல்லும் முயற்சியே...வெற்றிகள் குவிக்க வல்லதென்று!
நல்லதே பணமும், திறமையும்
உழைப்பும் என்றாலும் இவை
உறங்கிப்போகிடின் ஏது பலன்!?
இவை இல்லா மனிதனும்
புதிதுபுதிதென முயன்று
தோற்றாலும் அது தரும் கற்பிதம்
செய்திடுமே அற்புதம்!
அரிய பெரும் சாதனைகள்
கண்டுபிடிப்புகள் அத்தனையும்
விளைந்தது இடைவிடா முயற்சியினால்
தானன்றி வேறெதில்!
திறமை கொண்டும் அதை வெளிக்காட்டும் முயற்சியற்றோர்
வாழ்வில் முன்னேறி வருதல் என்பது
இலக்கின் எதிர்திசையில்
விரைந்து செல்லும் பரியின்
நிலையாகும்!
ஒரு போதும் உயர்வை நல்கிடாது!
உழைத்து முடித்தவன்
உடல் வியர்வை என
முயற்சி செய்பவன்
திசை எங்கும் வெற்றிகள் முளைக்கும்!
புது சக்திகள் பிறக்கும்!
முயற்சி என்பது
நெஞ்சத்தில் இருந்திட
புகைவண்டி இயக்கிட உதவும்
நிலக்கரி தீயென
மனிதன் சக்திகள் பெற்றே
வெற்றிகள் குவித்து
வாழ்வில் நிலையான உயரத்தை அடைவான் என்றே கவிபாடி
நல்லதோர் வாய்ப்பை
பொன்மாலைப் பொழுதில் நல்கி
தமிழோடு நம்மை உறவாட செய்த
கவியரங்க ஏற்பாட்டாளர்களுக்கும்,
சீரிய தலைமையாய் நின்று
திறம்பட கவிகளின்
நன்மொழிகள் ஒலித்திட செய்த நடுவர்
அவர்களுக்கும்,
கதிர் நிலத்தே விளைந்த பயிரில்
முத்தெது...பதரெது...என்று
கண்டுணரும் பேராற்றல் கொண்டோராய்
பாடிய கவிகளின் தரம் அறிந்து
நல்சுவை பருகிடும்
பார்வையாளர்களுக்கும்
உயிர் தொட்டு யாவுமாய் என்னுள்
நிறைந்திட்ட தாய்த்தமிழுக்கும்
அடியேனின் அன்பு கலந்த
நன்றியும்...வணக்கங்களும்!
#கவிஞர்_இளையபாரதி_ஹரிஹரன்
No comments:
Post a Comment