என் மேல் பாசம் கொண்டு,
அதிகம் ஊக்கப்படுத்தும் #பெரியம்மாவின்
வேண்டுகோளுக்கு இணங்க
எழுதிய வரிகள்
#காந்தியடிகள்!
ஒற்றை துணியில்
நாட்டின் மானம் காத்து நின்றவர்!
எரியும் தீயின் நடுவே
அகிம்சை மெழுகை பார்த்துக்கொண்டவர்!
ஆயுதங்கள் உரசும் சண்டையில்
அன்பைப்பேசி தனித்து நின்றவர்!
போர்கள் ஓய்ந்து போகும்-சிந்தும்
ரத்தம் காய்ந்து போகும்
அன்பு மட்டுமே
உயிரின் ஆழம் பாய்ந்து
நாளும் வாழும் எனும்
தத்துவத்தில் வாழ்வை
அமைத்து தேசத்தந்தை ஆனவர்!
பொய்மை மறுத்து
மெய்யியலில் ஆட்சி செய்தவர்!
உலகப்பந்தில் இந்தியத்தின் சுதந்திரத்தை
வென்று வைத்தவர்!
எந்த நாளும் நம்மில்
புகழால் மறையாது
வாழ்ந்து கொண்டிருப்பவர்...!
அன்னை தேசத்து தந்தையானவர்
அனைவருக்கும் தாத்தா
எனும் உறவு தந்தவர்
காந்தியடிகள்!
பெருமையும் பெருமைப்படும்
அருமையானவர்-
அண்ணல் காந்தியடிகள்!
அதிகம் ஊக்கப்படுத்தும் #பெரியம்மாவின்
வேண்டுகோளுக்கு இணங்க
எழுதிய வரிகள்
#காந்தியடிகள்!
ஒற்றை துணியில்
நாட்டின் மானம் காத்து நின்றவர்!
எரியும் தீயின் நடுவே
அகிம்சை மெழுகை பார்த்துக்கொண்டவர்!
ஆயுதங்கள் உரசும் சண்டையில்
அன்பைப்பேசி தனித்து நின்றவர்!
போர்கள் ஓய்ந்து போகும்-சிந்தும்
ரத்தம் காய்ந்து போகும்
அன்பு மட்டுமே
உயிரின் ஆழம் பாய்ந்து
நாளும் வாழும் எனும்
தத்துவத்தில் வாழ்வை
அமைத்து தேசத்தந்தை ஆனவர்!
பொய்மை மறுத்து
மெய்யியலில் ஆட்சி செய்தவர்!
உலகப்பந்தில் இந்தியத்தின் சுதந்திரத்தை
வென்று வைத்தவர்!
எந்த நாளும் நம்மில்
புகழால் மறையாது
வாழ்ந்து கொண்டிருப்பவர்...!
அன்னை தேசத்து தந்தையானவர்
அனைவருக்கும் தாத்தா
எனும் உறவு தந்தவர்
காந்தியடிகள்!
பெருமையும் பெருமைப்படும்
அருமையானவர்-
அண்ணல் காந்தியடிகள்!
No comments:
Post a Comment