Translate

Saturday, 21 September 2019

வெள்ளந்தி சிரிப்பா...? கவிதை

வெள்ளந்தி சிரிப்பா...?
வெளையாட்டு முறைப்பா...?
தாலாட்டும் பேச்சா...?
தலைகோதும் விரலா...?
எதை வைத்து எனை
எட்டிப்பிடிக்கிறாய்
விடாது நெருப்பாய்!

ஓ...இன்னும் இருக்கிறதோ ரகசியம்!?
இந்த உலகத்து அதிசயம் நீயான பின்பு!
முன்போல் முத்தங்கள் கேட்காமல்
இல்லை நீ இப்போதெல்லாம்!

அப்போதெல்லாம்...
அசட்டு சிரிப்பை
உதட்டு தேனில் குழைத்து
சகட்டு மேனியாய்
ஊட்டிவிடுகிறாய் முத்தகளின் வழி!
விழி பிதுங்குகிறேன் நான்!
வியர்வை மழை பொழிவதினால்!

#கவிஞனோ_நான்!???
#உன்_காதல்_சொல்லும்_போதெல்லாம்!

#இளையபாரதி

No comments:

Post a Comment