#வாழ்க_நீ_எம்மான்
தேசம் முழுவதும்
நேசம் கொண்ட பெரும் மனிதர்!
மனித ஆத்மாக்கள்
அடைந்திட முடியாத மகாத்மா!
சுதந்திரக்காற்று சிறைபட்ட நேரத்தே
வெகுண்டெழுந்த அகிம்சா மூர்த்தி!
அரிச்சந்திரன் வழியே
பொய்யுரையா பெருந்தகை!
ஆயுதக் காட்டிலும்
அன்புச்செடி வளர்த்தவர்
அடிமை விலங்கை
அறத்தால் பிளந்தவர்!
மதங்கள் கடந்தும்
மனிதம் நிறை(த்)ந்தவர்!
இந்தியத்தாய்க்கும் தந்தையானவர்
சிந்தை முழுவதும் அகிம்சை நிறைந்தவர்!
எதிரிகள் ஆண்டபோதும்
இரும்பென சுழன்றவர்
சுதந்திர நாட்டில்
சுடப்பட்டு மாண்டவர்!
இறக்கும் தருணத்திலும்
எத்தனை இனியவர்?!
குண்டுகள் தந்த
கோட்ஸேவுக்கும்
கருணை தந்தவர்!
இன்னொரு பிறப்பு
இவர்போல்
இறைவனுக்கும்
சாத்தியமில்லை!
இந்நாள் மறைந்திட்ட
அண்ணல் நினைவுகள்
அனைவரும் போற்றுவோம்!
அவர்போல் அணுவேணும்
வாழ்ந்திட
பெரும்முயற்சி
செய்திடுவோம்!
தேசம் முழுவதும்
நேசம் கொண்ட பெரும் மனிதர்!
மனித ஆத்மாக்கள்
அடைந்திட முடியாத மகாத்மா!
சுதந்திரக்காற்று சிறைபட்ட நேரத்தே
வெகுண்டெழுந்த அகிம்சா மூர்த்தி!
அரிச்சந்திரன் வழியே
பொய்யுரையா பெருந்தகை!
ஆயுதக் காட்டிலும்
அன்புச்செடி வளர்த்தவர்
அடிமை விலங்கை
அறத்தால் பிளந்தவர்!
மதங்கள் கடந்தும்
மனிதம் நிறை(த்)ந்தவர்!
இந்தியத்தாய்க்கும் தந்தையானவர்
சிந்தை முழுவதும் அகிம்சை நிறைந்தவர்!
எதிரிகள் ஆண்டபோதும்
இரும்பென சுழன்றவர்
சுதந்திர நாட்டில்
சுடப்பட்டு மாண்டவர்!
இறக்கும் தருணத்திலும்
எத்தனை இனியவர்?!
குண்டுகள் தந்த
கோட்ஸேவுக்கும்
கருணை தந்தவர்!
இன்னொரு பிறப்பு
இவர்போல்
இறைவனுக்கும்
சாத்தியமில்லை!
இந்நாள் மறைந்திட்ட
அண்ணல் நினைவுகள்
அனைவரும் போற்றுவோம்!
அவர்போல் அணுவேணும்
வாழ்ந்திட
பெரும்முயற்சி
செய்திடுவோம்!
No comments:
Post a Comment