Translate

Saturday, 21 September 2019

ஒருவார்த்தை சொன்னால் போதும் கவிதை

ஒருவார்த்தை சொன்னால் போதும்
உயிர் வேண்டும்...என்றால் கூட
உனக்காக நான் தருவேனே!
ஒரு பார்வை பார்த்தால் போதும்
பெரும்காதல் பகிர்ந்துடுவேனே!

பெண்ணே...நீ!
எந்நாளும்... என் வாழ்வில்...
மகிழ்பூக்கள் தூவும் மாமழை!
மனதோடு சிலிர்க்கும் பேரலை!

ஒரு விரலில் உலகத்தை தூக்கி
உனக்கென நான் தருவேன்!
உன் அன்பில் கறைந்துறுகி
உருவங்கள் நான் தொலைப்பேனே!

என்னோடு...நீ!
உன்னோடு நான்!
நம்மோடு நாம்!
ஆகாகா...ஆனந்தபூ மழை!

#இளையபாரதி

No comments:

Post a Comment