நீயின்றி நானிங்கே ஏதம்மா
உன் நினைவின்றி என் நெஞ்சம் வாழுமா
அன்பின்றி போகும் உயிர்கள் யாவும் உயிரின்றி வாழும் உருவம் தானே
தாயன்பை பெற்ற பிள்ளைகள் யாவும்
தவமின்றி அடையும்
வரம்தான் வாழ்க்கை!
உன் அன்பில் உலவும்
ஓராயிரம் கோடி...அர்த்தங்கள் யாவும்
தாய்மையின் பெருமை பேசுமே..!
என் போன்ற பிள்ளை
உன் முன்னே நிற்க
இன்னமும் நெஞ்சம் ஏங்குமே!
பசியென்ற ஒன்று...
இல்லாத போதும்
தாய்ப்பாலை தந்த தெய்வம் நீ...!
எனைக்காக்க...
இரவென்றும் பகலென்றும்-நீ
உறங்காத பொழுதுகள்
இன்னும் இங்கே நீளுதே!
அந்த நிலையிங்கு
இனியேதும் போதுமே...!
என்மடி உனையே
இனி எப்போதும் தாங்குமே!
உன் தந்தை போலே...
உன் அண்ணன் போலே..
உன்பிள்ளை...
உனைநான் தாங்குவேன்...
அது ஒன்றே போதும்
எப்போதும் இன்பத்தில் இயங்குவேன்...!
உன்பசி தீர்த்து...
என் உணவுகள் தீரட்டும்...
உன் அன்பில்...
எந்தன் வாழ்விங்கே...
வாழட்டும்!
#இளையபாரதி
உன் நினைவின்றி என் நெஞ்சம் வாழுமா
அன்பின்றி போகும் உயிர்கள் யாவும் உயிரின்றி வாழும் உருவம் தானே
தாயன்பை பெற்ற பிள்ளைகள் யாவும்
தவமின்றி அடையும்
வரம்தான் வாழ்க்கை!
உன் அன்பில் உலவும்
ஓராயிரம் கோடி...அர்த்தங்கள் யாவும்
தாய்மையின் பெருமை பேசுமே..!
என் போன்ற பிள்ளை
உன் முன்னே நிற்க
இன்னமும் நெஞ்சம் ஏங்குமே!
பசியென்ற ஒன்று...
இல்லாத போதும்
தாய்ப்பாலை தந்த தெய்வம் நீ...!
எனைக்காக்க...
இரவென்றும் பகலென்றும்-நீ
உறங்காத பொழுதுகள்
இன்னும் இங்கே நீளுதே!
அந்த நிலையிங்கு
இனியேதும் போதுமே...!
என்மடி உனையே
இனி எப்போதும் தாங்குமே!
உன் தந்தை போலே...
உன் அண்ணன் போலே..
உன்பிள்ளை...
உனைநான் தாங்குவேன்...
அது ஒன்றே போதும்
எப்போதும் இன்பத்தில் இயங்குவேன்...!
உன்பசி தீர்த்து...
என் உணவுகள் தீரட்டும்...
உன் அன்பில்...
எந்தன் வாழ்விங்கே...
வாழட்டும்!
#இளையபாரதி
No comments:
Post a Comment