மனசுக்குள் ஆயிரம் பூக்களே
உன்பேர் சொல்லி தினமும் பூக்குதே
கை மடிப்புக்குள்
மறைத்திட்ட நினைவுகள்
கடல் அலையென திமிறி கிளம்புதே
ஒருவித உணர்வுகள் உயிரிலே
உனை மட்டும் உணர்ந்து கொள்ளுதே
அதைவிட பெரிதென ஏதுமே
எனக்கெதும் இருந்திடவில்லையே...
அரைநொடி பிரிவின் தவிப்பிலே
பனியென உறைந்து போகிறேன்
புதிதொரு உலகத்தின் வானத்தை
உன் கண்களால் திறந்து பார்க்கிறேன்
இனிமைகள் உலவிடும் இதயத்தில்
மேகமாய் நானே படர்கிறேன்
இதழது பேசும் மொழியிலே
நதியென தேன்சுவை கிளம்புதே
பெண்மையின் சாரலில் நனைகிற
மீசையின் ஆசைகள் புனிதமே
இறுக்கியும் அணைக்கும் நேரத்தில்
இறகுகள் உரசிடும் மென்மைதான்
ஆண்மனம் நீட்டிய கரங்களில்
பெண்மையும் சுகமாய் உளவுதே
இதுவரை யாவும் காதலே
இனியும் அதுதான் காதலே!
#நள்ளிரவு
#புதுநினைவு
#ஒரு_கவிதை
#இளையபாரதி
உன்பேர் சொல்லி தினமும் பூக்குதே
கை மடிப்புக்குள்
மறைத்திட்ட நினைவுகள்
கடல் அலையென திமிறி கிளம்புதே
ஒருவித உணர்வுகள் உயிரிலே
உனை மட்டும் உணர்ந்து கொள்ளுதே
அதைவிட பெரிதென ஏதுமே
எனக்கெதும் இருந்திடவில்லையே...
அரைநொடி பிரிவின் தவிப்பிலே
பனியென உறைந்து போகிறேன்
புதிதொரு உலகத்தின் வானத்தை
உன் கண்களால் திறந்து பார்க்கிறேன்
இனிமைகள் உலவிடும் இதயத்தில்
மேகமாய் நானே படர்கிறேன்
இதழது பேசும் மொழியிலே
நதியென தேன்சுவை கிளம்புதே
பெண்மையின் சாரலில் நனைகிற
மீசையின் ஆசைகள் புனிதமே
இறுக்கியும் அணைக்கும் நேரத்தில்
இறகுகள் உரசிடும் மென்மைதான்
ஆண்மனம் நீட்டிய கரங்களில்
பெண்மையும் சுகமாய் உளவுதே
இதுவரை யாவும் காதலே
இனியும் அதுதான் காதலே!
#நள்ளிரவு
#புதுநினைவு
#ஒரு_கவிதை
#இளையபாரதி
No comments:
Post a Comment