ஆகா.. இது மாலை நேரம்
ஆகா.. மழை பொழியும் காலம்
ஓகோ...மனம் உன்னை தேடும்
நீயும்... என் நெஞ்சம் பாயும்...பேரலை!
வாடா என் விண்மீன் வீரா
நேரா நீ என்னை சேரடா
காதல்... அது என்னில் பூக்கவே
விதையென விழுகிற
உன் பிம்பம் பேரின்பம்!
என் புடவையில் உந்தன் வாசமும்
ஒரு மடிப்பினில் உன் மீசைமுடிகளும்
இதயத்தில் பல ஆசை நொடிகளும்
இருந்திட எண்ணம் தோன்றுதே!
உன் தோள்களில்
நான் சாயும் வேளையில்...
புன்னகை...அது பூக்கும் பார்வையில்
நினைவுகள் அது நிலவின் ஓரத்தில்
நாம் மட்டும் தொலைந்து போகிறோம்!
என் மௌனங்கள்...உந்தன் புரிதலில்
என் அழுகைகள் உந்தன் மடியினில்...
என் மகிழ்வுகள் உந்தன் மனதினில்...
என் தாய்மையும் உந்தன் ஆண்மையில்...
என் தனிமைகள் உந்தன் இரவினில்...
இது யாவும் போதும்...
இனி உலகமே உனக்கென சுழலுமே!
என் தந்தையாய் நீயே இருந்திட
என் தோழனாய் நீயும் வாழ்ந்திட
என்னை நான்...எங்குமே... தொலைக்கவில்லை!
கடற்கரை..நாம் பேசி கழித்திட...
கடல் அலை...நம்மை பார்த்து ரசித்திட...
பறவைகள் நம் தோளில் அமர்ந்திட...
மழலையாய்.. மாறியே போகிறோம்!
#இளையபாரதி
ஆகா.. மழை பொழியும் காலம்
ஓகோ...மனம் உன்னை தேடும்
நீயும்... என் நெஞ்சம் பாயும்...பேரலை!
வாடா என் விண்மீன் வீரா
நேரா நீ என்னை சேரடா
காதல்... அது என்னில் பூக்கவே
விதையென விழுகிற
உன் பிம்பம் பேரின்பம்!
என் புடவையில் உந்தன் வாசமும்
ஒரு மடிப்பினில் உன் மீசைமுடிகளும்
இதயத்தில் பல ஆசை நொடிகளும்
இருந்திட எண்ணம் தோன்றுதே!
உன் தோள்களில்
நான் சாயும் வேளையில்...
புன்னகை...அது பூக்கும் பார்வையில்
நினைவுகள் அது நிலவின் ஓரத்தில்
நாம் மட்டும் தொலைந்து போகிறோம்!
என் மௌனங்கள்...உந்தன் புரிதலில்
என் அழுகைகள் உந்தன் மடியினில்...
என் மகிழ்வுகள் உந்தன் மனதினில்...
என் தாய்மையும் உந்தன் ஆண்மையில்...
என் தனிமைகள் உந்தன் இரவினில்...
இது யாவும் போதும்...
இனி உலகமே உனக்கென சுழலுமே!
என் தந்தையாய் நீயே இருந்திட
என் தோழனாய் நீயும் வாழ்ந்திட
என்னை நான்...எங்குமே... தொலைக்கவில்லை!
கடற்கரை..நாம் பேசி கழித்திட...
கடல் அலை...நம்மை பார்த்து ரசித்திட...
பறவைகள் நம் தோளில் அமர்ந்திட...
மழலையாய்.. மாறியே போகிறோம்!
#இளையபாரதி
No comments:
Post a Comment