வானத்து மேகங்களே...
வாழ்த்துக்கள் தூவுங்களே...
வார்த்தைகள் தீருமோ...
வான் நிலா போதுமோ...
அவளிடம் காதலை சொல்லியே
செல்லுதே பனிக்காற்று!
அவள்...
முகமெல்லாம் வெட்கங்கள் படருதே...!
கண்களும் மெல்லமாய் பார்க்குதே...! பருவத்தின் பறவைகள்...
யாரிடம் அனுமதி கேட்டு நிற்கும்...!??
ஓ!
சிறகையே... திறந்துதான்
பறந்து செல்லும்...!
புது உலகையே கடந்துமே
கால்கள் செல்லும்...
காதலின் ஊட்டங்கள்...
அளவிலா நாட்டங்கள்...
அவளது மொழிகளின் மீதிலே!
முதல் முறை பார்க்கிறேன்...
முகிலென்று வியக்கிறேன்...
அகில் போலே...
அவள் வாசம்...
நாசிகள் துளைக்குதே!
நான் எனை மறந்துதான்
அவளிடம் கறைகிறேன்
அனுமதி கேட்காமல்
வெகுமதி கொடுக்கிறாள்!
புன்னகை மொழியிலே
முத்தங்கள் தருகிறாள்!
அவள்...அவள்...
இனி...
என் வாழ்க்கை...!
அது யாவுமே
இனி அவள்...அவள்...மட்டுமே...
மலருதே காதலும்...
மறுமொழி தேவையா!
கண்கள் தான்
பேசிக்கொண்டு விட்டனவே!
23.07.2019
#மீண்டும்... #மீண்டும்
#எழுகிறேன்
வாழ்த்துக்கள் தூவுங்களே...
வார்த்தைகள் தீருமோ...
வான் நிலா போதுமோ...
அவளிடம் காதலை சொல்லியே
செல்லுதே பனிக்காற்று!
அவள்...
முகமெல்லாம் வெட்கங்கள் படருதே...!
கண்களும் மெல்லமாய் பார்க்குதே...! பருவத்தின் பறவைகள்...
யாரிடம் அனுமதி கேட்டு நிற்கும்...!??
ஓ!
சிறகையே... திறந்துதான்
பறந்து செல்லும்...!
புது உலகையே கடந்துமே
கால்கள் செல்லும்...
காதலின் ஊட்டங்கள்...
அளவிலா நாட்டங்கள்...
அவளது மொழிகளின் மீதிலே!
முதல் முறை பார்க்கிறேன்...
முகிலென்று வியக்கிறேன்...
அகில் போலே...
அவள் வாசம்...
நாசிகள் துளைக்குதே!
நான் எனை மறந்துதான்
அவளிடம் கறைகிறேன்
அனுமதி கேட்காமல்
வெகுமதி கொடுக்கிறாள்!
புன்னகை மொழியிலே
முத்தங்கள் தருகிறாள்!
அவள்...அவள்...
இனி...
என் வாழ்க்கை...!
அது யாவுமே
இனி அவள்...அவள்...மட்டுமே...
மலருதே காதலும்...
மறுமொழி தேவையா!
கண்கள் தான்
பேசிக்கொண்டு விட்டனவே!
23.07.2019
#மீண்டும்... #மீண்டும்
#எழுகிறேன்
No comments:
Post a Comment