Translate

Saturday, 21 September 2019

உன் பாதம் படருதே கவிதை

உன் பாதம் படருதே
என் நெஞ்சம் மலருதே
வாராய் கண்மணியே!
பெண் பூவாய் பூத்தவள்
தேன்கனிகள் காய்த்தவள்!

அன்பே...நீ நிஜமாகிறாய்!
நீண்ட கடலாகிறாய்!
பெய்யும் மழையாகிறாய்!
பொழியும் துளியாகிறாய்
நடந்து நீ சென்றுதான் நதியாகிறாய்!

மீண்டும்...மீண்டும்
பெண்ணின் ஸ்பரிசம்
வேண்டும் என்றே
கேட்கும் மனதில்
மாயங்கள் நீ செய்கிறாய்!

நாணலே... நாணலும்...
நாணிதான் போகுதே...!
விழிகளில் விழுந்த நான்
எழுந்து போக பார்க்கிறேன்!
இருந்து வாழும் வரங்கள் தந்து
என்னை உன்னில் சேர்க்கிறாய்!

யாரடி...பூங்குயில்!??
இது உன் ராகமா!??
நீயும் சொல்வாயமா!!!
என்னை வெல்வாயமா!

காற்றிலே தவழ்கிறேன்...
காதலாய் மகிழ்கிறேன்...
உன் நெஞ்சமா...அது என் தஞ்சமா...!??
ஆஹ..ஹா...ஆனந்தம்
சென்னை மழை போலவே
என்னை வந்து சேருதே...!

#கடினம்
#மீள்

No comments:

Post a Comment