Translate

Saturday, 21 September 2019

ஒரு பூவில் பலவாசம் கண்டேன் - கவிதை

ஒரு பூவில் பலவாசம் கண்டேன்
உன்மடியில் தலைசாய
நான் ஆசை கொண்டேன்
யாதொரு பொழுதுமே
உன் நினைவு நெஞ்சில்!
வேறொரு மனிதனாய்
நான் உணர்ந்து கொண்டேன்!

இனிதொரு தருணம்
நீ இருந்தால் மட்டும்!
நீ இல்லா நிமிடங்கள் தனிமையில்
நான் மாட்டிக்கொண்டேன்!

தலைக்கவசம் அணிந்தே
சாலையில் சென்றேன்
உன் நினைவு வர
ஓரமாய் நின்றேன்!

உன் முகம் நினைத்து
நான் சிரித்து சென்றேன்...
போலீசுகாரனும் எனை
பித்தனாய் பார்த்தான்!

புது புது கனா...
இப்போது என்னில்...
நீ அழைப்பில்
வந்தாய் செல்போன் எண்ணில்...
வேறென்ன வேண்டும்...
உன் பேச்சு போதும்...
பொழுதென்ன ஆச்சென்ற
அச்சங்கள் தீரும்!

No comments:

Post a Comment