Translate

Saturday, 21 September 2019

என் இதயத்தின் ஓசை கவிதை

என் இதயத்தின் ஓசை
நீ பேசும் பாசை அது
எப்போதும் இனிதாகும்
உணர்வாலே உருவாகும்
ஒரு காதல் வரமாகும்!

வரும் போகும் நிமிடங்கள்
உன் நினைவாலே புதிதாகும்!
பயணங்கள் தொடர்ந்தாலும்
பாதைகள் கரைந்தாலும்
உன் கரம் கோர்த்து இருந்தாலே
காலங்கள் வரமாகும்!

அழகான மொழியாவும்
உன் பேச்சு என்றாகும்!
பிறக்கின்ற பூவெல்லாம்
உனக்கே என்றாகும்!

அழகியே...நாம் பழகியே
பார்க்கின்ற தருணங்கள்
மனமெங்க்கும் மகிழ்கொட்டும்!

No comments:

Post a Comment