காதலர்கள் பேசிக்கொள்வதாக!
#தொலைவு!
என்னுயுரே!
எத்தனையோ கிலோமீட்டர்கள் கடந்து நாம் இருந்த போதெல்லாம்
நான் உணரவில்லை
நீ தொலைவில் இருப்பதாய்!
இப்போது உணர்கிறேன்
நீ அருகில் இருந்தும்
உன் மூச்சுக்காற்று
படாத நேரங்களில்!
எல்லைகள் தூரம் என்றாலும்
இதயங்கள் இணைந்திருந்தால்
தொலைவென்று இங்கேது!
நெடுந்தொலைவுகள் கடந்தும்
கால்கள் ஓயவில்லை
உனைக்காணும் தேடலில்!
மனங்கள் பேசிக்கொள்ள
விட்டுவிடுவோமே!
தூரங்கள் இனி ஏது!?
அலைகள் அடித்து
ஓய்ந்துவிடவா போகிறது
கரையின் மீதான கடலின் காதல்!?
ஏன் இடைவெளி...?
நமக்கிடையேயான
சில மில்லிமீட்டர் தூரம் கூட
எனக்கு பெரும் தொலைவுகள் தான்!
வா... அன்பே அருகில்!
தொலைவுகள் இனியேது!
#தொலைவுகள்_தொலையட்டுமே!
No comments:
Post a Comment